சனி, 13 பிப்ரவரி, 2016

விவசாயிகள் உருவான கதை..






ஒரு கத சொல்லுவாங்க ஊர்ல.
எமலோகம் இருக்கே எமலோகம் அங்க பாவ புண்ணியக் கணக்குப் பாப்பாங்களாம்.பாவம் பண்ணுன ஆளுக இடபக்கம் நிப்பாகளாம்; புண்ணியம் பண்ணுன ஆளுக வல பக்கம் நிப்பகளாம்.
புண்ணியம் செஞ்சவக சொர்க்கத்துகுப் போங்கன்னு அனுப்பிச்சிருவாகளாம்; ஊர்வசி ரம்பையெல்லாம் வருவாகளாம் ஒத்தாசைக்கு.
பாவம் செஞ்ச ஆளுகள எமதர்மன் ஆளுக ரெண்டு கையும் புடிச்சி ‘வாங்கய்யா வாங்க’ன்னு கூட்டிட்டுப் போயிக் கொதிக்கற எண்ணெய்க் கொப்பரையில வீசுவாகளாம்;பாம்பு புத்துக்குள்ள படுக்கப் போடுவாகளாம்;எரியற தீயில தலைகீழாக் கட்டித் தொங்கவிடுவாகளாம்.
இப்படி எமதர்மன் ‘நல்லாட்சி’ நடத்தி வந்த காலத்துல ஒரு நாளு பெருங்கூத்தாகிப் போச்சாம் எமலோகத்துல.
அந்த வருசம் ஏடு போட்டுப் பாத்ததுல புண்ணியம் பண்ணுனவக ஏழெட்டுப் பேர்தானாம். பாவம் பண்ணுனவக பட்டியல் எடுத்து பாத்தா அது போகுதாம் லட்சக்கணக்குல.
எமதருமருக்கு தல சுத்துது;கூடவே கிரீடமும் சேந்து சுத்துது.
கொப்பர கட்டுபுடியாகுமா எண்ணெ விக்கிற வெலையில?
அத்தன பாம்புகளுக்கு எங்க போறது? நாகலோகத்துல வேற நாலுமாசமாப் பாலுக்கு வெல கூட்டச் சொல்லிப் பசுமடுக வேல நிறுத்தமாம்.
புத்திக்கு ஒண்ணும் எட்டல; யாரை யோசனை கேக்கறது?
சிவபெருமானைக் கேக்கலாம்ன்னா மார்க்கண்டேயன் விவகாரத்துல ஏற்பட்ட மனதாங்கல் இன்னும் தீரல.
விஷ்ணுவப் போய்க்கேட்டு வரலாம்னா நம்ம எருமைக்குப் பாற்கடல் நீந்திப் பழக்கம் இல்ல. பிரம்மாவப் போய்க் கேக்கலாம்னா அந்தாளு எந்த மூஞ்சிய எங்க வச்சிருப்பாருன்னே தெரியமாட்டேங்குது.
ஒண்ணும் புடிபடல எமதருமருக்கு.
பாசக்கயித்துல அவரா முடிச்சிப் போட்டு அவரா அவுத்துக்கிட்டிருக்காரு ரொம்ப நேரமா.
திடீர்னு தம்புராவோட ஒரு பாட்டுக் கேக்குது. நிமிந்து பாத்தா வைகுண்டத்துல வடை சாப்பிட்டுட்டுக் கைலாசத்துக்குக் காப்பி சாப்பிடப் போய்க்கிட்டுருக்காரு நாரதரு.
‘வாய்யா வாய்யா’ன்னாரு எமதர்மரு,
வந்தாரு நாரதரு.
“எனக்கொரு பிரச்சன” இழுத்தாரு எருமைகாரரு.
“என்ன? கள்ளக் கணக்கு எழுதிக் காசு சம்பாரிச்சு இந்திரலோக வங்கியில போட்டு ஏமாத்துறானா சித்ரகுப்தன்?”
“அட அதில்ல நாரதரே. பாவகணக்குப் பண்ணுனவக எண்ணிக்கை கூடிப்போச்சு; எடமில்ல நரகத்துல; என்ன பண்றதுன்னு யோசிக்கறேன்”.
“அட நீங்க ஒண்ணு… இவுகள நரகத்துல தள்ளணும் அவ்வுளவுதானே? நான் பறந்து பறந்து பாத்த அளவுல பூலோகத்துல இந்தியா இந்தியான்னு ஒரு தேசம் இருக்கு. இவுகளப் பூரா அங்க வெவசாயம் பண்ண அனுப்பி வச்சீங்கன்னு வச்சீக்குங்க வேலை முடுஞ்சது.”
“ஆகா ஒம்மக் கட்டித் தழுவணும் போல இருக்கு”ன்னு எந்திருச்சாரு எமதருமரு.
தம்புராவத் தவற விட்டுட்டு ஓடி ஒளிஞ்சு போனாரு நாரதரு.
நாரதர் சொன்ன யோசனப்படி இந்தியாவுல விவசாயம் பண்ண நரகத்துல இருந்து அன்னைக்கு அனுப்பிவைக்க ஆரம்பிச்சது இன்னைக்கு வரைக்கும்
நின்னபாடில்ல.
                            (மூன்றாம் உலகப் போர் - வைரமுத்து)

