எவன் சிறந்தவன் பணம் உள்ளவனா.....
இல்லவே இல்லை...
பெற்றோர் உடன் உள்ளவனே
சிறந்தவன்.....
புதன், 26 செப்டம்பர், 2018
எவன் சிறந்தவன்
ஊழல்
ஊழல் என்பது புற்றுநோய் போல் வளர்ந்து கொண்டிருக்கும் இந்நிலையில் உச்சநீதிமன்றதின் புதிய யோசனை.
தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளர்களும் தன் மேல் உள்ள வழக்கின் விவரம் பற்றியும் குற்றங்களை பற்றியும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
ஓட்டு போட வேண்டும் என்ற அதிகாரம் உள்ள மக்களுக்கு யார் மெல் எவ்வளவு குற்றங்கள் உள்ளது என்பது பற்றியும் தெரிந்து கொள்ள உரிமை உண்டு.
மேலும் தன் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் வழக்கு ரீதியான செய்திகளை தன் கட்சி இணையத்தில் வெளியிட வேண்டும்.
மேலும் இவ்வாறு செய்வது மற்றும் ஊழலை ஒழிப்பதற்கான வழி இல்லை. நம் ஓட்டை யாருக்கு போட வேண்டும் என்பதை யார் அதிகமாக பணம் தந்துள்ளார் என்பதை சார்ந்து இருக்க கூடாது.
அரசால் மட்டும் ஊழலை ஒழிக்க முடியாது. மக்களாகிய நாமும் ஒரு படி சென்று ஊழலை அழிக்க முற்பட வேண்டும். ஓட்டுக்கு பணம் வாங்குவதும், இலவசத்தை எதிர்பார்ப்பதும் ஒரு வகையில் ஊழல் என்பதை மக்கள் உணர வேண்டும்.
செவ்வாய், 25 செப்டம்பர், 2018
திங்கள், 24 செப்டம்பர், 2018
ஏழை என்றால் எவர்க்கும் எளிது
காய்கறிகளை தெருக்களிலும் காலணிகளை பெரிய மால்களிலும் விற்கும் நிலைக்கு ஆலகிய இவுலகில் ஏழைகளுக்கு உதவ நம் மனம் மறுக்கிறது. பெரிய கடைகளில் விலை அதிகமாக விற்கும் பொருள்களை பேரம் பேசாமல் வாங்கி கொண்டு செல்லும் நாம் வயதான ஏழை விற்கும் கடைகளில் தான் நம் சதுரியத்தை காட்டி பேரம் பேசி ஒரு பொருளை வாங்கி விட்டு அதுவும் போதாமல் இலவசமாக கொத்தமல்லி கருவேப்பிள்ளை கேட்கும் நம் மக்கள் அந்த ஏழை வியாபாரியின் வலியையும் துன்பத்தையும் புரிந்து கொள்வதில்லை. இந்நிலை மாற வேண்டும். இனியாவது ஏழைகளின் வழியை புரிந்து கொண்டு நம் எண்ணத்தை உயர்த்துவோம்....
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)