செவ்வாய், 10 அக்டோபர், 2017

கனவு

நீ என் கண் முன்
வரும் போது எல்லாம்
சிகரத்தையே தொட்டது போல
முகத்தில் ஒரு ஆனந்தம்..
அப்போது தெரியவில்லை
அது வெறும் கனவு என்று..
ஒரு நாள் என் கனவு
கனவாகவே
போகும் போது தான்
தெரிந்தது,
அதன் வலி என்னவென்று..
இருந்தும் ஏன் அடிக்கடி
வந்து போகிறாய்.....

# கனவு #

-----மு. நித்யா.
நான் முதலில் உன்னை காணும் போது
வெறும் செடியாக  தான் தெரிந்தாய்
உன்னிடம் தினமும் பேச
நமக்குள் ஒரு உறவு,
நீயும் செழித்து பூக்களாய் மலர்ந்தாய்
நானும் மகிழ்ச்சியில் மலர்ந்தேன்
சில காலம் ஆனது
பூக்கள் வேறு இடம் செல்லும்
நாளும் வந்தது
நீ என்னைவிட்டு
பிரிய போகிறாய் என்று
தெரிந்தும்
அதை ஏற்காமல்
என் மனம் தவிக்கிறது.....

# அழகான பூக்கள் #

---மு. நித்யா

திங்கள், 9 அக்டோபர், 2017




மங்கல ஆரத்தி ......

மங்கள ஆரத்தி எடுப்பது ஏன் தமிழர் பின்பற்றும் கலாச்சாரத்தின் அறிவியல் பூர்வ நன்மைகள்...!
தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக்கியமானது, ஆரத்தி எடுக்கும் நடைமுறை. ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை பின்பற்றப்படும் இந்த நடைமுறை வெறும் சடங்குக்காக செய்யப்படுவதில்லை.
படம்

ஆரத்தி எடுப்பது என்றால் ஒரு தாம்பாளத் தட்டில் தண்ணீரில் மஞ்சள் அரைத்து சேர்த்து அதில் சிறிது சுண்ணாம்பு சேர்த்து கலக்க வேண்டும். மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த தண்ணீருக்கு சிவப்பு நிறம் வருகிறது. இதை ஒரு பரந்த பாத்திரத்தில் எடுத்து அதற்கு இரு பக்கங்களிலும் இரண்டு தீச்சுடர் எழுப்பி சம்பந்தப்பட்ட நபரின் உடலுக்கு சுற்றும் 3 முறை சுற்றி விடுவதையே ஆரத்தி என்று கூறுகின்றோம்.


அந்த நபரின் மேல் வந்து சேர்ந்திருக்கும் விஷ அணுக்களை அழிப்பதே ஆரத்தியின் உத்தேசம். ஆரத்தி எடுப்பதன் மூலம் நம் உடலில் சேரும் விஷ அணுக்களை அழித்து நம் நலன் பேனுவதோடு பிறருக்கும் அந்த விஷ கிருமிகள் பரவாது தடுக்கிறது.வீட்டினுள் நுழையும் முன்பே சரீரத்தில் சேர்ந்துள்ள திருஷ்டி மற்றும் கிருமிகளை அகற்றி தூய்மைப்படுத்திய பின்னரே சம்பந்தப்பட்டவர்களை வீட்டுக்குள் அழைத்துக் கொண்டு போகும் வழக்கம் உள்ளது.
எனவே அது போல் ஆரத்தி எடுக்கும் போது பொருள் அறிந்து சரியான பாவனையுடன் செய்வது முக்கியம். அப்போது தான் அதன் பலனும் முழுமையாக இருக்கும்.
               
                                                                 பொறுமையின் ஆதாயம்...


edison க்கான பட முடிவு 


          தாமஸ் ஆல்வா எடிசன் வெஸ்‌டர்ன் யூனியன் கம்பனி ,வணிகம் சம்பந்தமாகப் பேச அழைத்திருந்தது . அவர் கண்டுபிடித்திருந்த தந்திப்பதிவு நாடா உரிமையை அவர்கள் கேட்டிருந்தார்கள். தன் கண்டுபிடிப்புக்கு என்ன விலை கோருவதென்று எடிசன் தீர்மானித்திருக்க வில்லை அந்த நிறுவனத்தாரிடம் இரண்டு நாள் அவகாசம் கேட்டார்.
தன் மனைவி உடன் ஆலோசித்து 20,000டாலர் விலையாக கோரலாம் என்று முடிவு செய்தார்.
பிறகு, அந்த நிறுவனத்தின் சார்பாய் அவரை வரவேற்ற அதிகாரி கேட்டார் 'நல்லது மிஸ்‌டர் .எடிசன்,நீங்கள் என்ன விலை எதிர் பார்க்கிறீர்கள் ?என்று .
20000டாலர் அதிகமோ என அமைதியாக அமர்ந்திருந்தார்எடிசன். எடிசனின் பதிழுக்காக அதிகாரி காத்திருந்தார் ....
ஆயினும் எடிசன் வாய் திறந்து பேசவில்லை ....
அதிகாரி அதற்கு மேலும் பொறுக்கமுடியாமல் பேச முனைந்தார் .'எடிசன்! ஒரு லட்சம் டாலர்கள் ,சரியா?என்று விலை வைத்தார்.....
    பொறுமையோடிருந்த எடிசனுக்கு ஆதாயம் .பொறுமை இழந்த அதிகாரியால் நிறுவனத்திற்கு இழப்பு.....

எந்த செயலையும் பொறுமையோடு செய்தால் வெற்றி நிச்சயம்...மாறாக அவசர அவசர மாக செய்தால் தோல்வி தான் மிஞ்சும்...