செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

புதுச்சட்டை

மூதறிஞர் ராஜாஜியைப் பார்த்து ஒரு பத்திரிகை நிருபர் கேட்டார். “சென்ற ஆண்டு ஆதரித்த கட்சியை இந்த ஆண்டு அகற்ற எண்ணியது ஏன்? உங்களுக்கு ஒரு நிலையான கொள்கை இல்லையென்று ஆகிவிட்டதா என்றார்”.

அதற்கு ராஜாஜியின் பதில், “சென்ற ஆண்டு வரை எனக்குப் பொருத்தமாயிருந்த சட்டை, இந்த ஆண்டு சின்னதாகச் சுருங்கிவிட்டதால் நான் புதுச்சட்டை தைத்துக்கொண்டேன். இதிலென்ன தப்பு”? என்றார்.

பயனில்லாத காாியம்

பயனற்ற மண்ணில் பெய்த மழை
சூாிய வெளிச்சத்தில் வைத்த விளக்கு
குருடனை மணந்த அழகி
நன்றி கெட்டவனுக்கு செய்த நற்காாியம்
                                              -அரேபிய பொன்மொழி

பதிலடி

லாயிட் ஜாா்ஜ் ஒரு கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த போது ஒருவன் எழுந்து உங்கள் தாத்தா ஒரு கழுதை வண்டியை ஓட்டியவா் என்பது ஞாபகம் இருக்கிறதா ? என்று ஏளனமாகக் கேட்டான் உடனே லாயிட் ஜாா்ஜ் அமைதியாக என் தாத்தாவின் வண்டி தொலைந்து விட்டது கழுதை மட்டும் உயிரோடு இருப்பதை இப்போது கண்டுகொண்டேன் என்றாா். 

உழைப்பாளியின் வருத்தம்

உழைப்பவன் வருத்தம்
அடைந்தால் உலகம்
அழிந்துவிடும். – பொய்இல் புலவர்(திருவள்ளுவர்). 

திங்கள், 3 பிப்ரவரி, 2020

எமில்

“எமில் அடொல்ஃப் வான் பெ(ஹ்)ரிங்

பிறப்பு - மார்ச் 15, 1854
இறப்பு - மார்ச் 31, 1917
நாடு - ஜெர்மனி

இவர் தொண்டை அடைப்பான் எனும் கொடூர நோய்க்குத் தடுப்பூசி மருந்து கண்டறிந்த மனிதக் காவலர். உயிர் குடிக்கும் இந்நோய்க்கு அற்புதமான தீர்வைத் தந்ததற்காக 1901-ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான முதல் நோபல் பரிசு எமிலுக்கு வழங்கப்பட்டது” (நோபல் வெற்றியாளர்கள், பாகம் 3, விகடன் பிரசுரம், முதற்பதிப்பு, சூன் - 2009, பக்கம் 10-12)