வெள்ளி, 31 ஜனவரி, 2020

வெற்றி

வெற்றி என்பது
மற்றவர்கள் கைவிட்டுவிட்ட பின்பும்
அயராமல் முயற்சியைத்
தொடர்வதால் கிட்டுகிறது.

வியாழன், 30 ஜனவரி, 2020

வில்லிபாரதத்தின் மரபுக் குறிப்பு

மகாபாரதப் பருவங்களில் வில்லிப்புத்தூராரால் எழுதாமல் விடுக்கப்பட்ட பருவங்கள் 8. அவை,
1.ஸ்திரீ பருவம்.
2.சாந்தி பருவம்.
3.அனுசாசன பருவம்.
4.அசுவமேத பருவம்.
5.ஆரம பருவம்.
6.மௌசல பருவம்.
7.மகாப்ரஸ்தான பருவம்.
8.ஸ்வர்க்கா ரோஷண பருவம்.

தனிமரம்

நான் தனி மரம்தான்
பல கிளைகளைப் படைப்பேன்
அதில் பாசத்தைக் கொடுப்பேன்
நேசத்தைச் சோலையாக்குவேன்
நந்தவனச் சொல்லை ஏற்று நாளும்
அதை வளர்ப்பேன்
நல்லதோர் உலகம்
அதை நாளை நான் கொடுக்க உழைப்பேன்.


22.7.19 அன்று தினத்தந்தி  நாளிதழில் வெளியான கவிதை.

குணம்

அறிவு உங்களுக்கு
அதிகாரத்தை வழங்கலாம்
குணம்தான்
மரியாதையைப் பெற்றுத் தரும்

குறுகிய வாழ்க்கை




நாம் ஆசைப்படும் பல விஷயங்கள் கேட்கும்போது கிடைப்பதில்லை
அது நமக்குக் கிடைக்கும்போது தேவையில்லாத ஒன்றாக மாறிவிடுகிறது.
எனவே நாம் வாழும் இந்தக் குறுகிய வாழ்வில் அனைவரிடமும் அன்பாகவும், பிறருக்கு விட்டு கொடுத்து, எதிர்காலைத்தை எண்ணிக் கவலைப்படாமல் இப்போது நம் கையில் உள்ள நிஜமான நிகழ்காலத்தைச் சந்தோசமாக வாழ்வோம்.