ஞாயிறு, 6 மார்ச், 2016

பத்துப்பாட்டு

ஆன்றோர் புகழ்ந்த அறிவினிற் றெரிந்து

சான்றோர் உறைத்த தண்டமிழ்த் தெரியல்

ஒருபது பாட்டும். –என நச்சினார்கினியரின் உரையும்,

பத்துப்பாட்டாதி மனம் பற்றினார் பற்றுவாரோ

எத்துணையும் பொருட்கிசையா இலக்கணமில் கற்பணையே  --என சுந்தரம்பிள்ளை உரையும் கூறுகிறது.

”மூத்தோர்கள் பாடியருள் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும்” என தமிழ்விடுதூது கூறுகிறது. பத்துப்பாட்டிலுள்ள பாடல்களை பா என்றும் பாட்டு என்றும் சுட்டுவர்.பத்துப்பாட்டு பத்து வகைப்படும். அற்றில் 4 அகப்பொருள் பற்றயன,6 புறப்பொருள்  பற்றயன ஆகும் .நச்சினார்கினியர் எழுதிய உரையால் சங்ககாலப்புலவர்களே இதனைத தொகுத்தவர் என அறிய முடிகிறது. பத்துப்பாட்டு எனும் தொகுப்பு 13ஆம் நூற்றாண்டின் பின்னரே தோன்றியிருக்க வேண்டும்.பாடியோர்  8பேர் .பாடப்பட்டோர் 8பேர். இதற்க்கு பலர் உரை எழுதியுள்ளனர்.

ஆற்றுப்படை பாடல்கள்

பரிசில் பெற்ற கலைஞர் ஒருவர்,எதிர்ப்பட்ட கலைஞர்களைத் தமக்கு பரிசில் ஈந்த வள்ளலிடம் செல்லுமாறு வழிப்படுததுவது ஆற்றுப்படை ஆம். ஆற்றுப்படை என்னும் இலக்கிய மரபினை வேறு எம்மொழி இலக்கியத்திலும் காண இயலாது.ஆற்றுப்படை  பரிசில் பெறும் கலைஞர் பெயரால் பெயர் பெறும்.

திருமுருகாற்றுப்படை

பாடிய புலவர்: நக்கீரர்

பாடப்பட்டோர்:முருகன்

அடிகள்:317

பொருள்:புறம்

பா :ஆசிரியப்பா

வேறு பெயர்:முருகு, புலவராற்றுப்படை

திணை :பாடான்திணை

துறை:ஆற்றுப்பாடை

உரையாசிரியர்: பரிதி, பரிமேலழகர்

"வீடு பெறுதற்குச் சமைந்தானோர் இரவலனை,வீடு பெற்றானொருவன் முருகனிடத்தே ஆற்றுப்பாடுத்துவது''--என்பது நச்சினார்கினியர் உரையாகும்.இது கீபி 300பிற்பட்டது என்பர்.இது 5பகுதிகளை கொண்டது.

உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு

பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு   —என தொடங்கி

இழுமென இழிதம் அருவிப்

பழமுதிர் சோலை மலைகிழ வோனே —என முடியும்.

பொருநராற்றுப்படை

பாடிய புலவர்: முடத்தாமக்கண்ணியார்

பாடப்பட்டோர்:கரிகாலன்

அடிகள்:248

பொருள்:புறம்

பா :ஆசிரியப்பா

திணை :பாடான்திணை

துறை:ஆற்றுப்பாடை

பரிசில் பெறப்பபோகும் பொருநனைப் புரவலனிடம் பரிசில் பெற்றபொருநன் ஆற்றுப்படுத்துவதாக அமைவதால், பொருநராற்றுப்பாடை எனப் பெயர் பெற்றது.இது போர்க்களம் பாடும் பொருநனை ஆற்றுப்படுத்துவது. கரிகாலனின் வீரம், கொடை, நாட்டு வளம்,காவிரியின் சிறப்பு ஆகியவை போற்றப்பட்டுள்ளன.

விறலியர் முடிமுதல் அடிவரை வருணிக்கப் பெறல்,மணமக்களுக்கு யாழை உவமையாக்கல் நெசவின் அருமை கூறல் முதலியன இப்பாடலில் குறிப்பிடத்தக்கதாகும்.

சிறுபாணாற்றுப்படை

பாடிய புலவர்: நல்லூர் நத்தத்தனார்

பாடப்பட்டோர்:நல்லியக் கோடன்

அடிகள்:269

பொருள்:புறம்

பா :ஆசிரியப்பா

திணை :பாடான்திணை

துறை:ஆற்றுப்பாடை

பரிசில் பெறவிருக்கும் பாணனை ஓய்மாநாட்டு நல்லியக் கோடனிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைவது, இப்பாடல். இது சிறு பாணரை ஆற்றுப்பத்துவதாக அமைந்தது.

விறலி வண்ணனை , மூவேந்தர் தலைநகரச் சிரப்பு,கடையெழு வள்ளல்களின் கொடைத்திறன்,சிறுபாணரின் வறுமை, யாழ் பண்ணின் சிறப்பு பற்றியும் 

நல்லியக் கோடனின் வீரம், கொடை, விருந்தோம்பல், பரிசளிக்கும் திறன் ஆகியன விளக்கப்பட்டுள்ளன. ஆமூர், வேலூர், விலங்கை போன்ற ஊர்கள் சுட்டப்பட்டுள்ளன.

பெரும்பாணாற்றுப்படை

பாடிய புலவர்: உருத்திரங்கண்ணனார்

பாடப்பட்டோர்:இளத்திரையன்

அடிகள்:500

பொருள்:புறம்

பா :ஆசிரியப்பா

திணை :பாடான்திணை

துறை:ஆற்றுப்பாடை

பரிசில் பெறவிருக்கும் பெரும் பாணனை பரிசில் பெற்ற பாணன், தொண்டைமான் இளந்திரையனிடம் அற்றப்படுத்தியது. 

இடனுடைப் பேரியாழ் முறையுளிக் கழிப்பி

என்ற தொடர் இடம் பெறலாலும், மிக்க அடிகளைப் பெற்றித்தலும், பெரும்பாண்குடியினரை ஆற்றுப் படுத்தியதாலும் இது பெரும்பாணாற்றுப்படை  எனப்பட்டது.

யாழ் வருணனை, ஐந்நிலத்தார் ஒழுகலாறு, வாணிக மகளிர் உப்புப்பார வண்டி ஓட்டல், கழுதை மேல் வணிகர் மிளகுபொதி கொண்டேகல், எயின் குடியிருப்பு போன்ற பல செய்திகளும் இடம் பெற்றுள்ளன.கனலி(சூரியன்) ,ஞெகிலி(தீக்கடைகோல்), வல்சி (உணவு) போன்ற அரிய சொற்கள் இடம் பெற்றுள்ளன.

இதனை தமிழண்ணல் "சமுதாயப்பாட்டு " என்பார்.

மலைபடுகடாம் 

பாடிய புலவர்: பெருங்கௌசிகனார்

பாடப்பட்டோர்:

அடிகள்:583

பொருள்:புறம்

பா :ஆசிரியப்பா

வேறு பெயர்:கூத்தாற்றுப்படை

திணை :பாடான்திணை

துறை:ஆற்றுப்பாடை

பரிசில் பெற்ற கூத்தனொருவன் பெறவிருக்கும் கூத்தனைப் பல்குன்றக் கோட்டத்துச் செங்கண் மாத்துவேள் நன்னன் சேய் நன்னனிடம் ஆற்றுப்படுத்திது.

அலகைத் தவிர்த்த எண்ணருந் திறத்த

மலைபடு கடாஅம் மாதிரத்தியம்ப

நன்னன் நாட்டிற்குச் செல்லும் வழி, வழியில் கிட்டும் உணவுகள், சோலை அழகு,மலைவளம், நாட்டின் சிறப்பு , சிவனின் அருள் போன்ற பல இதில் குறிப்பிடப் பட்டுள்ளன.


