புதன், 24 ஜனவரி, 2018

அவருக்கான உலகம்..




இங்கு தான் எங்காவது
அவரைப் பார்த்திருப்பீர்கள்...
வாட்டர் பாட்டிலை எடுத்தபடி..
குப்பையைக் கிளறியபடி..
அதில் ஒரு பேப்பரைப் 
படித்துச் சிரித்தபடி
இயலாமையில் அதைக் கிழித்தபடி.. 
வெறிச்சோடி தாடியைக் கோதியபடி
இறுகிப் போன முடியை நீவியபடி..
இங்கு தான் எங்காவது பார்த்திருப்பீர்கள்...
கடந்த மாதமோ
சென்ற வாரமோ
மூன்று நாட்களுக்கு முன்போ
அல்லது இன்று காலையிலோ பார்த்திருப்பீர்கள்...
ஒருவேளை உங்களில் 
யாரேனும் பார்க்கவில்லை என்றால்
உடனே போய்ப் பார்த்துவிடுங்கள்
அவர் இன்னும் சாகவில்லை
நிச்சயமாக அவர் இன்னும் சாகவில்லை...
மற்றுமொன்று
போகும் போது
தனியாகச் செல்லுங்கள்
குழந்தைகளை அழைத்துச் செல்லாதீர்கள்..
குழந்தைகளைக் கண்டதும் 
அவர் மனிதனாக மாறிவிடுவார்...
தயவுசெய்து
அவரை அப்படியே
விட்டுவிட்டு வாருங்கள்..
அது அவருக்கான உலகம்..

ம.லோகேஸ்வரன்
தமிழ் உதவிப் பேராசிரியர்

மழை


மழை என்பது கடவுளால் உண்டான
நீரினால் ஆன ஐம்பூதங்கள் அடங்கிய ஓர்
சக அற்புதப் படைப்பு மழை!
இவை அனைத்தும் அடங்கிய வருண
தேவரால் பொழியப்பட்ட மழை!
அனைத்து மக்களின் மகிழ்ச்சி மட்டுமல்ல
மக்களின் தாகமும் மழை!
விவசாயிகளின் உயிர் மூச்சும் மழை!
விவசாய மக்களின் பெரும் வீழ்ச்சும் மழை!
மக்களின் துயர்நீங்கா உயிர் பறிப்பதும் மழை!
மக்களின் மகிழ்ச்சியும் மழை! துன்பமும் மழை!
இன்பமும் மழை! சோகமும் மழை!

ரா.ரம்யா
முதலாமாண்டு ஆடை வடிவமைப்புத் துறை

இளைய சமுதாயமே கைகொடுப்பீர்



சிந்தையில் சிந்தித்தால்,
நன் மந்திரம் போதித்தால்,
விந்தையால் விதை விதைத்தால்,
மந்தையில் வளம் நீ படைத்தால் 
சந்தையில் சாதிப்பாய், சரித்திரம் நீ படைப்பாய்,
சாகச உடை உடுப்பாய், சாதியை நீ உடைப்பாய், 
சமரசம் அதை தொடுப்பாய,; சங்கமம் நீ தொகுப்பாய்,
சங்க நூல் வழி மதிப்பாய் - நீ
    தழிழனாய் தடம் பதிப்பாய்.     
                                   
பவித்ரா வெங்கடேசன்              
                    முதலாமாண்டு கணினிப் பயன்பாட்டியல்

பூமித்தாய்


பூமித்தாயே! நீ மக்கள் அனைவரையும்
உன் குழந்தையாக நினைத்து அவர்களைத் தாங்கினாய்
ஆனால் அவர்களோ உன்னைத் தாய் என்று பாராமல்
உன்னை அவமதித்தனர் இருந்தும் நீ அவர்களை 
கீழே விழாமல் தாங்கினாய்
இதுதான் தாயின் அன்போ? என்று வியந்தேன்..  

                                          வர்சிதா 
முதலாம் ஆண்டு கணிதவியல் ஆ பிரிவு

அன்பு



நம்வாழ்க்கையில் பல மனிதர்களை சந்திக்கிறோம்
அவர்களிடம் இருந்து நாம்அன்பு. ,  பாசம் போன்ற பல குணங்களைப் பார்க்கிறோம் 
இதை விட ஆயிரம்குணங்களைநம்மிடம்  காட்டுவது நம் பெற்றோர்கள் தான்
இவர்களை விட உலகில் வேறெதுவுமில்லை..
உலகத்தில் பல்வேறு வார்த்தைகள் உள்ளன. 
மிக சிறந்ததாக மதிக்கப்படுவது 
அம்மா என்ற வார்த்தை மட்டுமே 
அம்மாவுக்கு ஈடு வேறு எதுவுமில்லை.

வ..ரூபிகா              
                         முதலாம் ஆண்டு கணிதம் இ