புதன், 12 பிப்ரவரி, 2020

தமிழ்மொழி

அன்னை சொன்ன மொழி
ஆதியில் பிறந்த மொழி
இணையத்தில் இயங்கும் மொழி
ஈடிலாத் தொன்மை மொழி
உலகம் போற்றும் மொழி
ஊர்கூடி வியக்கும் மொழி
எட்டுத்திசையும் பரவிய மொழி
ஏட்டிலும் எழுதும் மொழி
ஐயத்தை நீக்கும் மொழி
ஒற்றுமை வளர்க்கும் மொழி
ஓதியே உயர்ந்த மொழி
ஔவையார் வளர்த்த மொழி
அஃதே நம் தமிழ்மொழி

செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

பூப்போல ஒரு சிரிப்பு


பிரேமா மெய்யப்பன் 
முதுநிலை இரண்டாமாண்டு கணிதம்


வாழ்க்கையில் முயற்சிகள் தவறலாம். ஆனால் முயற்சிக்க தவறலாமா?
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும் (குறள்).
முயற்சி திருவினை ஆக்கும் (ஆன்றோர் வாக்கு)

தமிழ் இதழ்கள்

பிரபலங்கள் பலர் நடத்திய தமிழ் இதழ்களை அறிவோம்
     தேசபக்தன், நவசக்தி          -     திரு.வி.கல்யாணசுந்தரனார்
     குயில்                                       -      பாரதிதாசன்
     சுதேசமித்ரன்                         -      ஜி.சுப்பிரமணிய ஐயர்
     பாலபாரதி                               -      வ.வே.சு. ஐயர்
     ஞானபோதினி                      -      சுப்பிரமணிய சிவா
     இந்தியா, வி்ஜயா                 -      சுப்பிரமணிய பாரதி
     எழுத்து                                     -      சி.சு.செல்லப்பா
     குடியரசு, விடுதலை           -      பெரியார்
     திராவிட நாடு                        -      அண்ணா
    தென்றல்                                  -       கண்ணதாசன்
    சாவி                                           -       சா.விஸ்வநாதன்
    கல்கி                                          -       ரா.கிருஷ்ணமூர்த்தி

திங்கள், 10 பிப்ரவரி, 2020

மடல்

     சங்ககாலத்தில் காதலில் ஏமாற்றம் உற்ற ஒருவன் தன்னைத்தானே வருத்திக்கொண்டு உயிர்விடத் துணிவதாகப் பாடும் துறை “மடல்” எனப்படும். பனை மடல்களால் குதிரை வடிவம் செய்து அதன்மேல் இருந்து தன் காதலியின் உருவத்தைத் தீட்டிய படத்தை ஏந்தி, ஊரார் நடுவே நின்று உண்ணா நோன்பு கிடந்து அழியத் துணிவதாகப் பாடும் கற்பனைத் துறை இது. தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் வழக்கம் ஆண்களுக்கு மட்டுமே உண்டு பெண்களுக்குப் பொருந்தாது என்ற மரபு உண்டு. ஆனால் அதற்கு மாறாகத் திருமங்கையாழ்வார் தம்மை நாயகியாகவும் திருமாலை நாயகனாகவும் கொண்டு பாடுமிடத்தில் அங்கே பெண்ணே காதல் கைகூடப் பெறாமல் ஏங்குவதால் மடல் ஏறும் முயற்சி பெண்ணுக்கு உரியது என்று சிறிய திருமடல், பெரிய திருமடல் ஆகிய இரண்டு மடல் பாட்டுகளிலும் நாயகி மடல் ஏறும் முயற்சியே உள்ளது என்று திருமங்கையாழ்வார் கூறியுள்ளார்.