ஆரம்பத்தில் உதட்டில் புன்னகையை தவழ வைத்த வரிகள் இறுதியில் கண்களை கலங்க வைத்தது.




வெள்ளி, 12 பிப்ரவரி, 2016

உலக வானொலி தினம்..!!






நவீன உலகில் டிவி,மொபைல்,ஸ்மார்ட்போன்.ஐ.பேட் மற்றும் இன்டர்நெட் என பல வழிகளில் தகவல் தொடர்பு சாதனங்கள் அதிகரித்துவிட்ட போதிலும் வெகுஜன ஊடகத்தின் முன்னோடியாக திகழ்வது வானொலி தான்.

இத்தகைய அரிய கண்டுப்பிடிப்பை இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற இத்தாலியைச் சேர்ந்த குலீல்மோ மார்க்கோனி என்பவர் கண்டறிந்தார்.


தகவலை மக்களிடம் விரைவாக கொண்டு சேர்ப்பதில் வானொலியின் பங்கு மிகவும் அளப்பரியதாகும்.இன்று உலகம் முழுவதும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட வானொலி நிலையங்கள் உள்ளன.

முந்தைய காலங்களில் பேரிடர் குறித்த தகவல்கள், போர் அறிவிப்புகள் போன்றவற்றை விரைந்து அளித்தது வானொலி என்றால் அது மிகையாகாது.

அத்தகைய வானொலியின் சிறப்புகள் மற்றும் சேவைகளை மேம்படுத்தும் விதமாக 2012-ம் ஆண்டு ஐ.நாவால் பிப்ரவரி 13-ம் தேதி உலக வானொலி தினம் அனுசரிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.


இத்தினத்தின் நோக்கம் என்னவென்றால் குறைந்த செலவில் தகவல்களை பரப்பி ஒலிபரப்பாளர்களிடையே ஒத்துழைப்பை ஏற்படுத்தி வானொலி வலையமைப்புக்களை ஊக்கப்படுத்துவதே ஆகும்.

வியாழன், 11 பிப்ரவரி, 2016

ஆண்ட்ராய்ட் போனில் தமிழ் தட்டச்சு

                   ’யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்’ - திருமூலர்

எங்கள் வீட்டில் இருப்பது ‘டெஸ்க் டாப்’ கம்ப்யூட்டர். எனவே அதில் தமிழில் தட்டச்சு செய்ய NHM Writer 1.5.1.1 Beta என்ற தமிழ் எழுதியைப் பயன்படுத்தி வருகிறேன். இதிலுள்ள English - Tamil Phonetic முறை எனக்கு எளிதாகவும் இருக்கிறது. ஸ்மார்ட் போன் (ஆண்ட்ராய்ட்) வாங்கிய பிறகு, அதில் தமிழில் தட்டச்சு செய்ய, எந்த தமிழ் எழுதி நல்லது என்று தெரியாமல் இருந்தேன். 

தமிழ் எழுதிகள்:

இது விஷயமாக கூகிளில் தேடியதில், பல்வேறு தமிழ் எழுதிகளைக் காண முடிந்தது. 

Ezhuthani – Tamil Keyboard
Tamil Unicode Keyboard free
Tamil Keyboard
Google Handwriting Input
PaniniKeypad Tamil IME
Sellinam
Tamil Writer
Tamil Pride Tamil Editor
Tanglish – Tamil Editor
Tamil Unicode Font – Donated
Tamil Keyboard Unicode
Type Tamil Offline
Tamil Wrier
Google Indic Keyboard
Types In Tamil
Indic Keyboard

இவற்றைப் பற்றி, நமது வலைப்பதிவு நண்பர்களிடம் விசாரித்ததில், ஒவ்வொருவரும் அவரவர் பயன்படுத்தும் தமிழ் எழுதிகளைத்  தெரிவித்தனர்.

செல்லினம் (Sellinam 4.0.7)


ஒருமுறை புதுக்கோட்டையில் ஆசிரியர் நா.முத்துநிலவன் அவர்களிடம் பேசிக் கொண்டு இருந்தபோது ‘செல்லினம்’ (Sellinam)  பற்றி சொன்னார். நான் உடனே கூகிள் தேடலில் போய் Sellinam 2.0.1 என்ற மென்பொருளை தரவிறக்கம் செய்து கொண்டேன். அது அவ்வளவாக திருப்தி இல்லாத படியினால், மீண்டும் வேறொரு தமிழ் எழுதிக்குப் போனேன். அதுவும் சரிப்பட்டு வராததால், அண்மையில், திண்டுக்கல் தனபாலன் அவர்களிடம் ஆலோசனை கேட்டேன். அவர் செல்போனில், செட்டிங்ஸ் சென்று ஆப்ஸில் செல்லினத்தை (புதியது) தரவிறக்கம் செய்து கொள்ளச் சொன்னார். அவ்வாறே செய்தேன். 


இப்போது எனது ஆண்ட்ராய்டு செல்போனில் இருப்பது Sellinam 4.0.7 என்ற மென்பொருள் ஆகும். இது நன்றாகவே செயல்படுகிறது. இதில் தமிழ் 99 மற்றும் முரசு அஞ்சல் என்று இரு விசைப்பலகைகள் (KEY BOARD) உள்ளன. 

தமிழ் 99 - இதில் தமிழிலேயே தட்டச்சு செய்யலாம்
முரசு அஞ்சல் - இதில் ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு தமிழ் தட்டச்சு செய்யலாம் ( உதாரணம் ammaa > அம்மா)


நான் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு , Phonetic முறையில் தட்டச்சு செய்யும் முரசு அஞ்சல் முறையை பயன்படுத்துகிறேன். இதில் வேண்டும்போது தமிழுக்கும் ஆங்கிலத்திற்குமாக விசைப்பலகையை (KEY BOARD) மாற்றிக் கொள்ளலாம். நான் இப்போது பெரும்பாலும் நேரம் இருக்கும்போது வலைப்பதிவுகளுக்கான தமிழ் கருத்துரைகளையும் மற்ற குறுஞ்செய்திகளையும் (SMS) எனது செல்போன் மூலமாகவே டைப் செய்து அனுப்புகிறேன். மேலும் இந்த செல்லினத்தை ஃபேஸ்புக், வாட்ஸ்அப் ஆகியவற்றிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.


// செல்லினம் என்பது ஒருங்குறியைப் பயன்படுத்தி செல்பேசிகளில் தமிழ் குறுஞ்செய்திகளை அனுப்பும் மென்பொருளாகும்இம்மென்பொருளை மலேசியாவைச்சேர்ந்த முத்து நெடுமாறன் தலைமையிலான முரசு நிறுவனம் உருவாக்கியதுஇதைதைப்பொங்கற் திருநாளான ஜனவரி 152005 முதல் சிங்கப்பூரில் வணிகப் பயன்பாட்டுக்காக வெளியிட்டதுநோக்கியாசாம்சங் போன்ற கருவிகளில் இயங்கிவந்த செல்லினம்பின்னர் ஐபோன்ஐபேடுஆண்டிராய்டில் இயங்கும் கருவிகளுக்கும்அறிமுகப்படுத்தப்பட்டதுதற்போது வரையிலும்ஐம்பதாயிரத்துக்கும் அதிகமானோர்இதை பதிவிறக்கி உள்ளனர். //  ( நன்றி https://ta.wikipedia.org/s/1b3v )

செல்லினம் பற்றிய மேலும் அதிக விவரங்களுக்கு: http://sellinam.com/archives/406
             
                                  (ALL  PICTURES COURTESY: GOOGLE IMAGES)

 நன்றி திரு.தி. தமிழ் இளங்கோ ஐயா. (  http://tthamizhelango.blogspot.com/2016/02/blog-post_11.html)
இந்த பதிவு என் கல்லூரி தோழிகளுக்கு கட்டாயம் உதவும்.

ஊழல் குறைவான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 76-வது இடம்..!!


உலக நாடுகளின் ஊழல் நிலவரம் குறித்து டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்னும் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது.இதில் அந்த நாடுகளின் ஊழலற்ற நிர்வாகம் ,ஊழலுக்கு எதிரான நடவடிக்கையின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படுகிறது.

2015-ம் ஆண்டு இந்த தரவரிசைப் பட்டியல் கணக்கீட்டு 168 நாடுகள் எடுத்துக் கொள்ளப்பட்டன.இதில் 2014-ம் ஆண்டையப் போலவே ஐரோப்பிய நாடான டென்மார்க் ஊழலற்ற நாடாக முதலிடத்தையும்,பின்லாந்துக்கு 2-வது இடமும்,சுவிடனுக்கு 3-வது இடமும் கிடைத்தன.


ஆப்பிரிக்க நாடான சோமாலியாவும்,ஆசியா நாடான வடகொரியாவும் ஊழல் மலிந்த நாடுகள் பட்டியலில் கடைசி 2 இடங்களைப் பிடித்தன.இந்த பட்டியலில்இந்தியாவுக்கு 76-வது இடம் கிடைத்தது.2014-ம் ஆண்டு 85-வது இடத்தில் இருந்த இந்தியா 9 இடங்கள் முன்னேறி இருக்கிறது.


2014-ல் இருந்ததை விட இந்தியாவில் 2015-ல் ஊழல் சற்று குறைந்து காணப்படுகிறது.எனினும் இதில் இந்தியா பெற்றுள்ள மொத்த மதிப்பு 2014-ம் ஆண்டைப் போலவே 100-க்கு 38 ஆக இருக்கிறது.


இது குறித்து டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் தலைவர் ஜோஸ் உகாஸ் கூறுகையில் ஆசிய நாடுகளில் இந்தியா, இலங்கையைப் பொறுத்தவரை ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக தலைவர்கள் அறிவித்த எதிர்ப்புகள் அவ்வளவாக நிறைவேறவில்லை.

முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 2015-ல் 64 நாடுகள் ஊழலை கட்டுப்படுத்துவதில் முன்னேற்றம் கண்டுள்ளன.53 நாடுகள் இதில் பின்தங்கின.மற்ற நாடுகளின் நிலையில் ஏற்ற இறக்கம் எதுவும் இல்லை என்றார். 

Image result for ஊழல்

வரலாற்று நாயகன் சார்லஸ் டார்வின்..!!




சார்லஸ் டார்வின் இவர் பரிணாம வளர்ச்சி சித்தாந்தத்தின் தந்தை எனப் போற்றப்படுபவர்.
இவர் 1809 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ம் நாள் இங்கிலாந்து நகரில் பிறந்தார்.
இவரது தாத்தாவும்  தந்தையும் மருத்துவர்களாக  இருந்ததால் இவரையும் மருத்துவம் படிக்க எடின்பர்க் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைத்தார் இவரது தந்தை.
இவர் மருத்துவம் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு குழந்தைக்கு அறுவை சிகிச்சை  பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.அப்போதெல்லாம் மயக்க மருந்து இன்றி அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டதால் அந்தக் குழந்தை பட்ட வேதனையைக் கண்டும் கேட்டும் மருத்துவத்தின் மீது இருந்த ஆர்வத்தை இழந்தார்.
இது இவரது தந்தைக்கு ஏமாற்றமாக இருந்தாலும் அடுத்த இவர் கேம்ஃப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இறையியல் பட்டம் பெற்றார்.
அப்போது அதே பல்கலைக்கழகத்தில் தாவரவியல் துறையில் பேராசிரியராக இருந்த ஜான் ஸ்டீஃபன் ஹேன்ஸ்லோ என்பவரிடம் நெருங்கிய நட்பு கொண்டார் டார்வின்.
அவர் மூலமாக கேப்டன் ராபர்ட்  என்பவரின் நட்பு இவருக்கு கிடைத்தது.எனவே ராபர்ட் தலைமையில் தென் அமெரிக்க கடலோரப் பகுதியில் ஆய்வு செய்ய செல்லவிருந்த HMS  BEAGLE என் கப்பலில் இவருடன் டார்வினும் 1831-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி தனது ஆய்வு பயணத்தைத் தொடங்கினர்.
ஐந்து ஆண்டுகள் நீடித்த அந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த அந்த பயணம் தான் பரிணாம வளர்ச்சி சித்தாந்தம் உருவாவதற்கு அடிப்படை காரணமாக அமைந்தது.இந்த பயணத்தின்  போது அந்தக் கப்பல் உலகையே ஒரு வலம் வந்தது.
பல இடரும்,இன்னல்கறும் நிறைந்த அந்த பயணத்தில் தான் சேகரித்த விபரங்களையும் ஆய்வுகளையும் வைத்து அவர்  THE VOYAGE OF THE BEAGLE என்ற புத்தகத்தை வெளிட்டார்.
சிறிது நாட்கள் கழித்து பல ஆய்வுக்குப் பிறகு 1859-ம் ஆண்டு உலகையே வியப்பில் ஆழ்த்திய இயற்கையில் உயிரினங்களின் தோற்றம் என்ற புத்தகத்தை வெளிட்டார்.
அடுத்ததாக மனித பரம்பரை 1871-ம் ஆண்டு வெளியானது.இந்த நூலில் மனிதனின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி மிக விரிவாக எழுதியுள்ளார்.
இந்நூல் உராங்குட்டன்,சிம்பான்சி,கொரில்லா போன்ற குரங்குகளுக்கு உள்ள நான்கு கைகளும் ரோமமயமாய் உள்ள ஒரு மிருக பாரம்பரியத்திலிருந்து சீர் பெற்று தோன்றியவனே மனிதன் எனத் தகுந்த ஆதாரங்களுடன் காட்டுகிறார்.
இவருக்கு எழுதுவதில் அதிக ஆர்வம் இல்லை என்றாலும் மொத்ததில் பதினெட்டு நூல்களை எழுதியுள்ளார்.
அவர் கடைசியாக எழுதிய நூல் மனிதனும் மிருகங்களும் தம் உணர்ச்சிகளை வெளியிடும் விதம் என்பதாகும்.
மனிதகுல மூதாதையரின் முகவரியை உலகிற்குக் காட்டிய முன்னோடி அறிவு ஒளியான சார்லஸ் டார்வின் 1882-ம் ஆண்டு ஏப்ரல் 19-ம் தேதி அடங்கிப் போனார்.  









சாலை



கள்ளும் முள்ளுமாக நிறைந்திருந்தேன்;
மண் சாலையாக மாற்றினார்கள்!
மண் சாலையாக இருந்தேன்;
     தார் சாலையாக மாற்றினார்கள்!
தார் சாலையாக இருந்தேன்;
     காங்கிரீட் சாலையாக மாற்றினார்கள்!
இப்படி எல்லாம் மாறினாலும் என்
     மேனி மட்டும் குழிகளாலே நிறைந்துள்ளது!
இது நான் செய்த தவறா? இல்லை
என்னை செய்தவர்களின் தவறா?
                                         
                                                                        இப்படிக்கு,
                                                              கண்ணீருடன் சாலை.

புதன், 10 பிப்ரவரி, 2016

அழகிய காடு..!!



      அந்த அழகிய மாலையில்

முன்னுரை:
ராபட் ப்ராஸ்ட் ஒரு ஆங்கில எழுத்தாளர்.பெரும்பாலும் அவர் கவிதைகளில் அவர் கடந்த அனுபவத்தை பகிர்ந்திருப்பார்.வாழ்க்கையின் இரு பக்கங்களை தெளிவாகக் காட்டுவர்.அவரது அனைத்து கவிதைகளிலுமே முடிவுரையை படிப்பவர் கையில் கொடுப்பார்,ஆனால் இந்த கவிதையில்’’மனிதன் வாழ்வில் கடந்து செல்ல வேண்டிய தொலைவு அதிகம் அதற்குள் அவன் கடமைகளை பூர்த்தி செய்ய வேண்டிம்’’என்று முடிவுரையை கொடுத்திருப்பார்.

கவிஞரின் வியப்பு:

கவிஞர் ராபட் அவரது குதிரையை ஓர் இடத்தில் நிறுத்தினார்.அந்த பனி சூழ்ந்த காடு அவரை வயப்படுத்துகிறது.கண்களை இமைக்காமல் அந்த காட்டின் எழில் கண்டு வியந்து பார்கிறார்.இந்த காட்டினெஉரிமையாளர் அருகாமையில் உள்ள கிராமத்தில் தான் உள்ளார்.இருந்தும் அவர் ஏன் இதை காணவில்லை,ஒரு வழிப்போக்கனாக எனக்கு இந்த வாய்ப்பு கிட்டி இருக்கிறது.



கவிஞரின் குழப்பம்:
இந்த காட்டின் உரிமையாளர் இங்கு கொட்டும் கடும் பனித்துளிகளால் அச்சம் கொண்டிருப்பாரோ?ஆனால்,எனக்கும் என் குதிரைக்கு அந்த பனி ஓர் அழகான காட்சியாகதான் தென்படுகிறது.என் குதிரை அதன் மணியை அடித்து என்னை சுய நினைவிற்கு கொண்டுவர முயற்சி செய்கிறது.என்னை அழைத்து சென்று அதன் பணியை முடிக்க நினைக்கிறது.
                                                    
அழகின் மயக்கம்:
கவிஞர் அந்த காட்டின் அழகில் மூழ்கி இருக்கிறார்.மாலை நேரத்தில் கொட்டும் பனி சூழ்ந்த பசுமையான காடு,ஓர் அரிய காட்சி.ஆனால், அதே நேரம் அந்த நள்ளிரவில் அதிக நேரம் செலவிடுவதில் அர்த்தமில்லை.வாழ்கையில் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் அவருக்கு உண்டு.ஆகையால்,அங்கிருந்து செல்ல முடிவு செய்கிறார்.




காட்சிகளின் உண்மையான அர்த்தம்:
இந்த கவிதையில் கூறப்படுள்ள அனைத்த பொருள்களில் ஓர் அற்தம் உண்டும்.அந்த அடர்ந்த காடு வாழ்கையை பிரிதிபலிக்கிறது(இன்ப,துன்பம்). மாலை நேரம் வாழ்வில் கடந்து செல்ல வேண்டிய தொலைவை காட்டுகிறது. அந்த காட்சிகள் மயக்கம் மரணத்தை பிரதிபலிக்கிறது.

முடிவுரை:
கவிஞர் தனது முடிவுரையில்

‘’வாழ்வில் கடந்து செல்ல வேண்டிய தொலைவிற்குள் கடமைகளை முடிக்க வேண்டும்’’என்ற கருத்தினை ஆழமாக பதிவு செய்கிறார்.