செவ்வாய், 10 அக்டோபர், 2017

கையெழுத்து

என்ன அழகு...!!
செதுக்கினாயோ
இல்லை
எழுதினாயோ
தெரியவில்லை...,,
சிற்பியே
வியந்து
விட்டான்,,
உன்
எழுத்து
வடிவம்
பார்த்து.....

# கையெழுத்து #

மு. நித்யா.

காடுகள்

மனிதா....
உன் இனம்
வசதியாக வாழ
என் இனத்தை
அழிக்க
தொடங்கிவிட்டாயே...
மறந்து விட்டாயோ,,,,
உன் இனம்
உயிருடன்
வாழ்வதற்கே
நான் தேவை
என்பதை....

# காடுகள் #

மு. நித்யா.

கிளி

நீண்ட
நாள்
சிறைபிடித்து
வைத்ததால்
என்னவோ
தெரியவில்லை,,,
நீ
என்னை
விடுவித்தும்
மறந்து போனேன்
பறப்பதற்கு......

# கிளி #

----மு. நித்யா.

புத்தகம்

உன்னை
புரட்டி
பார்த்தவர்கள்
எல்லோரும்,,,
புரட்டி
போடுகிறார்கள்
உலகையே....

# புத்தகம் #

மு. நித்யா.

நிலா

நாளை இரவு
மீண்டும்
வருகிறேன் என்று
சொல்லிவிட்டு
சென்றாய்......
நானோ
உன்
வருகைக்காக
காத்திருந்தேன்.....
ஆனால் நீயோ,,
வரவே
இல்லை..
அப்போது தான்
உணர்ந்தேன்
இன்று
அமாவாசை
என்பதை......

# நிலா #

மு. நித்யா.

மழை

கதிரவன்
தாக்கத்தால்
வாடி
இருந்த
செடிகள் கூட,,
இன்று
உன்
வருகையால்
புன்னகையில்
பூத்து
குலுங்குகிறது..

# மழை #

---மு நித்யா.

மின்னல்

தீப்பொறி
போல
வந்து
போவது
ஏனோ
கண்ணிமைக்கும்
நேரம்.....
உன்
தாக்கம்
என்னவோ
பலமணி
நேரம்.....

# மின்னல் #

----மு. நித்யா.