ஞாயிறு, 14 ஜூலை, 2019

விவசாயிகளின் கண்ணீர் துளிகள்.....!!!!களவுபோனது உழவின் உரிமை....!!!!!

களவு போனது உழவின் உரிமை...!!!



உழவே கதி என்றவனுக்கு உரிமைகளின்.....
களவே நீதியானது.....!!!!

மழைவெயில் பாராது தன் மனஞ்சோராது....
உழைத்த அவனுக்கு வறுமையே விதியானது......!!!!!

நாட்டில் மழையில்லை ..நலமான உரமில்லை.....
இருப்பினும் உழைக்கும் உனக்கோ ஈடில்லை.....!!!!!

பச்சை மட்டும் பரவிய வயலில் பல வண்ணக் கொடி பறக்கிறது......
வறுமையில் பேரடிபட்டு..சதுரடிக்கு விலை பேசுகிறாய்.....!!!!!

நீ அறுத்தெடுத்த பருக்கையை திண்றவரே....
உனை அழவைக்கின்றனர்......!!!!!

கை மறத்து உழைத்த உனக்கு .....
முதுகும் வயிறும்
மறத்து போனது அடிபட்டு...அடிபட்டு.....!!!!

பச்சைத்தமிழா....
பசுமைக்காக போராடுகிறாய் பச்சையுடையணிந்து........
சீரோடு வாழ்ந்து நீ போராடி வாழ்கிறாய்......
போராடி.....போராடி....    சோரவில்லை...!!!!!!!!!

நீ இல்லையேல் யாருக்கும் சோறேயில்லை.....
வெம்பி அலறும் வேளாளனே ....
நீ வேண்டுவது யாருக்கும் புரியவில்லையே........!!!!!!!                     

நீ போராடுவது உன் வயிற்றுக்கில்லை..
ஊர் வயிற்றுக்கு...
இவ்வுண்மை புரியாதவரை...
உன் போராட்டம் வெறும் சத்தமே..
புரியாவிட்டால் பின் சோற்றுக்கு நடக்கும் யுத்தமே......!!!!!!!!

தொலைக்காட்சியால் வெளிவரும் உன் போராட்டம்.....
தொல்லை காட்சியாக மாறிவிடும் மறுவாரம்........
வாரம் வாரம் ஒவ்வொரு ஆரவாரம்.... அதற்கெல்லாம் முடிவு என்று வரும்......

வறுமையில் வாடி உன் நிலத்தை விற்பது......   ?
தாய் மடியை தத்துக் கொடுப்பது போல்.... .!!!!!

தண்ணீர் வங்கியும் .....வங்கித் தள்ளுபடியும்......
உனக்கு பொய்யாய் போனது.....!!!!!!

நீயும் ..தற்கொலை செய்தால் நாங்கள் எங்கு போவது.....
உன்னால் தோன்டப்பட்ட கிணறும் திருடப்பட்டது.....!!!!!!

புலிவாயில் எலியைக் கண்டபோது.... பொருக்கலேயே மனசு......
துடிக்கலேயே அரசு.....!!!!!

பயிர் வாடியதால் ஆலமரமானது தூக்குமரம்......
பூச்சிக்கொல்லி மருந்து.... உனக்கானது விருந்து..... !!!!!!

விவசாயி.....

விவசாயி....

உன் மண் மடியில் கொஞ்சம் தலைசாயி..... !!!!

வானம் கிழித்து...
மேகம் தெரித்து....
ஒருநாள் வந்து சேரும் மழை.....!!!!
அதுவரை சோர்வுராது
உழை.....
களவுபோனது உழவின் உரிமையில்லை....!!!!!

களவுபோனது உலகின் உரிமை....!!!!


" விவசாயத்தைக் காப்போம்.....!!!
விவசாயியை மதிப்போம்....!!!!!  "
👍👍👍👍👍💐💐💐👍

1 கருத்து: