வியாழன், 3 மார்ச், 2016

நியு இயர்ஸ் ஈவ்

                                                        நியு இயர்ஸ் ஈவ்
                                            -சார்லஸ் லாம்ப்

      இந்த ஆர்வமூட்டும் சுயசரிதையில் சார்லஸ் லாம்ப் அவரது குழந்தை பருவம் முதல் அவரது தர்காலம் வரை கடந்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.அவரது நாற்பத்தி ஐந்தாம் வயதில் தம் வாழ்க்கையை முன் நோக்குகிறார் இன்னும் கடந்து செல்ல வேண்டிய தொலைவை இறுதிக் காலத்தை அல்ல.
      மக்கள் இரு தினங்களை முக்கியமாக கொண்டாடுகின்றன,

                        1.பிறந்த நாள்
                        2.புது வருடம்

 இரண்டும் அவர்கள் கடந்து சென்ற ஆண்டுகளுக்கான கொண்டாட்டம்.    அவர்கள் இதனை பெருமகிழ்சியுடனும்,ஆரவாரத்துடனும் கொண்டாடும்போழுது லாம்ப் அவரது கடந்த கால காயமான நினைவுகளை கூறுகிறார்.
      பின்பு அவர் ``அலிஸ்’’என்ற பெண்னுடன் தாம் கொண்ட காதலை பற்றி நினைவுகொள்கிறார்.தனது வாழ்நாளில் நாற்பது ஆண்டுகள் கடந்துவிட்டார் ஆனால்,தன்னையே அவர் நேசிக்கவில்லை.ஒரு வழக்கறிஞரிடம் அவர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் இரண்டு தவுசன் பவுன்ட் பரிகொடுத்தனர்.பின்னர் இவர் ஐந்து வயது இருக்கும் பொழுது சின்னம்மையால் பாதிக்கப்பட்டார்,காதலிலும் தொல்வியயே சந்தித்தர்.தாம் பெற்ற காதல் தோல்வியினால் மட்டும் ஏழு வருடம் மனவுளைச்சள் கொன்டு வருந்தினார்.இவரது அனைத்து கடந்த காலமும் சற்று மனக்கசப்பையே இவருக்கு தந்தன. 
   குழந்தை பருவம் முதல் இன்று வரை எப்படி இவற்றை கடந்து வந்தோம் என்று யோசித்து பார்க்கிறார்.

இந்த கட்டுரை புது வருட சிறப்பு மற்றும் வாழ்வின் தொடர்ச்சியை கூறும் ஒரு கவிதையை படித்து பெற்ற அனுபவத்துடன் முடிக்கிறார்.லாம்ப் புது வருடத்தை ஒரு புதிய வாழ்கையின் தொடக்கமாக பார்க்கிறார்.

அந்த புது வருடத்தை அவர் ஒரு குவலை வைன்னுடன் வரவேற்றார்.

முயற்சியின் பின் வெற்றி

         
 முயற்சி

செடியில் இருந்து பூக்கள் உதிர்வது

மீண்டும் பூப்பதற்காக

சுட்டெரிக்கும் கதிரவன்

மாலையில் மறைவது

இரவில் நிலவு வருவதற்கு

அது போல நீ தோல்வியை

சந்தித்து சோர்ந்து விடாதே

வெற்றி என்னும் முயற்சியுடன் ஓடு.

முயற்சி என்னும் ரோஜா  பூவை

உதிர விடாதே வெற்றி நிச்சயம்.

தமிழ்-99 விசைமுகத்தில் புள்ளி..!!

தமிழ்-99 விசைமுக அமைப்பு, தமிழில் அதிகமாகத் தட்டெழுதும் (டைப் செய்யும்) பயனர்களுக்குப் பல வசதிகளைத் தருகின்றது. அவற்றில் புள்ளி சேர்க்கையும் (auto-pulli) ஒன்று.

இந்த விதியின் சுருக்கம்:

1. ஒரு அகரமேறிய உயிர்மெய் எழுத்து இருமுறை வந்தால், முதலில் வந்த எழுத்தில் தானாகப் புள்ளி சேரும். சில எடுத்துக்காட்டுகள்:
முதல் தட்டு2வது தட்டுவிழைவு
க்க
ய்ய
ர்ர
ங்ங
ஜ்ஜ
2. கீழ்க்காணும் எழுத்துகள் இணையாக வந்தால் முதல் எழுத்தில் தானாகப் புள்ளி சேரும்:
முதல் தட்டு2வது தட்டுவிழைவு
ண்ட
ஞ்ச
ங்க
ந்த
ம்ப
ன்ற
தமிழ்-99 அமைப்பு முறையில் விதிமுறைகள் உள்ளன. இந்த அமைப்பு முறையை நடைமுறைப் படுத்தும் செயலிகள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகளில் மேற்குறிப்பிட்ட இரண்டும் அடங்கும். செல்லினத்தில் உள்ள தமிழ்-99 விசைமுகமும் இவ்விரு விதிகளையும் முழுமையாகக் கடைப்பிடித்து வருகின்றது.

புள்ளி தவிர்ப்பு

தானாகச் சேர்க்கப்படும் புள்ளி வசதி, தட்டெழுத்தை எளிமைப் படுத்தினாலும், சில சொற்களை எழுதும் போது சிக்கலை ஏற்படுத்துகிறது. குறிப்பாக வேற்று மொழி சொற்களைத் தமிழில் எழுதும் போது இந்தச் சிக்கல் தோன்றலாம்.
‘பூதத்தின்’, ‘சமமாக’, ‘சுந்தரராஜன்’, ‘மனனம்’, ‘கெமமான்’ (மலேசியாவில் உள்ள ஊர்), போன்ற சொற்களை எழுதும்போது, தேவை இல்லாத இடத்தில் புள்ளி சேந்து விடும். ‘பூதத்தின்’ என்று எழுதினால் ‘பூத்ததின்’ என்றும் ‘மனனம்’ என்று எழுதினால் ‘மன்னம்’ என்றும் வந்துவிடும். இதைத் தவிர்ப்பதற்கு புள்ளி தேவையற்ற இடத்தில் ‘‘ எழுத்தைத் தட்டலாம்.
எழுத்துக்காட்டுகள்:
சொல்தட்டு
பூதத்தின்ப ஊ த  த த இ ன புள்ளி
சமமாகச ம  ம ஆ க
சுந்தரராஜன்ச உ ந த ர  ர ஆ ஜ ன புள்ளி
மனனம்ம ன  ன ம புள்ளி
கெமமான்க எ ம  ம ஆ ன புள்ளி

சொல்லின் தொடக்கத்தில் ஏற்படும் சிக்கல்

‘சச்சின்’, ‘சச்சரவு’, ‘தத்துவம்’, ‘பப்பி’, ‘பப்புவா’ (நியூகினி) போன்ற சொற்கலில் ஒரே எழுத்தை தொடக்கத்தில் மும்முறை தட்டவேண்டும்.
எ.கா:  ச ச ச இ ன புள்ளி எனத் தட்டினால், ‘சச்சின்’ என்பதற்கு பதில் ‘ச்சசின்’ என்று தவறாகத் தோன்றும்.
‘ச’ அடுத்தடுத்து வருவதால், முதல் எழுத்தில் புள்ளி தானாகச் சேந்துவிடுகிறது. இதைத் தடுப்பதற்கும் ‘‘ எழுத்தைப் பயன் படுத்தலாம்.
சொல்தட்டு
சச்சின்ச  ச ச இ ன புள்ளி
சச்சரவுச  ச ச ர வ உ
தத்துவம்த  த த உ வ ம புள்ளி
பப்பிப  ப ப இ
பப்புவாப  ப ப உ வ ஆ
குறிப்பு: சொல்லின் தொடக்கத்தில் ஏற்படும் இச்சிக்கல் ஆண்டிராய்டு-செல்லினத்தின் 4.0.4ஆம் பதிகையில் தீர்க்கப்பட்டு எளிமையாகப்படும். எனினும் இவ்வழிமுறையை தொடர்ந்து பின்பற்றலாம்.
நான் இங்கு பகிர்ந்துள்ள பதிவு ஆரம்பத்தில் நானும் இந்த பிரச்சனையை  மேற்கொண்டேன்.அதன் காரணமாக தான் இன்று இதை பகிர்ந்துள்ளேன்.இனி புதியதாக தமிழ் தட்டச்சு செய்யும் அனைவருக்கும் உதவும் என்ற நோக்கில் பகிர்ந்துள்ளேன்.
நன்றி.

