புதன், 3 மே, 2017

கலாமுக்கு வருத்தம் உண்டு..


Image result for அப்துல் கலாம்

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், ஒரே ஒரு வருத்தத்தை வாழ் நாள் முழுவதும் கொண்டிருந்ததாக அவரது உதவியாளர் ஶ்ரீஜன் பால் சிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், "கலாமுக்கு தனது வாழ்க்கை முழுவதும் ஒரே ஒரு வருத்தம் உண்டு. அது, 'தனது பெற்றோருக்கு அவர்களது வாழ்நாளில் 24 மணி நேரமும் மின்சார வசதி கிடைக்க செய்யும் வகையிலான வசதியை செய்து கொடுக்க முடியவில்லையே...!' என்பது தான்.

இதனை அவர் அவ்வப் போது என்னிடம் மிகுந்த வருத்தமுடன் பகிர்ந்து கொள்வார். அநேகமாக கலாம் தனது வாழ்க்கையில் கொண்டிருந்த ஒரே வருத்தம் இதுவாகத் தான் இருக்கும் என்று நினைக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

2 கருத்துகள்: