செவ்வாய், 8 நவம்பர், 2022

தவிப்பு

வின் கண்ட நிலவில் 

கணவில் ஒரு பயணம்...!!

நிலையற்ற கால்கள் 

நிலவைத் தேடி 

ஒரு தேடல்....!!! 

உறங்கச் சென்ற விழிகள்... !!

உனைக் காண விளித்தன... !! 

சிறு ஒளியில்

ஒரு விளிப்பு...!!!

நிஜத்தில் கனவாய் 

கறைந்ததேனோ...!!

வியாழன், 22 செப்டம்பர், 2022

இறைவா...🙏🙏🙏


அமைதியை தா, உலகிற்கு  அமைதியை தா!..

பரவட்டும் எட்டுத் திக்கும் அமைதியும், சமாதனமும்...

அன்பே எங்கள் தெய்வம்
அமைதியே எங்கள் ஆயுதம்...

உலகம் புனிதமாகட்டும்
அன்பு உரமாகட்டும்..

சந்தோசமும், 
சமாதானமும் பொங்கி வழியட்டும்...!!

KALADEVI.S
II-Bsc CS  Ksrcasw 

செவ்வாய், 13 செப்டம்பர், 2022

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?...


 
சிறு விதையாயினும்
விருட்சமாய் வளரும்
வித்தை தெரிந்தவள்
நான் விளக்கொடு
எரியும் வீட்டில் பூச்சி
போல வீழ்வேன் என்று
நினைத்தாயோ  சிறு
ஊற்றாயினும் நான் வெள்ளமெனப் பாயும்
வேகம் கொண்டவள் 
வடிந்து ஓடும் வாய்க்கால் போல
வீழ்வேன் என்று 
நினைத்தாயோ சிறு
பெண்ணாயினும் சிங்கமென சீறும்
சிந்தை கொண்டவள்
நான் சிறு கூட்டில்
வாழ்ந்து விட்டு
வானுலகை அடையும்
வண்ணத்துப்பூச்சி போல வீழ்வேன்
என்று நினனத்தாயோ
வாடித் துன்பமிக உழன்று பிறர் 
வாட செயல்கள் 
செய்யாமல் வீழ்ந்து
விடுவேன் என நினைத்தாயோ!....

ச.கலாதேவி
II-Bsc CS  ksrcasw 

ஞாயிறு, 11 செப்டம்பர், 2022

ஒரு வழி தடம்

பயணம் அற்ற

பாதையில்...!!

கதையின் 

சுருக்கமாக 

பயணிக்க பட்ட 

என் கவி

ஒரு வழி

தடமாக....!!

செவ்வாய், 6 செப்டம்பர், 2022

கவி இல்லா இமை

என் இருளின் ஒளியில்

இமையை உறங்க வைத்து...!!!

கவிக்கனவை

காணச் சென்றேன்

வழியில்லா

நொடியில்

கவியின்றி

இமை விழித்தேன்....!!!

குரு

இசையின் ராகம் என்னை

 வீழ்த்தியது... 

இசை வென்று 

நான் நிமிர்ந்தேன் 

ராகம்  கற்று 

அழகிய  இசையில் வென்று...!!! 

ராகம் என்ற கல்வியை

கற்பித்து 

இசையென்னும் 

என் வாழ்வில் 

வென்றேன் 

உன்னால் 

குருவே....!!!

ஞாயிறு, 4 செப்டம்பர், 2022

குடும்பம்

இன்று என் 

தனிமை என்னும்  

நிரமற்ற வண்ணம்

மாயவலையில் சிக்கிய 

பிடியில் மாயமாய் 

மாய்ந்தது... !!!

பலவண்ணத்தின் ஒவ்வொரு 

வண்ணமும்  மழையின் 

இசை ஒலிரும் 

தருணத்தில் 

கண்பறிக்கும் வானவிலாய் 

வானம் என்னும் 

மூன்று குடும்பத்தில்

நிரமற்ற என் வண்ணம்

பலவர்ணமாக 

ஒளித்து... !!!

மழையின் இசை 

இருதியில்  பலவர்ணமே இவளின்

நிரந்திரமற்ற  

தனிமை வண்ணமாக 

மாறிய நிலையில் -

மறு கணம் 

இவ்வழகிய மழையின் 

இசைக்கு

காத்திருக்கின்றது...!!!

சனி, 3 செப்டம்பர், 2022

அண்ணா

என்றும் நிஜத்தின் 

ஒளியில் 

உன்  பாசத்தின் 

அளவை அதிகரிக்க 

என் சிரிப்பை 

மலரச்செய்தாய்...!!!

தண்ணீரின்றி - என் 

பு(பூ)ண்ணகைச் செடியை

வளரும் நிலையில்..!!!

காலத்தின் கட்டாயம் 

இன்று - ஏனோ

ஒளி இருளாய் 

மாறிய நொடில் 

உன்  ஒளியின்றி 

சிதறினேன்...!!! 

இருப்பினும்-  உன் ஒளி 

இருளில் ஒளிக்கும் 

நிலவின் வடிவில் 

என் - அழகிய கனவில் 

இந்நொடியும்

செடியின் 

பு(பூ)ண்ணகையில் 

ஆழகாய் மலர்கிறது என்  சிரிப்பு...!!!

என்றென்றும் ஒளியின் 

வடிவில் 

என் அண்ணன் 

ஒளிரும் தருணத்தில்...!!!

வியாழன், 1 செப்டம்பர், 2022

மூஷிக வாகனனே...



பார்வதியின் பையனுக்கு பிறந்தநாளாம் !

பச்சைமண்ணை பிடித்து வைத்து,

அருகம்புல்லை அருகில் நட்டு,

எருக்கு மாலையை தொடுத்து,

மோதகங்கள் படையல் வைத்து,

மூஷிக வாகனனை கொண்டாடுகிறோம் !

இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்..,..
அ.ஹேமா
    3 b.com ksrcasw 

அரசமரத்து அரசனே 🙏🙏🙏



அரசமரத்து அரசனே 
ஆனை முகத்தழகனே
இறையின் முதல்வனே
ஈசனின் புதல்வனே
உலகமே அம்மை அப்பனென உணர்த்தியவனே
ஊழ் வினைகள் தகர்ப்பவனே
என்றும்
நிலையாய் இருப்பவனே

ஏற்றம் என்னுள்
விதைப்பவனே
ஐந்து முகத்தோனே
ஐஸ்வர்யம் தருபவனே

ஒளியின் ஒளியே
ஓங்கார திருவே
ஔடதமானவனே
அஃதே கொள்கினறேன் 
எனையாட்கொண்டாள்வாயே....


ச.கலாதேவி
II-Bsc.CS  ksrcasw 

புதன், 31 ஆகஸ்ட், 2022

ஆனை முகனே

உன் தாயயை

காத்து - உயிர்விட்ட 

பாச மகனே

மறு வாழ்வு பெற்ற 

ஆனை முகனே

நீ - தெய்வத்தின் 

ஆசியின் வழி 

முதற்கடவுளாக

காட்சியளிக்கும்

கொழுக்கட்டை பிரியனே...!!!

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2022

தானமும் தர்மமும்....



தானம் கொடுப்பது
அன்னமே யாயினும்

அங்கத்தை நிறைத்து
இன்பம் பயக்கும்.

தானம் கொடுப்பது
உடையே யாயினும்

மானத்தை காத்து
மனதினில் நிற்கும்.

மறுகை அறியா 
மகிழ்ந்து கொடுப்பது

மனித   தர்மமே 
நம்மை வாழவைக்குமே

பிறர்க்கு உதவுவதை 
புகழ் தேட நினைப்பது 

புண்ணியமாகாது அது
சுய   இன்பமே

தானமும் தர்மமும்
தலைத்தோங்க வேண்டும்

தரணியில் ஈகையாளர்
செழித்தோங்க வேண்டும்

        கலாதேவி.ச
II-Bsc Computer Science ... Ksrcasw 

சனி, 27 ஆகஸ்ட், 2022

மழை....🌧️🌧️🌧️


வான்முகில் வழங்கும் நீரை
வான்சிறப் பென்று சொன்னார்!
வானமும் பொய்த்து விட்டால்,
வாழ்வது கடின மாகும்!
மாமழை போற்றி னாரே,
மாக்கவி இளங்கோ தாமும்!
நீரது குன்றிப் போனால்,
நிலவுல கென்ன வாகும்?
M.Sanmati 
II-BSC Computer Science. Ksrcasw 

அன்னை தெரேசா ‌‌......



அனாதையாய் இருக்கும் குழந்தைகளின்...

ஆதாரமாக வந்த அன்னையே...

உன் முதுமைப் பருவத்திலும்....
 
உனது விழிகள் உரங்க வில்லையே...
 
பாசத்தின் பள்ளி கூடமே...

உன் எல்லை இல்லாத பாசம்....
 
மழலைகள் மனதில் பல ஆண்டுகள் தாண்டியும்...
 
நல் உள்ளம் கொண்டு விழுமே....


ச.கலாதேவி 
II-Bsc.Computer science   Ksrcasw 

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2022

தனிமை

ஒரு வழி தடத்தில் என் பயணம்

தொடங்கிய நிலையில்

இருளின் சிகரத்தில்

ஓர் ஒளி ...!!!

ஓசையின்றி தொடரும்

பயணம் – இக்கணமே

தனிமையின்

இசையில்

வசிக்கின்றது....!!!

திங்கள், 22 ஆகஸ்ட், 2022

ரணம்

குளிர்ந்த காற்றில்

பற்றி எறியும்

தீயின் மேல்

தளிர்ந்த இலையின்

பசுமை

இன்று அனலில் சிவந்தது என் ??

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2022

தனிமையின் கதை

கண்ணெதிரே  கலைகள் 

அலையில் சிக்கிய 

பிடியில்...!!!

என் தடத்தில்

ஓர் கலை 

தனிமையின் 

கதை... !!!

சனி, 20 ஆகஸ்ட், 2022

தமிழ்

பழ மொழியை 

அறியும் கணமும் 

ஒரு நொடியும் 

மறவா எம்முயிர் 

தமிழே...!!!!

என் கவியும் 

உன் வழி

மெய்யான நிலையில் 

படைப்பானது தான் 

இந்நொடியில்...!!!!

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2022

கவியின் நதி

மெல்லிசையாய் நகரும் 

நதியின் இசையே...!!!

அலை அலையாய் - என்

கவியின் இசை 

நகரும் வேளையில் 

நதியின் முற்றே

கடலின் படைப்பாய் 

மாறிய என் 

கவிகள்.... !!!