எப்போதும் துணையாக இரு,
ஒருபோதும் துரோகியாக இருக்காதே,
எப்போதும் நண்பனாக இரு,
ஒருபோதும் நயவஞ்சகனாக மாறிவிடாதே,
எப்போதும் அன்பாக இரு ,
ஒருபோதும் அடிமையாக இருக்காதே,
எப்போதும் விழிப்புடன் இரு,
ஒருபோதும் சலுப்போடு இருக்காதே,
எப்போதும் கேள்விக்கு பதிலாக இரு,
ஒருபோதும் குழப்பத்தின் பதிலாக, இருக்காதே,
எப்போதும் தேடலில் இரு,
ஒருபோதும் தொலத்ததை தேடாதே,
இப்படி அறிவுரை ஆற்றியது
அனுபவம்!!
வியாழன், 19 செப்டம்பர், 2019
இப்படிக்கு அனுபவம்
ஆகலாம் அப்துல்கலாம்
இது உன் இளமைக் காலம்இனிமைக் காலமாக இருக்கலாம்
இகழ்ச்சி அதை நீ இன்று ஏற்கலாம்
இழிவுகளைக் கொன்று புதைக்கலாம்
புகழ்ச்சி அதை மனதில் பதுக்கலாம்
வளர்ச்சி பெற நாளும் உழைக்கலாம்
தோல்விகள் பல நீ கண்டிருக்கலாம்
முயற்சி பல நீ செய்திருக்கலாம்
தன் உயிரைவிட
உன் உறவை வளர்க்கலாம்
உயர்ந்த உச்சிகளும்
உனக்கு உதிரிப்பூக்கள் ஆகலாம்
நல்லதோர் தலைவன் வேண்டி
நாடே இன்று காத்திருக்கலாம்
நிச்சயம் நீயும் ஆகலாம்
நாளை அப்துல்கலாம்
பவித்ரா வெங்கடேசன்
மூன்றாமாண்டு கணினிப் பயன்பாட்டியல்
குறிப்பு: "தினத்தந்தி” நாளேட்டின் 16.09.2019-ஆம் தேதியிட்ட பதிப்பில் “மாணவர் ஸ்பெஷல்” என்னும் பகுதியில் இக்கவிதை வெளியிடப்பட்டது.
ஓராண்டின் ஆறு பருவங்களும் பெரும் பொழுதுகள் எனப் பகுக்கப்பெறும்.
கார்காலம் - ஆவணி,புரட்டாசி
கூதிர்காலம் - ஐப்பசி,கார்த்திகை
முன்பனிக்காலம் - மார்கழி,தை
பின்பனிக்காலம் - மாசி,பங்குனி
இளவேனிற்காலம் - சித்திரை,வைகாசி
முதுவேனிற்காலம் - ஆனி,ஆடி
கார்காலம் என்பது மழைக்காலம்
வேனில் என்பது வெயில் காலம்
கூதிர் என்பது குளிர்காலம்
முன்பனி என்பது மாலையில் பின்பனி
பின்பனி என்பது காலையில் முன்பனி
வேனில் என்பது வெயில் காலம்
கூதிர் என்பது குளிர்காலம்
முன்பனி என்பது மாலையில் பின்பனி
பின்பனி என்பது காலையில் முன்பனி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)