வியாழன், 26 அக்டோபர், 2017

முகங்கள்

வெளிப்படையாக இருப்பதை விட வேசம் போடுபவர்க்குத்தான் இந்த உலகில் மதிப்பு அதிகம்
நாம் ஒவ்வொருவர்க்கும் பல முகங்கள் உண்டு  .....நம்குடும்பத்திற்கு ஒரு முகம் ,நம் நண்பர்களிடம் ஒரு முகம் ,நாம் அன்றாடம் வேலை செய்யும் இடத்தில் ஒரு முகமுமாக நம் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ....ஆனால் இதில் எதிலுமே நம்முடைய     சுயரூபத்தை மற்றவர்க்கு வெளிகாட்ட தயங்குகிறோம் ஏன்?ஏனென்றால் எங்கே நமது சுயரூபத்தை பார்த்துவிடுவார்களோ என்று பயத்தினாலும் தயக்கத்தினாலும் தான்,....
நாம் போடும் இந்த வேசத்தால் நம்முடைய சுய பின்பத்தை நாம் இலக்கிறோம் என்பது இங்கு எத்தனை பேருக்குத் தெரியும்...
            வெளிப்படையாக இருங்கள் ..மற்றவர்களுக்காக உங்களின்
 சுயத்தை நீங்கள் இழக்க தயாராய் இராதீர்கள்...
thanithuvam க்கான பட முடிவு

புதன், 25 அக்டோபர், 2017

மூன்று மணிநேரம் தேர்வுகள்.


மூன்று மணிநேரம் தேர்வுகள்...
மூன்றாண்டுகளுக்கு பிறகு..?
மாணவர்களின் எதிர்காலம்..?
இதற்கு யார் காரணம்..?
கல்வி நிறுவனங்களா..?
பெற்றோர்களின் பேராசையா அல்லது அவர்களின் முட்டாள்தனமா ..?
மாணவர்களின் கவனக் குறைவா..?
கல்வி சேவையா அல்லது முதலீடா..?
இவர்களில் யார் மீது தவறு..?


வெற்றி கொடிக்கட்டு


vetri க்கான பட முடிவு

# வெற்றி நம்மை பிறர்க்கு அடையாளம் காட்டும் ...ஆனால் தோல்வி நம்மை நமக்கே அடையாளம் காட்டும்...
# பொதுவாக வெற்றி என்பது மற்றவர்கள் கை விட்டு விட்ட பின்பும் அயராமல் தொடர்ந்து முயற்சிப்பதாலயே  கிடைக்கக்கூடியது...
# பல தோல்விகளை சந்தித்தேன் வெற்றி பெரும்பொழுது எனக்கு கிடைத்த ஒவ்வொரு தோல்வியும் ஒவ்வொரு வெற்றி என அறிந்து கொண்டேன்.........

பாடித்ததில் பிடித்தவை

நேற்றைய இழப்புகளையும் நாளைய எதிர்பார்ப்புகளையும் மனதில் சுமந்து நம்மை அறியாமலே நாம் நமது நிகழ்கால நிம்மதியை இழந்து கொண்டு இருக்கிறோம் என்பதே
எவரும் அறிந்து கொள்ள விரும்பாத எதார்த்தமான உண்மை!!

நிரந்தரம் எதுவுமில்லை என அறிவு உணர்ந்தாலும் மனது அதனை ஏற்க மறுத்து அடங்காத ஆசைகளை அது தனக்குள்ளே சுமக்கிறது!!!
nirandharam க்கான பட முடிவு

செவ்வாய், 24 அக்டோபர், 2017

ஆறிலும் சாவு நூரிலும் சாவு





மகாபாரதத்தில் கர்னனின் தாய் குந்தி தேவி பாண்டவர்களுடன் கர்னனை சேர்ந்து கொள்ளுமாறு கேட்கிறாள் அப்போது" நான் பாண்டவர்களுடன் சேர்ந்து ஆறாவதாக வந்தாலும் எனக்கு சாவு நிச்சயம் .கெளரவர்களுடன் சேர்ந்து நூறாவதாக வந்தாலும் எனக்கு மரணம் தான் ... எனவே செய்நன்றி காரணமாக நான் கெளரவர்களுடனே இருக்கிறேன் "என்று தன் தாய்க்கு மறுமொழி கூறினான் கர்ணன் ...அதாவது ஐந்து பேருடன் ஆறாவதாக சேர்ந்தாலும் மரணம்  நிச்சயம் நூறு பேருடன் சேர்ந்தாலும் தனக்கு மரணம் நிச்சயம்  என்பது தான் இதற்கு விளக்கம்.....
mahabharatham க்கான பட முடிவு