புதன், 4 மார்ச், 2020


               தமிழ் நூல்களும், தமிழர் வாழ்வும்

                   உலகில் எங்கு  சென்று பெற்ற இயலாத வாழ்க்கை தத்துவ நெறிகளை தொகுத்து வழங்கிய சிறப்பு மிக்க செம்மொழி நம் தாய்மொழி.
                   ஐய்யன் வகுத்த திருக்குறளில் இல்லா நெறி அவரது ஈரடி குறளில் இல்லா வழி வாழ்க்கை இதில் மீதும் ஏதேனும் உண்டோ. இன்று நமது  சமூகத்தில் ஏற்படும் அத்துணை இல்லற பிரச்சனைகளுக்கும் நாம் இவ்வாறான நூல்களை தவிர்ப்பதேயாகும்.
                      பகவத்கீதையில் இருக்கும் வாழ்வியல் செயல்திட்ட தத்துவங்கள் ஜென்மங்கள் கடந்து செய்ய  வேண்டிய அறநெறிகளை வலியுறுத்துகிறது.
                      அன்றைய தமிழர்கள் அனைவருமே அதனை கற்று, அதன் நுட்பத்தினை ஏற்று வாழ்க்கையை இன்புற்று வாழ்ந்தனர்.
                      ஆனால், இன்றோ திரைப்படத்தின் மோகத்திற்கு ஆளாகி தமது வாழ்க்கையில் தோற்று அனைத்து விதமான தீமைகளிலும் எளிதில் ஈடுபட்டு வருந்துகின்றனர்.
                       குழந்தைகளை வளர்க்கும் வேளைகளில் தொலைநோக்கு சிந்தனைகள் இன்றி செயல்பட்டு அவர்களையும் வழிநடத்த தவறிவிட்டனர்.அந்தந்த சமயங்களுக்கு ஏற்றவாறு கட்டுப்பாட்டுடன் அனைத்து மக்களும் செயல்பட்டு மகிழ்வோடு வாழ எழுதிய நூல்களை படித்து பயன்பெறாது.
                        சாதி,சமயமாய் மாற்றி ஒரு சில சுயநலவாதிகளால் பொதுமக்களின் வாழ்வியல் நெறிகளை  சிதைத்துவிட்டனர்.  இந்நிலையினை போக்க வேண்டும்.
                        நம் முன்னோர்கள் எவ்வித வேறுபாடும் கருதாமல் சகோதரத்துவத்தினை வளர்த்துவிட்டனர்  இன்றோ உடன்பிறந்த சகோதர்களே வேற்றுமையுணர்வுடன் செயல்பட்டு வருகின்றனர்.
                         நாம்,நமது முன்னோர்கள் வாழ்ந்த வரலாற்றை அறியவும், வாழ்வியல் நெறிகளை கற்கவும் நமது சங்க நூல்களே சிறந்த வழியாகும்.
                        அண்டை நாடுகளில்  இருந்து வந்த பிற பொழுதுபோக்கு செயல்களை செய்து நேரத்தினை  செலவழிக்காமல் நல்ல நூல்களை கற்று பின் மற்றவர்களுக்கு கற்பித்து வாழ்வதே இன்பத்தினை தரும்.
                          இத்துணை தலைமுறைகள் ஈடேறாமல் பூண் கட்டுக்கதைகளை பேசி காதுகளை களைப்படைய செய்யாதீர்கள்.
                          வரலாறாய் மாறி வருங்காலம் போற்ற உரமாகுங்கள்!  
                     உயிர் பிரிந்தாலும் உயர்ந்து நிற்பாய்!
                     இவ்வுலகில் தமிழுடன், தமிழனாய் !


                           தமிழும்   தமிழரும்

                               உடலும், உயிருமாய் விளங்கிய தமிழ்மொழியும், தமிழரும் இன்றியமையா  புகழப்படைத்து இவ்வையத்தையே வியப்பில் ஆழ்த்தினர். உடலுக்கு உடையை வைத்தது போல் தமிழுக்கு வைத்தான் சங்க தமிழன்.
             ஆனால், இன்று உயிரான தன் மொழியின் பயன்பாட்டினை குறைப்பதனாலும், தன் தாய்மொழி கல்வியை வெறுப்பதனாலும் உயிரற்ற நடைபிணமாய் வாழ்கிறான் இன்றைய தமிழன்.
              தமிழ்பாடி நாடெல்லாம் திரிந்த அன்றைய தமிழுக்கு அமிர்தமாய் இருந்த நம் தாய்மொழி, இன்று வின்வெளிக்கு செல்லும் அளவிற்கு வளர்ச்சி பெற்று உயர்ந்து நிற்கும் நம் நாட்டு மக்களுக்கு நம் தாய்மொழி விதமாய் தோன்றுகிறது.
              முன்னேற்ற பாதையில் செல்வதை எண்ணி நாம் அனைவருமே நமக்கு சொந்தமான நாட்டை அந்நியனுக்கு கொடுத்துவிட்டு, நிபந்தனைகளை ஏற்று செயல்பட்டு வருகின்றோம்.
              தன்னுடைய தாய்மொழியை மதிக்காத இடத்தில் நின்று பொன், பொருள் தேடி நிற்பது தாயை விட்டு பிறரிடம் யாசிப்பதற்கு சமம்.வளம் மிகுந்த நாட்டின், செல்வங்கள் நிறைந்த நாட்டின் பிள்ளைகளாகிய நாம் மட்டும் யாசிக்கவில்லை.
               அத்துணை வளமும், பலமும் கொண்ட நம் தாய்திருநாட்டின் தரத்தினையும் குறைத்து வருகிறோம்.
                எத்துணை பெரிய துன்பத்திலும், நம் நாட்டை அந்நியரிடம் இருந்து காப்பாற்றி சுதந்திரம் பெற்ற அன்றைய தமிழன் தமிழ் மொழியை தன் உயிராய் ஏற்று, தமிழ்மொழியின் உடலாக செயல்பட்டான்.
                  தமிழ்மொழியின் வளர்ச்சிக்காக பாடுபட்டான்
பண்டையத் தமிழன்!
              கல்வி, தொழில், அறிவியல், வணிகம்,அரசியல் என நாட்டின் அத்தனை செயல்பாடுகளும் என்று நம் தாய்மொழியில் நடக்கின்றதோ அன்று தான் நம் நாடு முழுமையான சுதந்தர நாடாக தோன்றும்.
                   பிற மொழியை கற்பது தவறல்ல! தம் தாய்மொழியையும் பிறர் கற்கும் அளவிற்கு பரவச் செய்பவனே உண்மையான தமிழன்!
                    அன்றைய காலகட்டத்தில் தமிழன், தாய்மொழியில் நுணுக்கமாக பெற்ற அறிவும், ஆளுமையும் இன்னும் அத்துணை அண்டை மொழிகளை கற்றாலும் அதற்கு ஈடாகாது.

