தனிமை என்னும்
மண்ணில் விழுந்த
சிறு துளியாய்
இருந்த என்னை
கட்டியணைத்தாய் நீ....!!!
புதன், 3 ஆகஸ்ட், 2022
திங்கள், 1 ஆகஸ்ட், 2022
என் ஒளியே
சிப்பிக்குள் உறங்கும்
முத்துகளே.... !!
மாயவன் சிப்பியை
மாய்கும் கணமே
உன் ஒளியின் வண்ணம்
என்றும்
என் ஒளியே.....!!!
ஞாயிறு, 31 ஜூலை, 2022
முத்தின் உறவு
கவிதையின் கண்களைக்
கண்ணீரில் கண்ட நாட்கள்!
இன்று விழியின் விழிம்பில் நதி
வற்றிக் கிடப்பது ஏனோ...
தாயின் உறவு கொப்புக்கோடியில்
தந்தையின் உறவு கைப்பிடியில்
அன்னனின் உறவு அறவணைப்பில்
உறவுகள் சிற்பிக்குள் உள்ளதைப்
போல் ஒன்றாக இருந்த
நாட்கள் ஏனோ!!
சிதறிய முத்துக்கள்
நாளடைவில் பிறந்தன
முத்துகளை தேடியே தொலைந்தேன்!!
விழியில் வழிந்த கண்ணீர்
வற்றிப் போய் கலைத்தன
முத்துகளைத் தேடி நான்
தொலைந்தேன்
என் கண்ணிள் கவிதையை
காணவில்லை..
என்னோடு சேர்ந்து .
என் கவிலையும் தொலைந்தது.. !!!
சனி, 30 ஜூலை, 2022
வியாழன், 28 ஜூலை, 2022
செவ்வாய், 26 ஜூலை, 2022
தங்க மயில்
வாடிய மலரே நீ
வாடிய மலரைக் காண சென்றேன்...!
அழகாய் மலர்ந்த மலர்கள்
ஏனோ
வினவியது....
உன் கண்களை கவர்வது போல
பல வண்ணங்களாய் பூத்துள்ளேன் !
என் மணம் உன்னை
ஈர்க்க வில்லையா?
என் வண்ணங்கள்
உன் கண்களை
ஈர்க்க வில்லையா ?
ஏன் என்னை விலக்கி
வாடிய மலரை வர்ணிக்கின்றாய்?
என் கண்கள்
உன்னைக் காண நினைப்பது
ஏனோ
நான் மறைத்த உண்மை மலரே..!
ஆனால்..
வாடிய மலர் தனிமையில்
இன்னும் வாடுகின்றன
வர்ணிக்க யாருமில்லாமல்
அதனை உணர்ந்த என் மனம் .
உன்னைக் காண நான் வருகின்றேன்..
வர்ணிக்க வருகின்றேன்
வருந்ததே மலரே.... !
நான் கூறியதைக் கேட்ட
வண்ண மலர்கள் புரிந்து கொண்டு
அழைத்துச் செல் என்னையும்
காண வருகிறேன் அழகிய
வாடிய மலரை...!
அழகின் ரகசியமே
வாடிய மலரே நீ.... !!
திங்கள், 25 ஜூலை, 2022
மீனின் மகிழ்ச்சி
நீருக்கு பஞ்சமில்லை..... !!!
மான்போல் துள்ளி ஓடும் நதியில்....!!
ஜொளிக்கும் நட்சத்திரமாய் வாழும்
மீன்கள் ஏனோ
துள்ளி குதித்து தாவும்
மீனை வர்ணிக்க வந்தேன்....!!!
நீல நதியில் வசிக்கும்
வண்ண மீன்களே.....!!
என்னிடம் உரையாட வா!!!
உன்னிடம் விளையாட வருகிறேன்..!!!
என் மனதில் ஏக்கம்
ஏனோ
முத்துகளைப் போல்
குவிந்து கிடக்கின்றது...!!
பல வண்ணங்களைக் கொண்ட
உன் மேனியை நேசித்தேன்.....!!!
வசிப்பாயா என்னுடன் ?
வினவ வந்தேன்
சட்டென்று தடுமாற்றம் படைதேன்....!!!
உன்னை அழைத்துச் செல்ல
மறுக்கிறது என் மனம்...!!
நீ வசிக்கும் உம் இடமே
உன் மகிழ்ச்சிக்கு காரணம்.....!!
நீல நதியில் - நீ !!
துள்ளி விளையாடும்
மகிழ்ச்சியை உன்னிடம் இருந்து
பறிக்கமாட்டேன்......!!!
