திங்கள், 3 பிப்ரவரி, 2020

எமில்

“எமில் அடொல்ஃப் வான் பெ(ஹ்)ரிங்

பிறப்பு - மார்ச் 15, 1854
இறப்பு - மார்ச் 31, 1917
நாடு - ஜெர்மனி

இவர் தொண்டை அடைப்பான் எனும் கொடூர நோய்க்குத் தடுப்பூசி மருந்து கண்டறிந்த மனிதக் காவலர். உயிர் குடிக்கும் இந்நோய்க்கு அற்புதமான தீர்வைத் தந்ததற்காக 1901-ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான முதல் நோபல் பரிசு எமிலுக்கு வழங்கப்பட்டது” (நோபல் வெற்றியாளர்கள், பாகம் 3, விகடன் பிரசுரம், முதற்பதிப்பு, சூன் - 2009, பக்கம் 10-12)

சிறையில் பிறந்த இலக்கியங்கள்.

திலகர் - கீதை ரகசியம்.
வ.உ.சி - மெய்யறிவு,மனம் போல வாழ்வு.
ராஜேந்ததிர பிரசாத்  - தனது சுயசரிதை.
ஹிட்லர் - மெயின் கேம்ப்.
தாமஸ் பெயின்  - சுதந்திரத்துக்குப் போராட வேண்டும்.
ஒ ஹென்றி   - சிறுகதைகள்..

மலர்களின் இளமைப் பருவம்

அரும்பு
நனை
முகை
மொக்குள்
முகிழ்
மொட்டு

தவிப்பு

சில சமயங்களில்
சிலர்
நம் நலன் கருதியே கூறினாலும்
மனம் ஏற்க மறுக்கின்றது

அம்மா

சுட்டெரித்திடும் சூரியனும் நீ
வளம் தரும் மழையும் நீ
மனதில் விதை விதைத்தவளும் நீ
வாடா மலராக இருப்பதும் நீ
மவுனத்தின் காரணமும் நீ
மகிழ்ச்சியின் காரணமும் நீ
தேவதையின் வடிவமும் நீயே
என் தாயும் நீயே அம்மா