புதன், 27 மே, 2020

பிறர் பொருளை விரும்பாதே..


18. வெஃகாமை
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.                       171
பிறா் பொருளை விரும்பியவனின் குடியும்கெட்டு குற்றமும்
சேரும்
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.                       172
நடுநிலையாளர் பிறா் பொருளை விரும்பாதவராவா்
சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.                     173
அற இன்பம் பெரிதென உணா்ந்தவா்  சிற்றின்பங்களை விரும்பார்
இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்.                      174
புலன்களை வென்றவா் வறுமையால் பிறா் பொருளை விரும்பார்
அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்.                       175
பிறா் பொருளை விரும்பாமையல்லவா அறிவு   
அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்.                     176
அருள்வழியென்பதே நல்வழி, பொருள் வழியே தீயவழி
வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்.                      177
தவறாக சேர்த்த செல்வம் தேவையான நேரத்தில் பயன்படாது
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.                 178
செல்வம் குறையாமலிருக்க வழி பிறர்பொருளை விரும்பாமை
அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந் தாங்கே திரு.                      179
பிறா்பொருளை விரும்பாதவரிடமே செல்வம் தங்கும்
இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு.               180
ஆசை அழிவின் வழி, ஆசையின்மையே வெற்றியின் வழி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக