செவ்வாய், 28 ஜனவரி, 2020

திருமணத்தின் போது மோதிர விரலில் மோதிரம் அணிவது ஏன்?

நமது இரண்டு கைகளிலும் உள்ள நடு விரல்களை உட்புறமாக மடக்கிக்கொள்ள, மற்ற அனைத்து விரல்களையும் தனித்து பிரிக்க முடியும். ஆனால், மோதிர விரலை மட்டும் தனித்துப் பிரிக்க முடியாது. அதுபோல, கணவனும் மனைவியும் தங்களது இன்ப, துன்பங்களில் எப்போதும் ஒருவருக்கொருவர் பங்கேற்று அனுசரணையாக வாழவேண்டும். இக்காரணத்தினாலேயே திருமணத்தின்போது மோதிர விரலில் மோதிரம் அணிவிக்கப்படுகிறது.

அன்புத் தோழி

எனது தாயிடம் இருந்து கிடைக்காத சுகத்தை
உனது கைத்தீண்டலே எனக்கு அளித்தது

ஆனால்

ஆண் : நான் உங்களை விரும்புகிறேன்.
பெண் : உனது தகுதி என்ன?  சொந்தமாக வீடு வைத்து இருக்கிறாயா?
ஆண் : இல்லை. ஆனால்...
பெண் : பி. எம். ட்புல்யு. கார் வைத்திருக்கிறாயா?
ஆண் : இல்லை. ஆனால்...
பெண்: ஆனால் என்று சொல்வதை நிறுத்து..வேலையாவது பார்க்கிறாயா?
ஆண் : இல்லை. ஆனால்...
பெண் : போதும், போதும் நிறுத்து. எந்தத் தகுதியும் இல்லாத உன்னை
               எவ்வாறு ஏற்றுக்கொள்வது...
               (பெண் சென்று விடுகிறாள்)
ஆண் : எனக்குச் சொந்தமாக வீடு இல்லை. ஏனெனில் எனக்குச் சொந்தமாக வில்லா உள்ளது. என்னிடம் லம்பொஉர்க்ஹினி கார் இருக்கும்போது அதை விட விலை குறைவான பி. எம். டபில்யு.-க்கு அவசியம் இல்லாது போயிற்று. சம்பளம் கொடுக்கும் முதலாளியாக இருக்கும் நான் மற்றவர்களிடம் கைகட்டி வேலை பார்க்கவேண்டிய அவசியம் இல்லை. என்னை ஏற்றுகொள்ளும் தகுதி அவளுக்குத்தான் இல்லை.

முயற்சி

கருக்காத வெண்மேகம் மழையாகாது
செதுக்காத கல் சிற்பமாகாது
உரசாத தீக்குச்சி நெருப்பாகாது
தெளிவில்லாத நீரில் முகம் தெரியாது
அதேபோல முயற்சி இல்லாத கனவு வெற்றியாகாது


15.7.19 அன்று தினத்தந்தி  நாளிதழில் வெளியான கவிதை.

வெள்ளி, 24 ஜனவரி, 2020

இன்றைய தினம்

24.01.2020 (வெள்ளி)
இன்றைய தினம்
         தேசிய பெண் குழந்தைகள் தினம்
         இந்திய அணுக்கருவியலின் தந்தை ஹோமி பாபா நினைவு தினம்.
பன்னிரு ஆழ்வார்கள் 
         1.பொய்கையாழ்வார்
         2.பூதத்தாழ்வார்
         3.பேயாழ்வார்
         4.திருமழிசை ஆழ்வார்
         5.நம்மாழ்வார்
         6.மதுரகவி ஆழ்வார்
         7.குலசேகர ஆழ்வார்
         8.பெரியாழ்வார்
         9.ஆண்டாள்
         10.திருபாண் ஆழ்வார்
         11.தொண்டரடிப்பொடி ஆழ்வார்
         12.திருமங்கை ஆழ்வார்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்   அக நூல்கள்  - 6 
          1.கார் நாற்பது
          2.ஐந்திணை ஐம்பது
          3.ஐந்திணை எழுபது
          4.திணைமொழி ஐம்பது
          5.திணைமாலை நூற்றைம்பது
          6.கைந்நிலை
புறநூல்  - 1
          1.களவழி நாற்பது
தன்னம்பிக்கை 
          உனக்கு மேலே உள்ளவனைப் பார்த்து ஏங்காதே... தாழ்வு மனப்பான்மை
          வரும்.! உனக்குக்கீழே உள்ளவனை ஏளனமாய்ப் பார்க்காதே...
          தலைக்கனம் வரும்.! உன்னை யாரோடும் ஒப்பிடாமல் நீ நீயாக இரு...
          தன்னம்பிக்கை வரும்...!
இன்றைய வெளிச்சம் 
          உங்களைப் பற்றி நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையே வெற்றி தரும்.
          நம்பிக்கை மட்டும் இருந்தால் போதாது சிந்திக்கவும் தெரிய வேண்டும்.
         அன்பும் இரக்கமும் இரட்டைக் குழந்தைகள்.