வார்த்தை சொல்லமுடியாத நொடி
உன்னைப் பார்த்தபோது எனக்குள் ஏற்பட்ட வலி
கால்கள் கூறுகின்ற வார்த்தையைக்
கண்கள் கேட்க மறுத்தது
அத்தனைபேர் இருந்தும்
உனக்கும் எனக்கும் ஒரு தனிமை
நீ என்னைப் பார்க்கவில்லை
நான் அந்த இடத்தில்
உன்னை மட்டுமே பார்த்தேன்
பார்த்ததை வெறுக்க முடியவில்லை
நினைத்ததை வெறுக்க முடியவில்லை
இதிலிருந்து மீள்வதற்கும் வழி இல்லையே
கண்கள் தேடியபொழுது
பார்வை கிடைக்கவில்லையே
கால்கள் நடக்கும்போது
பாதை தெரியவில்லையே
பேசத் துடித்தபோது
வார்த்தை தோன்றவில்லையே
எண்ணம் மாறிவிட்டது
மனம் மட்டும் மாறவில்லையே