பிளாஷ் பேக் எனும் புரட்சி


                        பிளாஷ் பேக் எனும் புரட்சி
Image result for பிளாஷ்பேக்

முன்னுரை
ஒரு திரைப்படம் என்றால் நாம் எதிர்ப்பார்ப்பது பலவாக இருக்கும். நகைச்சுவை, காதல், சண்டை, சோகம், பாடல் என சொல்லிக்கொண்டே போகலாம். இன்றைய சினிமாவில் எதற்கெடுத்தாலும் ஒரு பிளாஷ் பேக்கை காட்டிவிடுகிறார்கள். இதில் பெரிதாக இருக்கும் படத்தை சுருக்கிச் சொல்லி சிறியதாக்கிவிடுகிறார்கள்.
கண்டுபிடிக்கப்படாத காலம்
 ஆனால் இந்த பிளாஷ் பேக் உத்தி கண்டுபிடிக்காத காலங்களில் சினிமா என்பது ஒரு போரடிப்பதாக இருந்தது. ஒரு கதையை சொல்ல வேண்டும் என்றால் அதன் தொடக்கத்தில் இருந்து  வரிசைப்படி தான் சொல்ல வேண்டும். எடிட்டிங் என்ற தொழில்நுட்பமும் அப்போது இல்லை. அதனால் காட்சிகளையும் கதையின் படியே எடுத்துச் செல்ல வேண்டும். ஒரு ஹீரோ கஷ்டப்பட்டு பெரிய பணக்காரனாக மாறுகிறான் என்றால், அவன் சிறுவனாக இருந்தது, பல வேலைகளைச் செய்ததது, வளர்ந்து பணம் சேர்த்தது, பணக்காரன் ஆனது என்று படிப்படியாகத்தான் காட்ட முடியும். இதனால் பார்ப்போர் சலித்துப்போனார்கள்.
பிளாஷ்பேக்
 ஆனால், இப்போது எடுத்தவுடன் ஹீரோவைப் பெரிய பணக்காரனாக காட்டிவிட்டு, அதன்பின் சின்ன பிளாஷ்பேக்கில் அவன் கஷ்டப்படுவதையும் காட்டிவிடலாம். பிளாஷ்பேக் என்பதை சினிமாவின் புரட்சி என்கிறார்கள்.

முதல் பிளாஷ்பேக் சினிமா
இதை சினிமாவில் முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர் அகிரா குரோசோவா என்ற இயக்குனர். அவர் இயக்கிய ரொஷோமான் படத்தில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தினார். படத்தில் ஒரு பெண் கொல்லப்படுகிறாள். அதில் சம்பந்தபட்ட நான்கு பேரை விசாரிக்கும் போது, ஒவ்வொருவரும் அவரவர் கோணத்தில் அந்த சம்பவத்தை விவரிப்பார்கள். நான்கு கோணங்களில் கதை நகரும். இறுதி வரை கொலையாளி யார் என்பது யாருக்கும் புரியாத புதிராக இருக்கும். இது தான் அந்த படத்தின் கதை. திரையுலகின் பிதாமகன் என்று போற்றப்படும் அகிரா குரோசோவா இயக்கிய மிகச்சிறந்த படம் இது.
அசையும் காட்சிகளுக்கு அடுத்த புரட்சி

இதன் மூலம் அவர் கொண்டு வந்த சிந்தனையான பிளாஷ்பேக் என்ற யுத்தி, லூமியர் சகோதரர்களால் கண்டுபிடித்த அசையும் காட்சிகளுக்கு அடுத்து, ஒரு பெரிய புரட்சியாக கருதப்பட்டது. இந்த கதையை அடிப்படையாக வைத்துதான் தமிழில் சிவாஜி கணேசன் நடித்த “அந்த நாள்” படம் வந்தது. திரைக்கதையில் சில விஷயங்களை மறைத்து, ரசிகர்களுக்கு படத்தின் மீது ஆர்வத்தை ஏற்படுத்த, பெரும்பாலான இயக்குனர்களுக்கு இன்று வரை பிளாஷ்பேக்தான் பயன்படுகிறது.


மரகதப் புறா


                      Image result for மரகதப் புறா


 தமிழ்நாட்டின் மாநிலப்பறவையாக மரகதப்புறா உள்ளது.வெப்ப மண்டலத் தெற்காசியாவில் பாகிஸ்தானிலிருந்து இலங்கை வரையிலும்,கிழக்கே இந்தோனேசியா,வடக்கு,கிழக்கு ஆஸ்திரேலியா வரையிலும் காணப்படும் மனைவாழ் புறாவாகும்.இப்புறா பச்சைப்புறா எனவும், பச்சைஇறகுப் புறா எனவும் அழைக்கப்படுகிறது.இப்புறா ஐந்தடி உள்ள மரங்களில் கூடுக்கட்டி வாழ்கிறது.

