ஞாயிறு, 27 நவம்பர், 2016

தி ஹன்டர்’ஸ் டாக்

                                                            தி ஹன்டர்ஸ் டாக்

ஒரு முறை காட்டில் சில முயல்களை வேட்டையாட வேடன் ஒருவன் தன்,நாயுடன் சென்றான்.இருவரும் இப்படி நிறைய முறை வேட்டையாடி இருக்கின்றனர்.ஒருமுறை வேட்டையாடையில் செடியை விளக்கி முயலை தேடும்போது பாம்பும் கீரியும் சண்டையிடுவதைக் கண்டனர்.சில சமயம் அந்த விசப்பாம்பு சீரி கீரியைக்கொத்தியது. சில சமயம் அந்த கீரி பாம்பைக் கொத்தியது.அவைகளின் இந்த சண்டையை தீர்க்க முடிவு செய்து, வேடன் தன் துப்பாக்கியால் கீரியின் தலையில் சுட்டார்.பின் அதனை கவ்வி எடுத்து வரும்படி தன் நாய்க்கு ஆணையிட்டார்.
           

            நாயும் தன் உரிமையாளருக்கு விசுவாசமாக அந்த இடத்திற்கு சென்றது.இரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்த கீரியின் தலையை கவ்வும்போது, பாம்பு நாயை கொத்தி கொன்றது.அப்போது வேடன், ``நான் தவரு இழைத்துவிட்டேன் உண்மையான எதிரி பாம்புதான்.கீரியை சுட்டு என் விசுவாசமான நாயை இழந்துவிட்டேன்’’ என்று வருந்தினான்.

                                                            (தரவு)
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரீஸ்
***என்ற தொகுப்பிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதுதான் எனது படைப்பு.இதனை படித்ததன் தாக்கம் இந்த மொழிபெயர்பு.நன்றி


தி தாங்ஃப்பூல் ஈகில்

                                             தி தாங்ஃப்பூல் ஈகில்
மரவெட்டி ஒருவருக்கு ஒருநாள் காட்டில் வித்தியாசமான சத்தம் கேட்டது. பறவை வேடன் ஒருவன் மரத்தடியில் வலையை விரித்து அதன்மேல் தானியங்களைத் தூவிக் கொண்டிருந்தான்.துரதஸ்டவசமாக ஒரு கழுகு அதில் மாட்டிக்கொண்டு, உதவிக்காக கத்திக்கொண்டிருந்தது.உடனே, சத்தம் கேட்ட இந்த மரவெட்டி அதனை விடுவித்தார்.கழுகும் அவருக்கு நன்றி கூறி அங்கிருந்து சென்றது.


      சில நாட்களுக்கு பிறகு அதே மரவெட்டி ஒரு மணல்திட்டில் அமர்ந்து உணவு உட்கொண்டுக்கொண்டிருந்தான்.சில செடிகளும் மரங்களும் அவனுக்கு நிழல் தந்தன.திடீரென ஒரு கழுகு அந்த உணவை பறித்து சென்றது.தனது உணவை காப்பாற்ற தாண்டி குதித்தான்.அவன் காப்பாற்றிய அதே கழுகுதான் இந்த காரியத்தை செய்தது.அந்த கழுகு வேடனிடம் ``ஐயா உங்களுக்கு பின்னே ஒரு விசப்பாம்பு தங்களை கொத்த காத்திருந்தது.அதிலிருந்து தங்களை காப்பாற்றவே இப்படி செய்தேன்.ஏனெனில்,தங்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.’’என்றது.

                                                      (தரவு)
டைனி டாட் பெட் டைம் ஸ்டோரீஸ்
***என்ற தொகுப்பிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதுதான் எனது படைப்பு.இதனை படித்ததன் தாக்கம் இந்த மொழிபெயர்பு.நன்றி


சனி, 26 நவம்பர், 2016

தி கோல்டன் ஐடல்

                                                            தி கோல்டன் ஐடல்
 ஒரு பெரிய வணிக வயாபாரி ஒருவர் தனது வியாபாரத்தை விரிவாக்கும் பொருட்டுக்காக ஒரு பெரிய நகரத்திற்கு வந்தார்.அந்த நகரம் முழுக்க சுற்றி வந்து ஏதாவது வியாபாரம் பன்ன இயலுமா என்று பார்த்தார்.அப்படியே சிறிது நேரம் அலைந்து கொண்டிருந்தார்.அப்படி அலைந்து கொண்டு இருக்கையில் நெடுந்தூரம் சென்றார்,நகரம் முடிந்து கிராமம் தொடங்கியது.
            அங்கு பழங்கால கோயில் சற்று அழிந்துபோன நிலையில் இருந்தது.அங்கு அமர்ந்து இலைப்பாரையில் அவர் கண்ணிற்கு பாதி அழிந்த நிலையில் உள்ள அந்த இடத்தில் ஏதோ ஒரு பொருள் பல பலவென தெரிந்தது.உடனே அருகில் சென்று கற்களையும் மணல்களையும் கலைத்துப்பார்க்கையில் அவர்க்கு ஒரு தங்க சிங்கச்சிலை கிடைத்தது. ``அடடா
நான் மிகவும் அதிர்ஸ்டசாலி கடவுள் என்னை மேலும் பணக்காரனாக்க ஒரு நல்ல வழிகாட்டியிருக்கிறார்’’ என்றார்.இந்த கவர்ச்சியான சிங்கச் சிலை பொன்னால் செய்யப்பட்டது,அதனை நான் என் வீட்டிற்க்கு எடுத்து செல்ல வேண்டுமா?’’,பிறகு சற்று நேரம் யோசித்து,`` இதனால் எனக்கு என்ன பயண்?இரவில் இந்த சிங்க சிலை என்னை முறைத்து பார்த்து பயபுடுத்தினால் நான் என்ன செய்வேன்?அதற்கு நான் எனது வேலையாட்களை அனுப்பி அந்த சிலை அவர்களை என்ன செய்கிறது என்று தூறத்திலிருந்து நான் வேடிக்கை பார்ப்பேன்’’.என்று முடிவு செய்தார். அவரும் மற்ற பணக்காரர்களைப் போலவே எப்படி பணத்தை செலவிடுவது என்று தெரியாமல்,முட்டாள் தனமாக செயல்பட்டார்.

                                                      (தரவு)
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரீஸ்
***இந்த தொகுப்பிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதுதான் எனது படைப்பு.இதனை படித்ததன் தாக்கம் இந்த மொழிபெயர்பு.நன்றி


வியாழன், 24 நவம்பர், 2016

தி கேஜ்ட் மங்கி

                                                                தி கேஜ்ட் மங்கி
     

ஒரு ஊரில் ஏழை மனிதன் ஒருவன் வாழ்ந்து வந்தான்.அவனிடம் குரங்கு ஒன்று இருந்தது.அந்த குரங்கு நிறைய வித்தைகளை காட்டும். தினமும் அந்த குரங்கினை தூக்கி அலைந்து வித்தை காட்டி கடுமையாக உழைத்தான்.மக்களும் அந்த வித்தைகளை பார்த்து சில சில்லறைகளைக் கொடுப்பர்.அந்த சில்லறைகளை எடுத்து தன் உரிமையாளரிடம் கொடுக்கும் அந்த குரங்கு.ஒரு நாள் அந்த குரங்கை உரிமையாளர் பூங்காவிற்கு அழைத்துச் சென்றார்.
           

அங்கு கூண்டிற்குள் இருந்த குரங்குகளுக்கு மக்கள் பழங்கள் ரொட்டித்துண்டுகள் கொடுத்ததைக் கண்டது.அதைக் கண்டபின் இந்த குரங்கு மிகவும் அதிர்ஷசாலி, என்னைப்போல,உணவிற்கு கடினமாக உழைக்கத்தேவையில்லை.இலவசமாக உணவு அதனைத்தேடி வருகிறது என்று எண்ணியது.
            அன்றிரவு அந்த பூங்காவிற்கு சென்று தங்கி உணவுகளையும் சுதந்திரத்தையும் அனுபவித்தது.சில காலம் கழித்து அந்த குரங்கு சலுப்பாக உணர்ந்தது.உணவு உண்ண பார்வையாளர்கள் வரும்வரை காத்திருக்கவேண்டும்.பின்பு,தன் உரிமையாளரிடமே ஓடி வந்து உழைத்து பிழைத்தது.      
                                                      (தரவு)
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரீஸ்
***இந்த தொகுப்பிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதுதான் எனது படைப்பு.இதனை படித்ததன் தாக்கம் இந்த மொழிபெயர்பு.நன்றி