செம்மொழியாம் தமிழ்மொழி 

                   சொல்வளங்கள் மிஞ்சும் மொழியாம் செம்மொழி சொற்களுக்கே உரிய மொழியாம் நம் தமிழ்மொழி எம்மொழியும் பெறா இலக்கணம் பெற்ற பொன்மொழியம் தமிழ்மொழி.
                                 செல்வதை மிஞ்சும் மொழியாம் தமிழ்மொழி 
            செய்யுளின் ஆயுள் மொழியாம் செம்மொழி தமிழ்மொழி இறக்கும் வரை புதிய புதிய நடைகளும் இலக்கிய, இலக்கண வகைகளும் தோன்றி கொண்டே தான் இருக்கும்.
                              சேரனின்  ஆட்சிமொழியாம் செம்மொழி 
           முச்சங்கம் வைத்து முத்தமிழ் வளர்த்த சிறப்பு மிக்கமொழி தான் நம் தாய்மொழி . மதுரை மண்ணின் மைந்தனாய் தோன்றிய மொழியே நமது தமிழ்மொழி.
               மாறாத மதிப்பின் மொழியாம்  தமிழ்மொழி .இன்னும் எத்துணை ஆண்டுகள் கழிந்தாலும் துடிப்புடன் செயல்பட்டு விளங்கும் அறிய மொழி தான் நமது தாய்மொழி
                     அன்றும்,இன்றும்,என்றும் தனிமொழி நம் தமிழ்மொழி                     எம்மொழியின் உதவியும் இன்றி பேசுவதற்கு இயன்ற மொழிநடையை உடையது தமிழ்மொழி.
                உணர்வினை ஊட்டும் மொழியான நமது தமிழ் மொழி கேட்ட்கும் செவிகளுக்கு விருந்தாக , பேசும் வாய்ற்க்கு அமுதாக இருக்கின்றது
ஊக்கத்தின் உச்ச நிலையாம் தமிழ்மொழி குழந்தைகளுக்கு பாடும் தாலாட்டு முதலே ஊக்கத்தோடு  செயல்பட உதவும் உன்னதமான மொழியானது நம் தாய்மொழி.
                   விதைகளின் விருட்ச மொழியே தமிழ்மொழி
          விதைகளில் இருந்து விருட்சமாய் வளர்ந்த வீரமான மொழி நம் தமிழ்மொழி புல்வெளியில் பனித்துளியே செம்மொழி அழகிய நடைகளை உடைய மொழியே நம் தமிழ்மொழி
                 இருளின் சுடர் ஒளியே செம்மொழி 
             வாழ்க்கையில் திறன் கொண்டு தத்தளித்த பலருக்கு எளிய நடையில் பேச, படிக்கச் உதவி இருளில் இருந்து மீது ஒளி தந்து உதவிய நட்புணர்வுடையது நம் தமிழ்மொழி
             அன்னையின் அன்புமொழியே தமிழ்மொழி அய்யன் குறளில் மிதந்த ஆற்றல் மிக்க மொழியே செம்மொழி ।  வாழ்க்கை நெறியை தொகுத்து காட்டிய தொன்மையான மொழி
               அழியா  புகழில் ஆழ்ந்த மொழியே செம்மொழி 
              உலகின் உன்னத மொழியே தமிழ்மொழி ஊர் போற்றும் கோவில் மணியாய் விளங்கியது நம் தாய்மொழி 
                     கம்பர் கவியின் வாரியாம் செம்மொழி 
              கற்பதிலும்,கற்றவர் போற்றுவதிலும் என்றுமே செம்மொழியாம் நம் தமிழ்மொழி 

சனி, 29 பிப்ரவரி, 2020

பழமொழி

புலி பசித்தாலும் புல்லை திண்ணாது
 நாய்,பூனை, போன்ற ஒரு சில விலங்குகள் தன் குட்டிகளை ஈன்றவுடன் பிரசவ வலி மற்றும் அப்போது ஏற்படும் அகோர பசியின் காரணமாக அவை ஈன்ற சில குட்டிகளை தானே தின்றுவிடும். ஆனால் புலி இப்படி தன் குட்டிகளை தானே உண்பது இல்லை அவைகளை பத்திரமாகவும் தன் பார்வையில் மிகுந்த கவனத்தோடு பராமரிக்கிறது. அதனாலே புலி பசித்தாலும் புல்லை திண்ணாது என்கிறோம். 

மொழி

தாயும்
தன் குழந்தையும்
பேசிக்கொள்ளும்
சின்ன சிரிப்பே
யாரும் அறியாத
மொழி