தானம் கொடுப்பது
அன்னமே யாயினும்
அங்கத்தை நிறைத்து
இன்பம் பயக்கும்.
தானம் கொடுப்பது
உடையே யாயினும்
மானத்தை காத்து
மனதினில் நிற்கும்.
மறுகை அறியா
மகிழ்ந்து கொடுப்பது
மனித தர்மமே
நம்மை வாழவைக்குமே
பிறர்க்கு உதவுவதை
புகழ் தேட நினைப்பது
புண்ணியமாகாது அது
சுய இன்பமே
தானமும் தர்மமும்
தலைத்தோங்க வேண்டும்
தரணியில் ஈகையாளர்
செழித்தோங்க வேண்டும்
கலாதேவி.ச
II-Bsc Computer Science ... Ksrcasw