வியாழன், 22 செப்டம்பர், 2022

இறைவா...🙏🙏🙏


அமைதியை தா, உலகிற்கு  அமைதியை தா!..

பரவட்டும் எட்டுத் திக்கும் அமைதியும், சமாதனமும்...

அன்பே எங்கள் தெய்வம்
அமைதியே எங்கள் ஆயுதம்...

உலகம் புனிதமாகட்டும்
அன்பு உரமாகட்டும்..

சந்தோசமும், 
சமாதானமும் பொங்கி வழியட்டும்...!!

KALADEVI.S
II-Bsc CS  Ksrcasw 

செவ்வாய், 13 செப்டம்பர், 2022

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?...


 
சிறு விதையாயினும்
விருட்சமாய் வளரும்
வித்தை தெரிந்தவள்
நான் விளக்கொடு
எரியும் வீட்டில் பூச்சி
போல வீழ்வேன் என்று
நினைத்தாயோ  சிறு
ஊற்றாயினும் நான் வெள்ளமெனப் பாயும்
வேகம் கொண்டவள் 
வடிந்து ஓடும் வாய்க்கால் போல
வீழ்வேன் என்று 
நினைத்தாயோ சிறு
பெண்ணாயினும் சிங்கமென சீறும்
சிந்தை கொண்டவள்
நான் சிறு கூட்டில்
வாழ்ந்து விட்டு
வானுலகை அடையும்
வண்ணத்துப்பூச்சி போல வீழ்வேன்
என்று நினனத்தாயோ
வாடித் துன்பமிக உழன்று பிறர் 
வாட செயல்கள் 
செய்யாமல் வீழ்ந்து
விடுவேன் என நினைத்தாயோ!....

ச.கலாதேவி
II-Bsc CS  ksrcasw 

ஞாயிறு, 11 செப்டம்பர், 2022

ஒரு வழி தடம்

பயணம் அற்ற

பாதையில்...!!

கதையின் 

சுருக்கமாக 

பயணிக்க பட்ட 

என் கவி

ஒரு வழி

தடமாக....!!

செவ்வாய், 6 செப்டம்பர், 2022

கவி இல்லா இமை

என் இருளின் ஒளியில்

இமையை உறங்க வைத்து...!!!

கவிக்கனவை

காணச் சென்றேன்

வழியில்லா

நொடியில்

கவியின்றி

இமை விழித்தேன்....!!!

குரு

இசையின் ராகம் என்னை

 வீழ்த்தியது... 

இசை வென்று 

நான் நிமிர்ந்தேன் 

ராகம்  கற்று 

அழகிய  இசையில் வென்று...!!! 

ராகம் என்ற கல்வியை

கற்பித்து 

இசையென்னும் 

என் வாழ்வில் 

வென்றேன் 

உன்னால் 

குருவே....!!!