மரகதப் புறாக்கள் தனித்தோ,இரட்டையாகவோ அல்லது சிறு குழுவாகவோ காணப்படுகிறது.இவை நிலத்தில் விழுந்த பழங்களை தேடி உண்ணுகிறது.இவை பெரும்பாலும் நிலத்தில் நடப்பதையே விரும்புகிறது.இவற்றின் கூப்பாடு மென்மையிலிருந்து வலுக்கும்.இவை மூக்கிலிருந்து "ஹு- ஹு- ஹுன்" என்று ஓசையிடுகின்றன.இவை கடந்த பத்து ஆண்டுகளில் முப்பது சதவீதம் அழிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
.
 

சனி, 5 மார்ச், 2016

கணிதமேதை ஜான்நேப்பியா்


    










           ஜான் நேப்பியர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கணித மேதை ஆவார்.  இவர் அச்நாட்டிலுள்ள எடின்பா்க் நகரின் அருகே அமைந்துள்ள “மொ்சிஸ்டன் காஸில்” என்னும் இடத்தில், 1550ஆம் ஆண்டு பிறந்தார். மேலும் இவரது காலம் கி.பி.1550-1617. 
     தன்னுடைய பதிமூன்றாவது வயதிலேயே ஆண்ட்ருஸ் பல்கழைக்கழத்தில் சேர்ந்தார்.  எனினும் அங்கு அவரால் படிப்பைத் தொடர முடியவில்லை.  அவா் பட்டம் எதுவும் பெறாமலே அக்கல்லூரியை விட்டு விலகினார்.
     நேப்பியர் அதன் பிறகு பல வெளிநாடுகளுக்குப் பயணம் சென்றார்.  1571ஆம் ஆண்டு தன் சொந்த ஊருக்கே திரும்பி வந்தார்.  1572ஆம் ஆண்டு நேப்பியரின் திருமணம் நடைபெற்றது.  ஆனால் அவரது மனைவி ஏழு ஆண்டுகளில் மரணம் அடைந்தார்.  எனவே அவர் மறுமணம் புரிந்தார்.
     நேப்பியர் கிறிஸ்தவ மதத்தில் அதிக நம்பிக்கை வைத்திருந்தார்.  அவர் ரோம் நகரிலுள்ள தேவாலயம் பற்றிய நூல் ஒன்றையும் எழுதினார்.
    



     நேப்பியரின் பெரும்பாலான வாழ்க்கை கணித ஆராய்ச்சியிலேயே கழிந்தது.  கூட்டல், கழித்தல், வர்க்க மூலத்தைக் கண்டறிதல் போன்றவற்றிற்குப் பயன்படும் கருவி ஒன்றை நேப்பியர் கண்டுபிடித்தார்.  அக்கருவி அவரது பெயரிலேயே “நேப்பியர் ராடு” என்று அழைக்கப்படுகிறது.
     கணித உலகில் “மடக்கை” (Logrithms) என்னும் பிரிவு மிகவும் முக்கியமானதாகும்.  அதனைக் கண்டுபிடித்த பெருமை நேப்பியரையே சாரும்.  நேப்பியர் இல்லையென்றால் கணித உலகிற்கு மடக்கை விதிகளும், மடக்கை அட்டவணையும் (Logrithm Table) கிடைத்திருக்காது.
   