நீல்ஸ் ஹென்ரிச் ஏபல்

  







      நீல்ஸ் ஹென்ரிச் ஏபல் நார்வே நாட்டில் தோன்றிய மிகச்சிறந்த கணிதமேதை மட்டுமின்றி, புகழ்பெற்ற மனிதரும் ஆவாா்.  ஆஸ்லோ நகாில் அமைந்துள்ள அரண்மனைத் தோட்டத்தில் ஏபலின் சிலை நிறுவப்பட்டுள்ளதே இதற்குச் சான்றாகும்.  இது சுற்றுலாப் பயணிகளுக்கு ஓர் அறிய காட்சிப் பொருளாக விளங்குகிறது.  ஸ்காண்டி நேவிய கணித மேதைகளுள் ஏபல் முதன்மையானவர்.


     “பெர்ன்ட் மிக்கேல் ஹாம்போ” என்னும் கணித ஆசிரியர் ஏபலின் கணித ஆசிரியராக விளங்கினார்.  இவர் ஏபலின் கணித அறிவைப் புரிந்துகொண்டு, கணிதத்தைக் கற்கும்படி அறிவுறுத்தினார்.  ஹாம்போவின் மேற்பார்வையில் ஏபல், மிகச்சிறந்த கணிதமேதைகளான லாக்ரேஞ்ஜ், லாப்லஸ், யூலர் போன்றோரின் கணிதங்களைக் கற்றுத் தேர்ந்தார்.  நீள்வளைய முழுமை (Elliptic Integrals) பற்றி ஏபல் கற்றறிந்தார்.  அது குறித்த கட்டுரை ஒன்றையும் எழுதினார்.
  
      1823ஆம் ஆண்டு கோபென்ஹேகன் நகருக்குச் சென்ற ஏபல், பல டேனிஷ் நாட்டு கணித மேதைகளைச் சந்தித்தார்.  பிறகு அங்கிருந்து கிறிஸ்டியானியா நகருக்குத் திரும்பி வந்தார்.  ஏபல், தான் ஏற்கனவே முயந்சி செய்த ஐந்தொகுதி சமன்பாடு (Quintic Equation) பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.
  
      இக்காலகட்டத்தில் “அகங்ட் லியோபோல்டு க்ரெல்” என்பவா் இவரது முயற்சிகளை ஆதரித்து, புரவலராக (patron) ஆனாா்.  க்ரெல் ஒரு கட்டடப் பொறியாளராதலால் அவருக்கு கணிதத்தில் அதிக விருப்பம் ஏற்பட்டது.  அவர் தனிக்கணிதம் மற்றும் செயல்முறைக் கணிதம் பற்றிய பத்திரிக்கை ஒன்றை வெளியிட்டார்.   அதற்கு “க்ரெல் ஜர்னல்” எனப் பெயரிட்டார்.
  
      1826ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் நேரில் சந்தித்தனர்.  க்ரெல்லுடன் ஏபல் பல நாடுகளுக்குச் சென்றார்.  மேலை நாடுகளில் 2 ஆண்டுகள் படிப்பு முடிந்தபின் 1827-ல் கிறிஸ்டியான நகருக்குத் திரும்பினார்.
  
     கணிதத்தில் சிறந்த அறிவைப் பெற்றிருந்தும் ஏபலுக்கு சரியான வேலை எதுவும் கிட்டவில்லை.  இது தவிர அவருக்கு நிறையவே கடன் சுமையும் இருந்தது.
  
     அவர் பல மாணவர்களுக்கு கணிதம் கற்பிக்கத் தொடங்கினார்.  ஏபலின் கணிதக் கண்டுபிடிப்புகள் ஜெர்மன், பிரான்ஸ் போன்ற நாடுகளில் பெரிய வரவேற்பைப் பெற்றன.
    
