சனி, 6 அக்டோபர், 2018

அன்னைக்குச் சில ஆசை வரிகள்

தொட்டணைத்துத் தூக்கி
தொட்டிலில் போட்டு,
முத்தமெனும் முத்திரையால்
முகத்தினை நிரப்பி,
பாசம் என்னும் இசையினிலே
தாலாட்டுப் பாடி,
கல்வி என்னும் கலையறிய
கல்லூரி அனுப்பி,
அணிகலன்கள் பலபூட்டி
அழகு பார்க்கும்,
அன்பு சிறிதும் குறையாத,
அழகு பொழியும் அன்னையை,
நினைவது தவறும் வரை
நித்தமும் மதித்திருப்பேன்.

நீ

நீ நெல்லாக இரு நெல் உமியாக இருக்காதே...
நீ கைத்தட்டலை பெறுபவனாக இ்ரு கை தட்டுபவனாக இருக்காதே...
நீ பூச்செடியின் வேர்களாக இ்ரு பூவாக இருக்காதே...
நீ பல்கலைகழகமாக இரு அதன் கிளைகளாக இருக்காதே...
நீ எறும்பாக இரு எருமையாக இருக்காதே....
நீ கீரிப்பிள்ளையாக இரு கிளிப்பிள்ளையாக இருக்காதே...
நீ எப்படி இருந்தாலும் நீ நீயாக மட்டுமே இரு... நீ உனக்கென ஒரு எல்லைக்கோட்டை வரையாதே ஏனென்றால் உன் முயற்சிக்கு எல்லையே இல்லையே.....


வெள்ளி, 5 அக்டோபர், 2018

தமிழ் பண்பாட்டுச்சிறப்பு

பட்டில்  தெரியும்  பண்பாடும்,
பொட்டில்  தெரியும்  புன்னகையும்,
மஞ்சளில்  தெரியும்  மங்களமும்,
மலரில்  கமலும்  நறுமணமும்,
தலைகீழாக  நின்றாலும்,
தலைவிரி  கோலத்தில்  தெரிவதில்லை.

வியாழன், 4 அக்டோபர், 2018