வியாழன், 1 செப்டம்பர், 2022

மூஷிக வாகனனே...



பார்வதியின் பையனுக்கு பிறந்தநாளாம் !

பச்சைமண்ணை பிடித்து வைத்து,

அருகம்புல்லை அருகில் நட்டு,

எருக்கு மாலையை தொடுத்து,

மோதகங்கள் படையல் வைத்து,

மூஷிக வாகனனை கொண்டாடுகிறோம் !

இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்..,..
அ.ஹேமா
    3 b.com ksrcasw 

அரசமரத்து அரசனே 🙏🙏🙏



அரசமரத்து அரசனே 
ஆனை முகத்தழகனே
இறையின் முதல்வனே
ஈசனின் புதல்வனே
உலகமே அம்மை அப்பனென உணர்த்தியவனே
ஊழ் வினைகள் தகர்ப்பவனே
என்றும்
நிலையாய் இருப்பவனே

ஏற்றம் என்னுள்
விதைப்பவனே
ஐந்து முகத்தோனே
ஐஸ்வர்யம் தருபவனே

ஒளியின் ஒளியே
ஓங்கார திருவே
ஔடதமானவனே
அஃதே கொள்கினறேன் 
எனையாட்கொண்டாள்வாயே....


ச.கலாதேவி
II-Bsc.CS  ksrcasw 

புதன், 31 ஆகஸ்ட், 2022

ஆனை முகனே

உன் தாயயை

காத்து - உயிர்விட்ட 

பாச மகனே

மறு வாழ்வு பெற்ற 

ஆனை முகனே

நீ - தெய்வத்தின் 

ஆசியின் வழி 

முதற்கடவுளாக

காட்சியளிக்கும்

கொழுக்கட்டை பிரியனே...!!!

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2022

தானமும் தர்மமும்....



தானம் கொடுப்பது
அன்னமே யாயினும்

அங்கத்தை நிறைத்து
இன்பம் பயக்கும்.

தானம் கொடுப்பது
உடையே யாயினும்

மானத்தை காத்து
மனதினில் நிற்கும்.

மறுகை அறியா 
மகிழ்ந்து கொடுப்பது

மனித   தர்மமே 
நம்மை வாழவைக்குமே

பிறர்க்கு உதவுவதை 
புகழ் தேட நினைப்பது 

புண்ணியமாகாது அது
சுய   இன்பமே

தானமும் தர்மமும்
தலைத்தோங்க வேண்டும்

தரணியில் ஈகையாளர்
செழித்தோங்க வேண்டும்

        கலாதேவி.ச
II-Bsc Computer Science ... Ksrcasw 

சனி, 27 ஆகஸ்ட், 2022

மழை....🌧️🌧️🌧️


வான்முகில் வழங்கும் நீரை
வான்சிறப் பென்று சொன்னார்!
வானமும் பொய்த்து விட்டால்,
வாழ்வது கடின மாகும்!
மாமழை போற்றி னாரே,
மாக்கவி இளங்கோ தாமும்!
நீரது குன்றிப் போனால்,
நிலவுல கென்ன வாகும்?
M.Sanmati 
II-BSC Computer Science. Ksrcasw