செவ்வாய், 21 ஜனவரி, 2020

நிலவே

இருண்ட வானத்தில் மின்னிய முகம்
முகம் பார்க்கப் பெண் போலத் தெரிகிறது
ஆனால் உருவம் இன்றிக் காணப்படுகின்றாள்
இந்த வானத்தில் யார் துணையும் இன்றி நிற்கிறாளே
நிலவே உன் துணை நானே

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

அன்பே

என்னை யாரென்று கேட்டாயே
நான் யாரென்று உனக்குத் தெரியாதா
உண்மை தெரிந்
தால் என்னிடம் திரும்பி வருவாயா
எப்பொழுது உன் அன்பை என்மீது காட்டுவாய்
அதுவரை உன் அன்பிற்காகக் காத்திருப்பேன்

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

நட்பு

மழை வந்தால் மண் மணம் பெருகும்
தாய் என்றால் மனதில் பாசம் வரும்
தந்தை என்றால் புது நேசம் வரும்
மழை வந்தால் மயில்கள் தோகை விரியும்
உலகைப் புரிந்துகொள்ளக் காலம் வரும்
என் நட்பைப் புரிந்துகொள்ள அன்பு மட்டுமே வரும்

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

உலக வாழ்க்கை

நாட்கள் நகருகின்றன அதன் பாதை காலம்
காலத்தின் கைகளில்தான் நம் வாழ்க்கை
வாழ்க்கையின் முடிவு செல்லும் பாதை கடவுள்

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

அன்பு

மரம் வளர வருடம் போதும்
நெல் வளர மாதம் போதும்
செடி வளர வாரம் போதும்
கொடி வளர நாட்கள் போதும்
என் அன்பை நீ புரிந்துகொள்ள
ஒரு நொடி போதும்

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்