வெள்ளி, 2 செப்டம்பர், 2016

தன்னம்பிக்கை 6


Image result for தன்னம்பிக்கை சித்தர்

(தன்னம்பிக்கை தொடர்கின்றது..)
    
   ஒவ்வொரு நாளும் ஒருமணி நேரமாவது அமைதியாக இருந்து பாருங்கள். மயக்கங்கள் நீங்கி மனதில் தெளிவு ஏற்படும். எப்போது பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்பதெல்லாம் புரியவரும். பிரச்சனைகளை சர்வ சாதாரணமாக மேற்கொள்வதற்கான மனோபலம் வந்துவிடும். ஒருமணி நேர அமைதி என்பது ஒருமணி நேர தியானத்தைப்போல் உங்களுக்குள் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
    
   அமைதி, மவுனம், நிதானம் எல்லாம் ஒன்றுதான். அது நமக்குள் இல்லையெனில், நிம்மதியும் இல்லாமல் தான் போய்விடும்.
    
   சில வீடுகளில் கணவன்-மனைவி சண்டை தெருக்கோடி வரையிலும் கேட்கும். அவன் ஒரு வார்த்தை சொன்னால், பதிலுக்கு அவள் பத்து வார்த்தை பேசுவாள். அவள் பேசிவிட்டால் கையில் கிடைத்ததைத் தூக்கி அவன் எறிவான்.
                      
                               (தொடரும்..)




வியாழன், 1 செப்டம்பர், 2016

தன்னம்பிக்கை 5

Image result for தன்னம்பிக்கை சித்தர்(தன்னம்பிக்கை தொடர்கின்றது…)
   
   `நெடுநேரம் தியானம் செய்தீர்களே! புத்தர் தங்களிடம் என்ன சோன்னார்?’
   
    `அவர் ஒருபோதும் எதுவும் சொல்ல மாட்டார். ஆனால் அமைதியாகக் கேட்டுக் கொண்டுருப்பார்’ என்றார் துறவி.
     
    `அப்படியா? அதுசரி, அவரிடம் தாங்கள் என்ன சொன்னீர்கள்?’ என்று தனது அடுத்த கேள்வியைக் கேட்டார் தலைமைக் குரு.
      
    `நானும் எதுவும் சொல்ல மாட்டேன். அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்பேன்’ என்று சொல்லிவிட்டு அந்தத் துறவி அங்கிருந்து கடந்து சென்றார்.
      
     மவுனத்தில் ஆழ்ந்த அர்த்தம் இருக்கின்றது. அதில் ஆழம் இருக்கிது. சப்தங்களை விட மவுனத்திற்கு வலிமை அதிகம் மவுனம் என்பது ஊமைத்தனம் அல்ல.அது ஒரு நிசப்த கர்ஜனை; அது ஓர் ஓசையற்ற சங்கீதம்.

                      
                     (தொடரும்..)

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

தன்னம்பிக்கை 4

Image result for தன்னம்பிக்கை


(தன்னம்பிக்கை தொடர்கின்றது…)
   
  ஆயிரம் வார்த்தைகள் சாதிக்க முடியாததை மவுனம் சாதித்துவிடும்.அது ஒரு ஞானக்கலை. அதற்கு நம் மனதை நாம் பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும்.
  
  ஒரு பவுத்த விஹாரத்திற்குள் துறவி ஒருவர் வந்தார்.அமைதியாக அங்கே அமர்ந்தார். புத்தரின் அருள்முகத்தை ஏறிட்டுப் பார்த்தார். அப்படியே நெடுநேரமாய் தியானத்தில் ஆழ்ந்துவிட்டார்.
    
   பின்னர் எழுந்து,அமைதியாக விஹாரத்தை விட்டு வெளியேறினார்.அப்படியே தினந்தோறும் நிகழ்ந்தது. விஹாரத்தின் பொறுப்பாளர் இதை அனுதினமும் கவனித்து வந்தார்.
   
  ஒருநாள் வழக்கம்போல் அந்தத் துறவி விஹாரத்திற்குள் வந்தார். தியானத்தில் ஆழ்ந்தார். நீண்ட நேரத்திற்குப்பின் வெளியே வந்தார். மடத்தின் தலைமைக் குரு அவரை அணுகிக் கேட்டார்;

             
                                 (தொடரும்..)

திங்கள், 29 ஆகஸ்ட், 2016

தன்னம்பிக்கை 3

Image result for தன்னம்பிக்கை

(தன்னம்பிக்கை தொடர்கிறது…)
  
  விஷத்தைக் கக்குவதுபோல் பேசிப்பேசி உங்களைக் காயப்படுத்துகின்றவர்கள் உங்கள் பக்கத்தில், உங்கள் அலுவலகத்தில், உங்கள் உறவினர்களில் இருக்கத்தானே செய்கிறார்கள்.
   
   அவர்களின் வார்த்தைக்கு வார்த்தை நீங்கள் பதில்பேசிக் கொண்டிருந்தால், அதனால் மேலும் மேலும் புண்படப் போவது என்னவோ உங்கள் மனம்தான்.
   
  வீண்பேச்சை வளர்த்துக் கொண்டிருப்பவர்களின் நோக்கமெல்லாம் உங்களைச் சங்கடப்படுத்துவதுதான். எனவே அவர்கள் நல்லிணக்கத்திற்கோ, நல்லுறவிற்கோ ஒரு போதும் வழிவகுக்க மாட்டார்கள்.
   
  அவர்களுக்கு மத்தில் நம்மை நாம் காப்பாற்றிக் கொள்வதற்கு, மவுனம்தான் மிகச்சிறந்த வழி. அமைதி என்பது ஓர் அற்புதமான ஆயுதம்.  
                      
                       (தொடரும்..)