புதன், 30 ஜனவரி, 2019

சாதனை பெண்👩👩






   

காலம் தான் அனைத்து துன்பத்திற்கும் மருந்து. காலம் நினைத்தால் ஒருவனை ஒரு நொடியில் உயரத்துக்கு உயர்த்த முடியும் அதே சமயம் அவனை அகல பாதாளத்தில் தள்ளவும் முடியும். ஆனால் ஒரு பழமொழி உண்டு விதியை மதியால் வெல்லலாம். ஆம் கடின உழைப்பும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மூன்று ஆண்டுகளில் இவ்வளவு சாதிக்க முடியும் என்பதை  சாதித்து காட்டிய பாவனா கஸ்தூரி தான் இந்த பதிவின் கதாநாயகி. 23 வயது வரை ஒரு சாதாரண பெண்ணாக ஆடல் பாடல் படிப்பு என இருந்த இவருக்கு  ராணுவத்தின் மீது நாட்டம் ஏற்பட்டது. 11 மாதம் கடுமையான பயிற்சிக்கு பிறகு ராணுவத்த்தில் சேர்ந்தார்.
23 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ராணுவ கார்ப்சுக்கு குடியரசு அணிவகுப்பில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அதை தலைமை ஏற்று நடத்தும் பொறுப்பு இவருக்கு கிடைத்தது.முதல் முறையாக 144 ஆண்களை தலைமை ஏற்று நடத்தும் பெண் என்ற சாதனையை படைத்தார். இப்போது 26 வயதாகும் இவருக்கு தன் ராணுவ கணவரும் தன் குடும்பமும் பக்க பலமாக இருக்கிறது என்று கூறும் பாவனா ஒரு சாதனை பெண் தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக