(தன்னம்பிக்கை தொடர்கின்றது..)
ஒவ்வொரு நாளும் ஒருமணி
நேரமாவது அமைதியாக இருந்து பாருங்கள். மயக்கங்கள் நீங்கி மனதில் தெளிவு ஏற்படும். எப்போது
பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்பதெல்லாம் புரியவரும். பிரச்சனைகளை சர்வ சாதாரணமாக
மேற்கொள்வதற்கான மனோபலம் வந்துவிடும். ஒருமணி நேர அமைதி என்பது ஒருமணி நேர தியானத்தைப்போல்
உங்களுக்குள் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
அமைதி, மவுனம், நிதானம்
எல்லாம் ஒன்றுதான். அது நமக்குள் இல்லையெனில், நிம்மதியும் இல்லாமல் தான் போய்விடும்.
சில வீடுகளில் கணவன்-மனைவி
சண்டை தெருக்கோடி வரையிலும் கேட்கும். அவன் ஒரு வார்த்தை சொன்னால், பதிலுக்கு அவள்
பத்து வார்த்தை பேசுவாள். அவள் பேசிவிட்டால் கையில் கிடைத்ததைத் தூக்கி அவன் எறிவான்.
(தொடரும்..)