வியாழன், 10 ஆகஸ்ட், 2017

பச்சை மிளகாய் என்றால் கொஞ்சம் பயம் உண்டு நம் வீட்டு ஆட்களுக்கும் சரி பிள்ளைகளும்
சரி ஏன் என்றால் அதில் இருக்கும் காரம், ஆனால்
வட மாநிலங்களில் பச்சை மிளகாய்ப் உணவில் சரிபதியாக சேர்த்து கொள்வதால் என்னவெ வலிமையும் நிறைந்து இருக்கிறார்கள், சரி அதில் இருக்கும் பயன்களை பார்ப்போம்.
நாம் உணவில் சேர்த்துக் கொள்ளும் பச்சை மிளகாயில் வைட்டமின் ஏ, சி, கே மற்றும் கேப்சைசின் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.
உணவில் காரத்திற்காக சேர்க்கப்படும் பச்சை மிளகாய் கூட கொழுப்புகளை கரைத்துவிடும் தன்மைக் கொண்டது. ஏனெனில் பச்சை மிளகாயில் கொழுப்புகள் குறைவாக இருப்பதோடு, உடலில் இருக்கும் கலோரிகளையும் கரைக்க உதவும்.
பச்சை மிளகாயில் அதிகமான ஆன்டி-ஆக்ஸிடென்ட் நிறைந்துள்ளது. நம் உடலின் இயக்க உறுப்புகளின் பாதிப்பிலிருந்து நம் உடலை பச்சை மிளகாய் காக்கிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து புற்றுநோயிலிருந்து காக்க உதவுகிறது.
பச்சை மிளகாயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால், உணவு செரிமானம் வேகமாக நடைபெறும். மிளகாய்கள் மூளைக்குள் என்டோர்ஃபின்ஸை உற்பத்தி செய்யும். இது நம் மனநிலையை நன்றாக வைத்திருக்கும்.
பச்சை மிளகாயை உட்கொண்டால், நுரையீரல் புற்றுநோயினால் ஏற்படும் பிரச்சனைகளைக் குறைக்கலாம். பச்சை மிளகாயில் ஆன்டி-பாக்டீரியா குணங்கள் அடங்கியுள்ளது. இந்த குணத்தினால் தொற்றுக்கள் ஏற்படாமல் காக்கிறது.
பச்சை மிளகாயில் இயற்கையாகவே இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. எனவே பெண்கள் அடிக்கடி உணவில் இதைச் சேர்த்துக் கொள்வது மிகவும் உடலுக்கு நல்லது.
பச்சை மிளகாயில் வைட்டமின் ஈ அதிகமாக உள்ளது. இது சரும எண்ணெய் சுரப்பதற்கு உதவுகிறது. அதனால் காரசாரமான உணவை சாப்பிட்டால் நல்ல சருமத்தை நம்மால் பெற முடியும்.
பச்சை மிளகாயில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. பச்சை மிளகாயை பயன்படுத்துவதால் மூக்கடைப்பு சரியாகும்படம்

1 கருத்து: