புதன், 31 ஆகஸ்ட், 2022

ஆனை முகனே

உன் தாயயை

காத்து - உயிர்விட்ட 

பாச மகனே

மறு வாழ்வு பெற்ற 

ஆனை முகனே

நீ - தெய்வத்தின் 

ஆசியின் வழி 

முதற்கடவுளாக

காட்சியளிக்கும்

கொழுக்கட்டை பிரியனே...!!!

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2022

தானமும் தர்மமும்....



தானம் கொடுப்பது
அன்னமே யாயினும்

அங்கத்தை நிறைத்து
இன்பம் பயக்கும்.

தானம் கொடுப்பது
உடையே யாயினும்

மானத்தை காத்து
மனதினில் நிற்கும்.

மறுகை அறியா 
மகிழ்ந்து கொடுப்பது

மனித   தர்மமே 
நம்மை வாழவைக்குமே

பிறர்க்கு உதவுவதை 
புகழ் தேட நினைப்பது 

புண்ணியமாகாது அது
சுய   இன்பமே

தானமும் தர்மமும்
தலைத்தோங்க வேண்டும்

தரணியில் ஈகையாளர்
செழித்தோங்க வேண்டும்

        கலாதேவி.ச
II-Bsc Computer Science ... Ksrcasw 

சனி, 27 ஆகஸ்ட், 2022

மழை....🌧️🌧️🌧️


வான்முகில் வழங்கும் நீரை
வான்சிறப் பென்று சொன்னார்!
வானமும் பொய்த்து விட்டால்,
வாழ்வது கடின மாகும்!
மாமழை போற்றி னாரே,
மாக்கவி இளங்கோ தாமும்!
நீரது குன்றிப் போனால்,
நிலவுல கென்ன வாகும்?
M.Sanmati 
II-BSC Computer Science. Ksrcasw 

அன்னை தெரேசா ‌‌......



அனாதையாய் இருக்கும் குழந்தைகளின்...

ஆதாரமாக வந்த அன்னையே...

உன் முதுமைப் பருவத்திலும்....
 
உனது விழிகள் உரங்க வில்லையே...
 
பாசத்தின் பள்ளி கூடமே...

உன் எல்லை இல்லாத பாசம்....
 
மழலைகள் மனதில் பல ஆண்டுகள் தாண்டியும்...
 
நல் உள்ளம் கொண்டு விழுமே....


ச.கலாதேவி 
II-Bsc.Computer science   Ksrcasw 

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2022

தனிமை

ஒரு வழி தடத்தில் என் பயணம்

தொடங்கிய நிலையில்

இருளின் சிகரத்தில்

ஓர் ஒளி ...!!!

ஓசையின்றி தொடரும்

பயணம் – இக்கணமே

தனிமையின்

இசையில்

வசிக்கின்றது....!!!