வணிகவியல் துறையின் உதவிப் பேரராசிரியர் வா.சுரேசு அவர்கள் சாதி ஏனோ என்ற தலைப்பில் எழுதிய கவிதையினை இங்கு பகிரவுள்ளேன்...
![Image result for சாதி ஏனோ](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDCdu7ar6aQ8z__6qyAdOA5xK57oTF-AE0HbHrsyNHdtDqCSP4ZvDl1-6NEkDjG0CZHvY3mGNGbwzb8GybUsp8tKBmq_A2lvPnAz2PJkUFMSwP0nWao8pvJMW9T2VoQAqgkbPvLTyVZKm9/s200/IMG-20160315-WA0001.jpg)
ஓரறிவாம் (உணர்வற்ற) தாவரங்களில்
சாதியில்லை...!!!
ஈரறிவாம்(உயிருள்ள) ஈ, கொசுவில்
சாதியில்லை..!!!
மூவறிவாம் நண்டு வண்டில்
சாதியில்லை..!!!
நான்கறிவாம் எழில்மிகு குயில் மயிலில்
சாதியில்லை..!!!
ஐந்தறிவாம் நாய் சிங்கம்தனில்
சாதியில்லை..!!!
ஆறறிவாம் அறிவுள்ள மனிதனிலே
சாதி ஏனோ...???