செவ்வாய், 24 அக்டோபர், 2017

நான் இதுவாகத்தான் ஆசை படுகிறேன்

vetri க்கான பட முடிவு

ஒரு மனிதர் தன் வாழ்வில் தொட்ட துறைகளில் எல்லாம் வெற்றி பெற்று வந்தார். அவரது #வெற்றிக்கெல்லாம் யார் வழிகாட்டி என்று நிருபர்கள் கேட்டார்கள். “இவர்தான்” என்று சுட்டிக் காட்டினார்.

அவர் காட்டிய திசையில், #தங்கஃபிரேம் போட்டு ஒரு பென்சில் புகைப்படம்! நிருபர்கள் திகைத்தார்கள். அவர் சொன்னார், “இந்தப் பென்சில் எனக்கு 5 விஷயங்களைக் கற்றுத் தந்தது.
பல விஷயங்களை எழுதுவதற்கும், வரைவதற்கும் தன்னை முழுமையாக நம் கைகளில் ஒப்படைக்கிறது.- அவ்வப்போது நாம் அதை #சீவுகிறோம். சீவும் போதெல்லாம் #கூர்மையடைகிறது.- தவறுகள் செய்தாலும், அவற்றை அழிப்பதற்கு இடம் கொடுக்கிறது.- வெளியே எப்படியிருந்தாலும் உள்ளே உடையாமல் ஒரு சீராய் இருக்கிறது.

சின்னஞ்சிறிய பென்சிலாகும் அளவு சீவப்பட்டாலும் எழுதிக் கொண்டிருக்கிறது. கடைசி வரை தன் சுவட்டினைக் காகிதத்தில் பதிக்கிறது. இதைப் பார்த்துதான் என் வாழ்க்கையை நான் சீரமைத்துக் கொண்டேன்.
பல அரிய விஷயங்களை நிகழ்த்த நான் ஒரு கருவி தான் என்கிற அடக்க உணர்வோடு என்னைக் கடவுளின் கைகளில் ஒப்படைத்திருக்கிறேன்.

சோதனைகள் வரும்போதெல்லாம், மேலும் மேலும் கூர்மையாகிக் கொள்கிறேன்.- தவறுகள் செய்திருப்பதாகத் தெரிந்தால் உடனே திருத்திக் கொள்கிறேன்.- வெளிச்சூழலில் புகழ் வந்தாலும் பழிச்சொல் வந்தாலும் உள்ளே உடையாமல் உறுதியாய் இருக்கிறேன்.- கடைசி வரையில் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் – காலத்தில் நம் சுவட்டைப் பதித்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்றார்.

வாழ்க்கை நம் வசம்

        கருவறையில் இருந்து இறங்கி கல்லறையை நோக்கி நடந்து செல்லும் தூரம் தான் வாழ்க்கை...
அதற்குள் ஒருமுறை நல்லா வாழ்ந்து பார்த்திட வேண்டும் ...
நம்மால் சாதிக் முடியாதது இந்த உலகில் எதுவும் இல்லை ...அப்படி இருந்தால் அதை வேறு யாராலும் சாதிக்க முடியாது...
நீங்கள் தோல்வி  பெறும்பொழுது உங்கள் இலக்கை நினைத்து கொள்ளுங்கள்
அது உங்களை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும்....

vaalkai க்கான பட முடிவு

குறைகள்

போதகர் ஒருவரிடம் கேட்டாள் ஒரு பெண்.." என் கணவர் நிறைய குறைகளோடுஇருக்கிறார்...அவரோடு என்னால் இனிஎன்னால் வாழமுடியாது,எனவே நான்அவரைவிட்டு விலகி விடட்டுமா?"..அவளுக்கு நேரடியாக பதில்சொல்லாத போதகர்."அம்மா! இங்குள்ள செடிகளில்ஏதாவது ஒன்றை உங்களுக்கு தர விரும்புகிறேன்,எது வேண்டும் கேளுங்கள்?" என்றார்..அப்பெண் ரோஜா செடியைக்கேட்டாள்...." அதைப் பராமரிப்பது மிகவும் கடினம், அதோடுஅதில் நெறைய முட்கள் வேறு இருக்கிறதே?இதுவா வேண்டும்?" என்று போதகர் கேட்டார்.."எனக்கு ரோஜாவை மிகவும் பிடிக்கும், அதனால் அதனிடம் உள்ள குறைகள்பெரிதாகத் தெரியாதுஎன்றாள்.".புன்னகைத்த போதகர் சொன்னார்:." வாழ்க்கையும் அப்படிதான்!பிறரை நேசிக்கக் கற்றுக்கொண்டால்அவர்கள் குறை பெரிதாக தெரியாது !!!
kuraigal க்கான பட முடிவு

திங்கள், 23 அக்டோபர், 2017

படித்ததில் பிடித்தவை

உங்களுக்கு எந்தெந்த உரிமைகள் தேவை என்று கருதுகிறீர்களே...
அதே உரிமைகளை பிறருக்கும் வழங்குங்கள்...

சிறகடிக்க தொடங்கியவுடன் எந்த பறவை குஞ்சும்,
அதன் தாயிடம் கூட, இரையை பிச்சை கேட்பதில்லை...

வாழ்க்கை ஒரு வரம்.. காத்திருக்க, நினைக்க, மகிழ, வருந்த, விரல்கோர்த்து நடக்க, பழைய கதைபேச, ஊர் சுற்றித்திரிய... ஒரு உயிர்த்தோழி/தோழன் அமைந்தால்..

குறைகளை காண்பதை விட..
நிறைகளை கண்டு மகிழ்ச்சி அடைவோம்...!!!
படம்

பணம் / மனம்

ஒரு பணக்கார அம்மா துணி கடைக்குப் போய்_கடைக்காரரிடம் எனது மகனுக்கு திருமணம்' ஆகவே எனது வீட்டில் வேலைசெய்யும் பணிப்பெண்ணிற்கு கொடுக்க மிக குறைந்த விலையில் ஒரு சேலை கொடுங்கள் என்று வாங்கிச் செல்கிறார்..!

சற்று நேரத்திற்கு பிறகு அதே கடைக்கு அந்த வீட்டு பணிப்பெண்
rich க்கான பட முடிவுவருகிறார் கடைக்காரரிடம் என் முதலாலியின் பையனுக்கு கல்யாணம் அதனால் எனது முதலாளி அம்மாவுக்கு பரிசாக கொடுப்பதற்கு உங்க கடையில் மிக உயர்ந்த விலையுடைய சேலைகளை எடுத்துப்போடுங்கள் என்று பார்த்து மிக உயர்ந்த விலையுடைய ஒரு சேலையை வாங்கிச் செல்கிறார்..!

இதில் யார்_பணக்காரர்...?!!