வெள்ளி, 21 பிப்ரவரி, 2020

தண்ணீரை சேமிப்போம்


ஆகலாம் அப்துல்கலாம்

இது உன் இளமை காலம்
இனிமை காலமாக இருக்கலாம்
இகழ்ச்சி அதை நீ இன்று ஏற்கலாம்
இழிவுகளை கொன்று புதைக்கலாம்
புகழ்ச்சி அதை மனதில் பதுக்கலாம்
வளர்ச்சி பெற நாளும் உழைக்கலாம்
தோல்வி பல நீ கண்டிருக்கலாம்
முயற்சி பல நீ செய்திருக்கலாம்
தன் உயிரை விட உறவை வளர்க்கலாம்
உயர்ந்த உச்சிகளும் உனக்கு உதிரிப்பூக்கள் ஆகலாம்
நல்லதோர் தலைவன் வேண்டி நாடே
இன்று காத்திருக்கலாம்
நிச்சயம் நீயும் நாளை ஆகலாம் அப்துல்கலாம்.

16.9.19 அன்று தினத்தந்தி நாளிதழில் வெளியான கவிதை.

பொன்மொழிகள்

ஒவ்வொரு துயருக்கும் பொறுமையே தீர்வு

புதன், 19 பிப்ரவரி, 2020

பெரும் பஞ்ச மூலம்

தழுதாழை,பாதிாி, பெருங்குமிழ்,
வாகை, வில்வம் எனும் ஐந்து
 மரங்களின் வோ்களைக் கொண்டு
செய்த கூட்டு மருந்து வகை.

படித்ததில் பிடித்தது

ஒரு அரசியல் வாதி ஒரு முதியவரிடம் 1000 ரூபாய் கொடுத்து எனக்கு வாக்களிக்க வேண்டும் என்றார், அதற்கு அந்த முதியவர் எனக்கு பணமெல்லாம் வேண்டாம் ஒரேயொரு கழுதை மட்டும் வாங்கி கொடுங்கள் போதும் என்றார் அந்த அரசியல் வாதியும் எங்கே எல்லாமும் தேடி பார்த்தார் 10000 ரூபாய் க்கு கீழ் கழுதையே கிடைக்கவில்லை பிறகு அந்த முதியவரிடம் சென்று 10000 ரூபாய்க்கு கீழ் கழுதையே கிடைக்கவே இல்லை என்றார் அதற்கு அந்த முதியவர் என்னுடைய மதிப்பு கழுதைய விட குறைவா என்றார், ஆகையால் நான் என்னுடைய வாக்கை விற்க்க மாட்டேன் என்றார்...