       நேப்பியர் பின்ன எண்கள், அதிக இலக்க எண்கள் போன்றவற்றை பெருக்குவதற்கு, வகுப்பதற்கும் மடக்கை விதிகளைப் பயன்படுத்தி மிக விரைவாகவும், எளிதாகவும் விடைக் கண்டார்.  இன்றளவும் உலகெலுங்கிலு முள்ள பள்ளிகளில் மடக்கை விதிகளும், மடக்கை அட்டவணைகளும் பயன்பட்டு வருகின்றன.
     கணிப்பொறி உலகில் அறியப்படுவதற்கு முன் பெரும்பாலான கணக்கு வழக்குகளில் மடக்கை அட்டவணையே (Logrithm Table) பயன்படுத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.  இன்றைய கணினி யுகத்தில் கூட மடக்கை அட்டவணையின் முக்கியத்துவம் தவிர்க்க முடியாததாகும்.  ஏனெனில், மடக்கை அட்டவணை மிக எளிதானது மட்டுமின்றி, சிக்கனமானதும் ஆகும்.
     உதாரணமாக, இரு அதிக இலக்க எண்களைப் பெருக்க வேண்டும் என்று வைத்துக்கொள்வோம்.  அவ்வதிக இலக்க எண்களுக்கு மடக்கை அட்டவணையில் ஒரு குறிப்பிட்ட எண்கள் தரப்பட்டிருக்கும்.  இரு அதிக இலக்க எண்களைப் பெருக்குவதற்கு அவ்வெண்களின் மடக்கை எண்களை அட்டவணை மூலம் கண்டறிந்து, அவற்றைக் கூட்டி, கிடைக்கப்பெறும் எண்ணிற்கு எதிர்மடக்கை எண்ணைக் (Antologrithm) கண்டால் அதுவே பெருக்குத் தொகை விடை ஆகும்.
     ஒரு குறிப்பிட்ட எண் “N” என்று வைத்துக் கொள்வோம்.  அதன் மடங்கைக் குறிக்கும் எண் “b” என்று வைத்துக்கொள்வோம்.  அவ்வெண்ணின் மடங்கைக் குறிக்கும் மடக்கை வாய்ப்பாடு, logbN ஆகும்.
     கணிதத்தில் மடக்கை விதி (Logrithm) அதைக் கண்டுபிடித்த கணித மேதை நேப்பியரின் பெயரிலேயே அழைக்கப்படுவது நேப்பியருக்கு கிடைத்த பெருமையாகும்.


யாஹூ உருவான கதை..!!


Image result for yahoo



யாஹூ  இது  உலகம் முழுவதும் இணைய சேவையை வழங்கி வரும் ஓர் அரிய தேடுபொறியாகும்.இந்த தேடுபொறியானது அமெரிக்காவின் ஸ்ரான்போட் (ஸ்டார்ன்ஃபோர்டு) பல்கலைக் கழகப் பட்டதாரிகளான டேவிட் ஃபிலோ மற்றும் ஜெரி யாங் என்பவர்களால் 1994-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டு 1995-ம் ஆண்டு மார்ச் 2-ல் ஒருங்கிணைக்கப்பட்டது.

இதன் தலைமை அலுவலகம் கலிபோர்னியாவில் உள்ளது.தொடக்கத்தில் இந்த நிறுவனத்தின் பெயர் JERRY AND DAVID’S GUIDE TO THE WORLD WIDE WEB என்பதாக இருந்தது.1994-ல் யாஹூ என்ற பெயருக்கு மாறியது.ஜொனதன் ஸ்விப்ட் என்பவர் எழுதிய கல்லிவரின் பயணங்கள் என்ற நாவலின்  YET ANOTHER HIERARCHICAL OFFICIOUS ORACLE  என்ற சொல் தொடரின் சுருக்கமாக YAHOO  என்பதைப் பயன்படுத்தினார்.இந்த பெயர் மிக முரட்டுத்தனமான நாகரீகம் மற்றும் பண்பாடு தெரியாத இளைஞனைக் குறிக்கும்.

Image result for yahoo jerry and david

யாஹூ நிறுவனத்தைத் தொடங்கிய ஜெர்ரி யாங் மற்றும் டேவிட்  ஃபிலோ ஆகிய இருவரும் தாங்கள் அப்படிப்பட்ட இளைஞர்கள் என்று தங்களை தாங்களே வேடிக்கையாகக் குறிப்பிட்டுக் கொண்டு இந்த பெயரையே தங்கள் நிறுவனத்திற்கும் தேர்ந்தெடுத்தனர்.2010 ஆம் ஆண்டின் தரவின் படி இந்நிறுவனத்தின் ஆண்டு வருமானம் அமெரிக்க ரூபாய் மதிப்பில் $6.324 பில்லியன் மதிப்பை எட்டுகிறது.

மேலும் யாஹூவானது யாஹூ மின்னஞ்சல்,மெசன்ஜர்,கணினி விளையாட்டு,வர்த்தகம் போன்ற சேவைகளை வழங்குகிறது.அதுமட்டுமல்லாமல் இது இந்திய மொழிகளான தமிழ்,இந்தி,குஜராத்தி,தெலுங்கு,கன்னடம்,பஞ்சாபி மற்றும் மலையாளம் போன்ற ஏழு மொழிகளுக்கு ஆதரவு அளித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. 


நாலடியார்

            
Image result for நாலடியார்

தகுதியான நூல்களையே கற்றல்;
           
            பாடல்;

                 தோணி இயக்குவான், தொல்லை வருணத்து,
                 காணின், கடைப்பட்டான் என்று இகழார்; காணாய்!
                 அவன் துணையா ஆறு போயற்றே, நூல் கற்ற
                 மகன் துணையா நல்ல கொளல்
.           
          பொருள்;

                   கல்விக்கு எல்லையில்லை,ஆனால் கற்பவருடைய வாழ் நாட்களோ சில நாட்களே ஆகும். அந்த சில நாட்களிலும் கற்பவர்களுக்கு நோய்கள் பலவாக வருகின்றன. ஆதலால் நீரை நீக்கீப் பாலை பருகும் அன்னப் பறவையைப் போல அறிவுடையார் நூலின் தன்மைகளை அறிந்து தகுதியான நூல்களையே கற்றல் வேண்டும்`


கொசு யாரை கடிக்காது?

   

Image result for mosquito


உலக்கத்தின் ஆதி உயிரினங்களுள் ஒன்று கொசு. அது நமக்குத் தரும் தொல்லைகள் சொல்லி மாளாது. 2.5 மில்லி கிராம் மட்டுமே எடை கொண்ட கொசுவுக்குப் பற்கள் மட்டும் 47 உள்ளனவாம்.
3 ஆயிரம் வகை கொசுக்கள் இருந்தாலும், 80 வகை கொசுக்கள் மட்டுமே நம் ரத்தத்தை உறிஞ்சுகன்றன. ஒரு கொசு, முட்டையிலிருந்து, முழு வளர்ச்சி அடைந்த கொசுவாக மாறுவதற்கு தேவைப்படும் காலம்,5 நாட்கள் மட்டுமே முட்டைலயிலிருந்து வெளிவந்த சில நிமிடங்களுக்கு பின், கொசுக்கள் இனப் பெருக்கம் செய்ய முடியும், மேலும், கொசுவுக்கு முள் போன்ற கூரிய முனையுடைய இரத்த உறிஞ்சுக்குழல் உண்டு.உலகின் அபாயகரமான பூச்சியினம் என்று பெரும் பாலான நாடுகளில் அறிவிக்கப்பட்டது கொசு தான்.

ஆண் கொசுவைவிட பெண் கொசுவே பெரியது.ஆண் கொசு சைவம்,இலை தழைகளையே அது உணவாக உட்கொள்கிறது.கடிப்பதும் ரத்தம் குடிப்பதும் பெண் கொசுதான்
.
 அதேபோல், கொசுக்கள் பெண்களைத்தான் அதிகமாக கடிக்கின்றன. காரணம் அவர்கள் உடலில் உள்ள ஈஸ்ட்ரோ ஐன்கள், கொசுக்களை கவருகின்றன.பெண் தான் பெண்ணுக்கு எதிரி என்பது கொசுக்கள் விஸயத்தில் உண்மையே.

 அதேநேரம் “வைட்டமின் பி” கொசுவின் எதிரி.இந்த வைட்டமின் பி சத்து உடலில் அதிகமாக இருப்பவர்களை கொசு நெருங்குவதில்லை.
கொசுக்களை விரட்ட நாம் பயன்படுத்தும் பொருட்களில் கொசுக்களை அழிக்கும் ரசாயனம் அலெத்ரின் சார்பு பொருட்கள் உள்ளன. இது கொசுக்களை மட்டும் அழிப்பதில்லை மனிதனின் சுவாசப்பையில் நச்சுப்பொருளாக கலந்து நாளடைவில் மார்புச்சளி, தும்மல்,தலைவலி போன்ற கேடுகளை உண்டாக்குக்கின்றனர்.


உடலில் தேங்காய் எண்ணெய் அல்லது வேப்ப எண்ணெய் தடவி கொண்டால் இரவில் கொசுக்கள் மட்டுமல்ல வேறு சில பூச்சிகளும் நம்மை கடிக்காது.