ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

ஐன்ஸடின் கண்டு வியந்த இந்திய மனிதர்

 ஐன்ஸடின் கண்டு வியந்த இந்திய மனிதர்

இவரது பெயர் தாண்டோ கேஷவ் கார்வ்.இவர் இந்தியாவின் தலைசிறந்த சீர்திருத்தவாதியாவார்.குறிப்பாக பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் கல்வி வளர்ச்சியிலும், தனிமனித சுதந்திரத்திலும், விதவைகளுக்கு மறுமனம் செய்வது மற்றும் சாதி ஒளிப்பு போன்றவற்றில் கவனம் செலுத்தியவர்.இவர் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் முறுட் என்ற சிறிய இடத்தில் பிறந்தார். இவரை ``மகரிஷி கார்வ் அல்லது அன்னா கார்வ் என்று அன்புடன் அழைப்பர்.தனது 14ஆவது வயதில் திருமணம் செய்தவர். பூனாவில் இருக்கும் ஃப்பெர்குசான் பல்கலைக் கழகத்தில் கணித பேராசிரியராக பணிபுரிந்தவர். தன்னை சுற்றி இருந்த விதவைகளின் அவல நிலைகண்டு அவர்களுக்கு உதவ ``வித்வ விவஹோட்டஜாக் மன்னாலி( விதவைகள் மறுதிருமண அமைப்பு) என்பதை 1883ஆம் ஆண்டு நிறுவினார்.
இவர் செய்த சாதணைகள் பற்பல,
1.இந்தியாவின் முதல் மகளீர் கல்லூரியை (ஸ்ரீமதி ந்திமாய் தாமோதர் தாக்கர்சே) நிறுவியவர் இவரே.
2.1936 இல் மாகாராஷ்ட்ராவின் சிறு கிராமங்களிலும் ஆரம்ப் பள்ளிகளை துவங்கினார்.
3.1944ஆம் ஆண்டு ``சமதா சங்” (மனித சமத்துவ குழு) நிறுவினார்.
1955ஆம் ஆண்டு பத்ம விபூஷன் மற்றும் பாரத ரத்னா வருது பெற்றார்.அந்த அதே ஆண்டு அவரது புகைப்படம் அஞ்சல் பொறிப்பிலும் வெளியிடப்பட்டது.



4.குயின் ரோடு என்ற சாலை பிற்காலத்தில் மகரிஷி காரவ் என்று மாற்றிஅமைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக