செவ்வாய், 8 நவம்பர், 2022

*உலகம் என்ற நாடகமேடை..!!*

புலர்கின்ற பொழுதெல்லாம் 
மலர்ந்தாடும் மலர்களென.. !!

மலர்ந்தாடும் மனதினிலே 
உலர்ந்தோடும் நினைவுகள்..!! 

ஒவ்வொரு நாளும் 
ஒவ்வொரு வேடம்..!! 

ஒப்பனைகளை மாற்றியே 
காலங்கள் ஓடும்..!! 

காலங்கள் கொடுக்கும் 
கதாபாத்திர மேற்றே..!!   

சிலநேரம் கோமாளியாய் 
பலநேரம்  ஏமாளியாய்..!!!  


முகமூடியுடன் சிலநேரம் 
முகமூடியற்று பலநேரம்..!!  

நடிக்கின்றோமே *உலகமென்ற* 
*நாடக மேடையில்..!!*

S.KALADEVI  II- Bsc CS   KSRCASW

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக