வெள்ளி, 31 ஜனவரி, 2020

இன்றைய தினம்

31.01.2020 (வெள்ளி) 
இன்றைய தினம்
       நகைச்சுவை நடிகர் நாகேஷ் நினைவு தினம்.
நேற்றைய தொடர்ச்சி 
சங்ககாலப் பெண்பாற் புலவர்கள் 
       21.பாரிமகளிர்
       22.பூங்கன் உத்திரையார்
       23.பூதப்பாண்டியன் மனைவி பெருங்கோப்பெண்டு
       24.பேய்மகள் இளவெயினி
       25.பொதும்பிற் புல்லாளங் கண்ணியார்
       26.பொன் முடியார்
       27.பொன் மணியார்
       28.போந்தப் பசலையார்
       29.மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார்
       30.மாற்பித்தியார்
       31.மாறோக்கத்து நப்பசலையார்
       32.முடத்தாமக் கண்ணியார்
       33.முள்ளியூர்ப் பூதியார்
       34.வருமுலையாரித்தி
       35.வெண்ணிக் குயத்தியார்
       36.வெண்பூதியார்
       37.வெண்மணிப் பூதியார்
       38.வெள்ளி வீதியார்
       39.வெள்ளைமாளர்
       40.வெறி பாடிய காமக்கண்ணியார்
விவேகானந்தர் 
       உன்னை நீயே பலவீனம் என்று நினைத்துக் கொள்வது மிகப் பெரிய பாவம்.
அப்துல்கலாம்
       சூரியனைப் போல ஒளிர வேண்டுமென்றால், முதலில் சூரியனைப் போல்
       எரிய வேண்டும்.
இன்றைய வெளிச்சம் 
       பணத்தால் பசியைப் போக்க முடியும், துக்கத்தைப் போக்க முடியாது.
       வருத்தமோ, துன்பமோ இன்றி எவராலும் எளிதில் புகழைப் பெற முடியாது.

வெற்றி

வெற்றி என்பது
மற்றவர்கள் கைவிட்டுவிட்ட பின்பும்
அயராமல் முயற்சியைத்
தொடர்வதால் கிட்டுகிறது.

வியாழன், 30 ஜனவரி, 2020

வில்லிபாரதத்தின் மரபுக் குறிப்பு

மகாபாரதப் பருவங்களில் வில்லிப்புத்தூராரால் எழுதாமல் விடுக்கப்பட்ட பருவங்கள் 8. அவை,
1.ஸ்திரீ பருவம்.
2.சாந்தி பருவம்.
3.அனுசாசன பருவம்.
4.அசுவமேத பருவம்.
5.ஆரம பருவம்.
6.மௌசல பருவம்.
7.மகாப்ரஸ்தான பருவம்.
8.ஸ்வர்க்கா ரோஷண பருவம்.

இன்றைய தினம்

30.01.2020 (வியாழன்)
இன்றைய தினம்
        ராமலிங்க அடிகள் நினைவு தினம்.
        தியாகிகள் தினம்
சங்ககாலப் பெண்பாற் புலவர்கள்
        1.அஞ்சியத்தை மகள் நாகையார்
        2.அஞ்சிலஞ்சியார்
        3.அள்ளூர் நன்முல்லையார்
        4.ஆதிமந்தியார்
        5.ஊன் பித்தையார்
        6.ஒக்கூர் மாசாத்தியார்
        7.ஔவையார்
        8.கச்சிப்பேட்டு நன்னாகையார்
        9.கழார்க்கீரன் எயிற்றியார்
       10.காக்கைப் பாடினியார் நச்செள்ளையார்
       11.காமக்கணிப் பசலையார்
       12.காவற்பெண்டு
       13.குமிழி ஞாழலார் நப்பசலையார்
       14.குறமகள் இளவெயினி
       15.குறமகள் குறியெயினி
       16.குன்றியனார்
       17.தாயங்கண்ணியார்
       18.நக்கண்ணையார்
       19.நல்வெள்ளியார்
       20.நெடும் பல்லியத்தை       -   தொடரும்...
அப்துல்கலாம்
      வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தாலும், சிந்திப்பதை
      நிறுத்தாதே...அதுதான் மூலதனம்.
அன்னை தெரசா
      பிறருடைய துன்பத்தை நீக்கும் வல்லமை உனக்கு வர வேண்டுமானால்
      அத்துன்பத்தை நீயும் அனுபவித்து உணர வேண்டும்.
இன்றைய வெளிச்சம்
      உயர்ந்த இலட்சியங்களைக் கொண்டே வாழ்க்கையே தலை சிறந்த
      பெருமையுள்ள வாழ்க்கை.
      நல்லொழுக்கம் மட்டுமே புயலுக்கும் அசையாமல், உறுதியாக நிற்கும்.

தனிமரம்

நான் தனி மரம்தான்
பல கிளைகளைப் படைப்பேன்
அதில் பாசத்தைக் கொடுப்பேன்
நேசத்தைச் சோலையாக்குவேன்
நந்தவனச் சொல்லை ஏற்று நாளும்
அதை வளர்ப்பேன்
நல்லதோர் உலகம்
அதை நாளை நான் கொடுக்க உழைப்பேன்.


22.7.19 அன்று தினத்தந்தி  நாளிதழில் வெளியான கவிதை.