வியாழன், 30 ஜனவரி, 2020

குணம்

அறிவு உங்களுக்கு
அதிகாரத்தை வழங்கலாம்
குணம்தான்
மரியாதையைப் பெற்றுத் தரும்

குறுகிய வாழ்க்கை




நாம் ஆசைப்படும் பல விஷயங்கள் கேட்கும்போது கிடைப்பதில்லை
அது நமக்குக் கிடைக்கும்போது தேவையில்லாத ஒன்றாக மாறிவிடுகிறது.
எனவே நாம் வாழும் இந்தக் குறுகிய வாழ்வில் அனைவரிடமும் அன்பாகவும், பிறருக்கு விட்டு கொடுத்து, எதிர்காலைத்தை எண்ணிக் கவலைப்படாமல் இப்போது நம் கையில் உள்ள நிஜமான நிகழ்காலத்தைச் சந்தோசமாக வாழ்வோம்.

புதன், 29 ஜனவரி, 2020

இன்றைய தினம்

29.01.2020 (புதன்)
இன்றைய தினம் 
      இந்திய செய்தித்தாள் தினம்.
நிகண்டுகள் 
      1.திவாகர நிகண்டு
      2.பிங்கலந்தை நிகண்டு
      3.அகராதி நிகண்டு
      4.சூடாமணி நிகண்டு
      5.உரிச்சொல் நிகண்டு
      6.அரும்பொருள் விளக்க நிகண்டு
      7.பொருள் தொகை நிகண்டு
      8.பொதிகை நிகண்டு
      9.உசித சூடாமணி நிகண்டு
      10.நாபதீப நிகண்டு
விவேகானந்தர் 
       உடல் பலவீனத்தையோ, மன பலவீனத்தையோ உண்டாக்கும் எதையும்
      அணுகக்கூடாது.
இன்றைய வெளிச்சம் 
       எல்லோரையும் நம்புவது ஆபத்து, ஒருவரையும் நம்பாதிருப்பது பேராபத்து.
       செலவுகள் யாவற்றிலும் காலத்தை வீணாக்குதலே அதிக செலவும்,
       ஊதாரித்தனமுமாகும்.

செவ்வாய், 28 ஜனவரி, 2020

திருமணத்தின் போது மோதிர விரலில் மோதிரம் அணிவது ஏன்?

நமது இரண்டு கைகளிலும் உள்ள நடு விரல்களை உட்புறமாக மடக்கிக்கொள்ள, மற்ற அனைத்து விரல்களையும் தனித்து பிரிக்க முடியும். ஆனால், மோதிர விரலை மட்டும் தனித்துப் பிரிக்க முடியாது. அதுபோல, கணவனும் மனைவியும் தங்களது இன்ப, துன்பங்களில் எப்போதும் ஒருவருக்கொருவர் பங்கேற்று அனுசரணையாக வாழவேண்டும். இக்காரணத்தினாலேயே திருமணத்தின்போது மோதிர விரலில் மோதிரம் அணிவிக்கப்படுகிறது.

அன்புத் தோழி

எனது தாயிடம் இருந்து கிடைக்காத சுகத்தை
உனது கைத்தீண்டலே எனக்கு அளித்தது