வியாழன், 1 செப்டம்பர், 2022
மூஷிக வாகனனே...
பார்வதியின் பையனுக்கு பிறந்தநாளாம் !
பச்சைமண்ணை பிடித்து வைத்து,
அருகம்புல்லை அருகில் நட்டு,
எருக்கு மாலையை தொடுத்து,
மோதகங்கள் படையல் வைத்து,
மூஷிக வாகனனை கொண்டாடுகிறோம் !
இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்..,..
அ.ஹேமா
3 b.com ksrcasw
அரசமரத்து அரசனே 🙏🙏🙏
அரசமரத்து அரசனே
ஆனை முகத்தழகனே
இறையின் முதல்வனே
ஈசனின் புதல்வனே
உலகமே அம்மை அப்பனென உணர்த்தியவனே
ஊழ் வினைகள் தகர்ப்பவனே
என்றும்
நிலையாய் இருப்பவனே
ஏற்றம் என்னுள்
விதைப்பவனே
ஐந்து முகத்தோனே
ஐஸ்வர்யம் தருபவனே
ஒளியின் ஒளியே
ஓங்கார திருவே
ஔடதமானவனே
அஃதே கொள்கினறேன்
எனையாட்கொண்டாள்வாயே....
ச.கலாதேவி
II-Bsc.CS ksrcasw
புதன், 31 ஆகஸ்ட், 2022
ஆனை முகனே
உன் தாயயை
காத்து - உயிர்விட்ட
பாச மகனே
மறு வாழ்வு பெற்ற
ஆனை முகனே
நீ - தெய்வத்தின்
ஆசியின் வழி
முதற்கடவுளாக
காட்சியளிக்கும்
கொழுக்கட்டை பிரியனே...!!!
செவ்வாய், 30 ஆகஸ்ட், 2022
தானமும் தர்மமும்....
தானம் கொடுப்பது
அன்னமே யாயினும்
அங்கத்தை நிறைத்து
இன்பம் பயக்கும்.
தானம் கொடுப்பது
உடையே யாயினும்
மானத்தை காத்து
மனதினில் நிற்கும்.
மறுகை அறியா
மகிழ்ந்து கொடுப்பது
மனித தர்மமே
நம்மை வாழவைக்குமே
பிறர்க்கு உதவுவதை
புகழ் தேட நினைப்பது
புண்ணியமாகாது அது
சுய இன்பமே
தானமும் தர்மமும்
தலைத்தோங்க வேண்டும்
தரணியில் ஈகையாளர்
செழித்தோங்க வேண்டும்
கலாதேவி.ச
II-Bsc Computer Science ... Ksrcasw
சனி, 27 ஆகஸ்ட், 2022
மழை....🌧️🌧️🌧️
வான்முகில் வழங்கும் நீரை
வான்சிறப் பென்று சொன்னார்!
வானமும் பொய்த்து விட்டால்,
வாழ்வது கடின மாகும்!
மாமழை போற்றி னாரே,
மாக்கவி இளங்கோ தாமும்!
நீரது குன்றிப் போனால்,
நிலவுல கென்ன வாகும்?
M.Sanmati
II-BSC Computer Science. Ksrcasw
அன்னை தெரேசா ......
அனாதையாய் இருக்கும் குழந்தைகளின்...
ஆதாரமாக வந்த அன்னையே...
உன் முதுமைப் பருவத்திலும்....
உனது விழிகள் உரங்க வில்லையே...
பாசத்தின் பள்ளி கூடமே...
உன் எல்லை இல்லாத பாசம்....
மழலைகள் மனதில் பல ஆண்டுகள் தாண்டியும்...
நல் உள்ளம் கொண்டு விழுமே....
ச.கலாதேவி
II-Bsc.Computer science Ksrcasw
வெள்ளி, 26 ஆகஸ்ட், 2022
தனிமை
ஒரு வழி தடத்தில் என் பயணம்
தொடங்கிய நிலையில்
இருளின் சிகரத்தில்
ஓர் ஒளி ...!!!
ஓசையின்றி தொடரும்
பயணம் – இக்கணமே
தனிமையின்
இசையில்
வசிக்கின்றது....!!!
திங்கள், 22 ஆகஸ்ட், 2022
ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2022
தனிமையின் கதை
கண்ணெதிரே கலைகள்
அலையில் சிக்கிய
பிடியில்...!!!
என் தடத்தில்
ஓர் கலை
தனிமையின்
கதை... !!!
சனி, 20 ஆகஸ்ட், 2022
தமிழ்
பழ மொழியை
அறியும் கணமும்
ஒரு நொடியும்
மறவா எம்முயிர்
தமிழே...!!!!
என் கவியும்
உன் வழி
மெய்யான நிலையில்
படைப்பானது தான்
இந்நொடியில்...!!!!
வெள்ளி, 19 ஆகஸ்ட், 2022
கவியின் நதி
மெல்லிசையாய் நகரும்
நதியின் இசையே...!!!
அலை அலையாய் - என்
கவியின் இசை
நகரும் வேளையில்
நதியின் முற்றே
கடலின் படைப்பாய்
மாறிய என்
கவிகள்.... !!!
வாழ்க்கை...
கானலாகும் கனவுகளும்..
நிறந்தரமில்லா நிஜங்களும்..
நிறைந்த வாழ்கை இது.......!!!
இழந்தைவைக-ளை கடந்து போவதும்.. நினைத்து மகிழ்வதும் ஏதார்த்தம்..!!!
ஏமாற்றங்களை ஏற்று..
ஏற்றங்களை எளிதாகக் கடந்து...
வாழ்க்கையை வாழ்ந்திடுவோம்...!!!
S. Priya 2nd Bsc.MB ksrcasw
புதன், 17 ஆகஸ்ட், 2022
கற்பனை வண்ணம்
கதையின் விடியல்
என் இருளில்
கற்பனை
வண்ணமாய் ஒளியும்
நொடியும்
இதழின் ஒரு ஓரம்
சிறு புன்னகை...!!!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)