      ஸ்டாக்ஹோம் அகாடமி ஏபலின் கணித அறிசை அங்கீகரித்தது.  டிராந்தியம் நகரில் அமைந்திருந்த நார்வேஜியன் ராயல் சொசைட்டி அமைப்பில் ஏபல் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  
     1826ஆம் ஆண்டுக்குப் பின்பு ஏபல், உயிர் வாழ்ந்தது வெறும் மூன்று ஆண்டுகள் மட்டுமே.  ஏபலுக்கு காசநோய் ஏற்பட்டு, உடல்நிலை மிகவும் பலவீனமானது.  அந்நிலையிலும் அவர் தொடர்ந்து கணித ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்தார்.  கணித ஆராய்ச்சிக் கட்டுரைகள் பலவற்றையும் எழுதினார். அவர் 1829ஆம் ஆண்டு, ஏப்ரல் 6ஆம் நாள் தனது 27ஆவது வயதில் இறந்தார்.
  
      ஏபலின் கணித அறிசைப் புரிந்து கொண்ட பெர்லின் பல்கலைகழகம் அவருக்கு பேராசிரியர் பணி தருவதாக செய்தி அனுப்பியது.  ஆனால், அச்செய்தி வருவதற்கு 2 நாட்கள் முன்பே, ஏபல் மறைந்தார்.

செல்லினம் பதிவிறக்க வழிமுறைகள்..!!

செல்லினத்தை உங்கள் ஆண்டிராய்டு கருவிகளில் பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறை:
IMG_4575
1. Play Store செயலியைத் திறந்து Sellinam என்று தேடுக.
2. Install எனும் கட்டத்தைத் தொட்டவுடன் சில செயல்களுக்கான அனுமதிகளைக் கேட்கும்போது ‘Accept’ எனும் கட்டத்தைத் தொடுக.
3. செல்லினம் உங்கள் கருவியில் பதியப்பட்டவுடன், ‘Open’ எனும் கட்டம் தோன்றும், அதனைத் தொடுக.
4. செல்லினத்திற்கான அமைப்புச் செயல் தொடங்கும். Get Started எனும் கட்டத்தைத் தொட்டு, அதன்பின் தோன்றும் ‘Enable in Settings’ கட்டத்தைத் தொடுக.
5. உள்ளீட்டு முறைகள் வரிசையாகத் தோன்றும். அதில் செல்லினம் ‘ON’ செய்யப்பட்டிருக்க வேண்டும். இதனை உறுதி செய்தவுடன் முந்தைய திரைக்குச் செல்க.
6. இப்போது Switch Input Methods எனும் கட்டம் தோன்றும். அதனைத் தொட்டு செல்லினத்தை உங்கள் இயல்பான உள்ளீட்டு முறையாகத் தெரிவு செய்க.
7. இப்போது ‘Select Keyboards’ எனும் கட்டம் தோன்றும். இதனைத் தொட்டு, உங்களுக்கு விருப்பமான உள்ளீட்டு முறையைத் தெரிவு செய்க.
குறிப்பு: ஹுவாவே, ஆசுஸ் முதலிய கருவிகளை வைத்திருப்போருக்கு தமிழ் உள்ளீட்டு முறைகள் தோன்றா. ஆங்கிலமும் மலாய் மொழி உள்ளீட்டு முறைகள் மட்டுமே தோன்றும். உங்கள் கருவியில் அவ்வாறு இருந்தால், இந்தப் பதிவைக் காண்க: Issues with Sellinam on Huawei, Asus and other devices.
9. இனி உங்கள் ஆண்டிராய்டு கருவியில் உள்ள குறுஞ்செய்தி, வாட்சாப், மின்னஞ்சல், வைபர், முகநூல், டிவிட்டர் முதலிய செயலிகளில் ஆங்கிலத்தில் உள்ளிடுவதைப் போலவே தமிழிலும் உள்ளிடலாம்.
10. உங்கள் கருவியில் ஆங்கில உள்ளீட்டுக்காக சுவைப் போன்ற மற்ற முறைகளைப் பயன்படுத்தினால், அவற்றுக்குச் சென்று தமிழுக்காக மீண்டும் செல்லினத்துக்கு வந்துவிடலாம். லாலிபாப் (Lollipop) பதிப்பை வைத்திருப்போர், விசைமுகத்தின் கீழ் உள்ள விசைப்பலகைச் சின்னத்தைத் தொட்டு மற்ற உள்ளீட்டு முறைகளுக்குச் செல்லலாம். அதே சின்னத்தைக் கொண்டு செல்லினத்திற்கும் திரும்பி வரலாம்.  கிட்கெட், செலிபீன் பதிப்புகளை வைத்திருப்பவர்கள், செல்லினத்தில் உள்ள ‘மு’ சின்னத்தை சற்றுநேரம் அழுத்தி (long press), உள்ளீட்டுமுறைகளுக்கான பட்டியலைக் காணலாம்.
இதனை செய்து பார்த்து பயன் பெறவும் நண்பர்களே.இந்த பகிர்வு என் கல்லூரியில் இருக்கும் மாணவிகளுக்கு இருக்கும் பிரச்சனைக்கு உதவியாக இருக்கும் என்பதால் இணையத்தில் தேடி பகிர்ந்துள்ளேன்.அவர்களுக்கும் இதை இப்பொழுது படித்துக் கொண்டிருக்கும் தங்களுக்கும் உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
நன்றி.

மயக்கும் ஓவியம்

வில்லியம் காங்ரீவ்

                                             வில்லியம் காங்ரீவ்(19ஆம் நூற்றாண்டு)

வில்லியம் காங்ரீவ் பார்ட்செ என்ற இடத்தில் பிறந்தார்,தனது பட்டப்படிப்பை டிரினீடி கல்லூரி டப்லினில் படித்தார்.அங்கு அவர் ஜொனதன் ஸ்விஃட்டை சந்தித்து நன்பரானார்.அவரது அனைத்து நாடக நூல்கல் அனைத்தும் அவரது முப்பது வயதிற்குள் எழுதி முடித்தார்.ஏனைய காலங்களில் சமுதாயத்தில் நல்ல ஒரு தலைசிரந்த மனிதராய் களித்தார்.மேலும் அரசாங்கமிடம் இருந்து அவருக்கு ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது.பின்பு வில்ஸ் தேனீர் விடுதியில் டிரைடனை சந்தித்து அவரது நெறிகளை பின்பற்றினார்.
இவர் பதினெட்டாம் நூற்றாண்டை சேர்ந்தவர்.இவர் எழுதிய முதல் நாடகம்
                        ``த ஓல்ட்டு பாசுலர்’’.
இந்த நாடகம்``டுரூரி லேன்’’என்ற திரையரங்கிள் தயாரிக்கப்பட்டது.இதனையடுத்து
`                       ``டபுல் டீலர்’’
என்ற நாடகம் அவரது நகைச்சுவை நயத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியது.தம் முப்பது  வயதில் இவர்
``லவ் ஃஆர் லவ்’’,
``தி வே ஆப் தி வேல்ற்டு’’
என்ற நகைச்சுவை நாடகத்தை இயற்றினார் பின்னர்
``தி மார்னிங் பிரிட்ச்’’
என்ற ஒரு சோகக்கதை எழுதினார்.இவர் எழுதிய நூல்களில் சமக்காலத்தில் ஆண்ட அரசியான எலிசபெத்தின் ஆட்சியை பற்றியும் அந்த சமூகத்தை பற்றியும் இவர் குறிப்பிடவில்லை.
அவரது படைப்புகளில் ``நகைச்சுவை நயதை’’சிறந்த முறையில் வடிவமைத்திருப்பார்.மேலும் இவரது கதைளில் தெளிவு,உயிரோட்டம்,வரிகளில் இசையின் கலப்பு, கதாப்பாத்திரங்களை விவரிக்கும் முறை,ஆகியன தனித்துவம் வாய்ந்தவை.ஒரு நாடக எழுத்தாளராய் இவரது பணிகாலம் மிகவும் குறைவு.சிறு காலங்கள் இவர் கவிதை,மொழிபெயர்ப்பு ஆகியன செய்தார்.இவர் ஒரு திருமணம் ஆகாதவர்.ஆனால், ஹென்ரீடா என்ற பெண்னுடன் விவகாரம் இருந்தது.மேரி என்ற குழந்தையும் இருந்ததாக கருதப்பட்டது. இவர் கான்டிராஸ்ட்(கண்களில் நீர் வழிதல்) கவுட்(மூட்டுகளில் வலி)போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டார்.பின்பு லண்டனில் ஒரு விபத்தை சந்தித்து அதிலிருந்து மீள முடியாமல்1729இல் மரணம் அடைந்தார். இவரது சடலம் வெஸ்ட் மினிஸ்டர் அபே இல் புதைக்கப்பட்டது.