சிப்பியின் வயிற்றில் பிறந்த முத்தே
கடல் அலையைத் தழுவி விளையாடி
நிலவின் வடிவம் பெற்ற
மின்னிய ஒலியுடன் கரை சேர்ந்து
நூலுடன் நட்பினால் இணைந்து
பெண்ணின் கழுத்தில் அணிகலனாய்த் திகழ்கின்றாய்
அல்லியைப்போல் முகம் மலர்ந்தது
சிவப்பு ரோஜாவைப்போல் இதழும்
சங்குப் பூவைப்போல் காதுகளும்
முருங்கைப் பூவைப்போல் மூக்கும்
மொட்டுகளைப்போல் இருவிழிகளும்
முத்து மல்லியைப்போல் பற்களும்
மலர் இதழ்களில் விழும் கோடுகளைப்போல் நெற்றியில் வாக்கும்
வண்ணமலர் எல்லாம் பெண்ணின் முகம் ஆகும்
வெள்ளைத் தாமரை விரிந்த முகம்போல நிலவு வந்தது
மேகக்கூட்டம் வானில் படர்ந்து நின்றது
உதிர்ந்த முத்துகள் விண்மீனாய்ச் சிதறின
சுற்றிலும் கார் இருள் சூழ்ந்திருக்க
விண்மீன்கள் கோலம் இட்டிருக்க
இரவு வந்தது புவியை உறங்கவைக்க