உன் மகிழ்ச்சியை உன்னிடம் தந்து
உன் மகிழ்ச்சியை கண்டு
நான் மகிழ்ச்சி அடைகிறேன்
கண்ணே !!!
சனி, 23 ஜூலை, 2022
நிலவின் நிழல்
நிலவில்லை ...!!!
என்னுடன் வசிக்கும்
நிழலில்லை ...!!!
நிழலில்லா உயிரே
நிலவைத் தேடிய
நிலையில் துடிக்கும்
என்னவளின் உயிர்
நிலவின் நிழலிற்காக... !!!
வியாழன், 21 ஜூலை, 2022
புதன், 20 ஜூலை, 2022
இன்றைய கல்வி
புனையா ஓவியம்
தமிழா் வளா்த்த நுண்கலைகளின் வரிசையில் ஓவியக்கலை முன்னிலையில் நிற்கிறது. ஆயக்கலை அறுபத்து நான்கில் ஓவியக்கலை சிறப்பிடம் பெறுகிறது. பழங்கால மக்கள் தம் உள்ளக் கருத்துக்களைப் புலப்படுத்த பாறைகளிலும் குகைகளிலும் கீறி எழுதினா். எல்லைகளையெல்லாம் கடந்து எங்கும் பரந்து வாழும் மக்கள் மனங்களைக் கொள்ளை கொண்டு வியக்க வைக்கும் விந்தை மொழி ஓவியம். தமிழ் நாட்டில் சங்க காலத்திற்கு முன்னரே ஓவியங்கள் வரையப்பட்டன. தாம் வரைந்த ஓவியங்களை முதலில் கண்ணேழுத்து என்றே வழங்கியுள்ளன. வண்ணம் கலக்காமல் கரித்துண்டுகளால் வடிவம் மட்டும் வரைவதைப் புனையா ஓவியம் என்பா். இன்று மென் கோட்டு ஓவியமாக உள்ளது.
சங்க இலக்கியங்களிலும் காப்பியங்களிலும் காணப்படும் ஓவியங்களில் ஒன்று புனையா ஓவியம் பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான நெடுநல்வாடையில் தலைவன் வினையின் காரணமாக தலைவியை விட்டு பிரிந்து கார் காலம் வருவதாக கூறிச் செல்கிறான் கூறிச்சென்ற பருவம் வந்தும் தலைவன் வாராமையினால் தலைவி தன்னை அழகு படுத்தி கொள்ளாமல் புனையா ஓவியம் போல பொலிவிழந்து காணப்படுகிறாள் இதனை
“புனையா ஓவியம் கடுப்ப புனைவு இல்
தளர் ஏா் மேனித் தாய கணங்கின்”
என்ற வரிகளின் மூலம் காண்கிறேம். மேலும் மணிமேகலையில் இரு இடங்களில் இப்பெயா் இடம்பெற்றுள்ளன. ஆதிரை பிச்சையிட்ட காதையில் மணிமேகலை முதன்முதலில் அமுதசுரபி என்னும் பாத்திரத்தில் ஆதிரையிடம் பிச்சை பெரும் பொழுது
“மனையகம் புகுந்த மணிமேகரை தான்
புனையா ஓவியம் போல நிற்றலும்”
புனையா ஓவியம் போல் நிற்கிறாள்.மேலும் சிறை செய் காதையில் விசாகை என்னும் வணிக பெண் ஊா் மக்கள் கூறும்பழி சொல்லிலிருந்து தன்னை காத்துக் கொள்ள கன்னி மாடத்தில் நுழைகிறாள் அவ்வாறு நுழையும் பொழுது தன்னை அழகு படுத்திக் கொள்ளாமல் புனையா ஓவியம் போல் இருப்பதை
“புனையா வோவியம் புறம்போந் தென்ன
மனையகம் நீக்கி வாணுதல் விசாகை”
என்ற வரி நமக்கு உணா்த்துகின்றது. இலக்கியங்களில் புனையா ஓவியம் என் சொல் இது போன்ற இடங்களில் இடம்பெற்றுள்ளன.
திருமதி . ப. நா்மதா
தமிழ்த்துறை உதவிப்பேராசிரியா்செவ்வாய், 19 ஜூலை, 2022
வாழும் தெய்வம்
உயிருக்குள் அடைக்காத்து
உதிரத்தைப் பாலாக்கி
பாசத்தில் தாலாட்டி
பல இரவுகள்
தூக்கத்தை தொலைத்து...
நமக்காகவே
வாழும் அன்பு
தெய்வம் அன்னை!!!!
Shastika.s II BCOM FMA
