ஞாயிறு, 28 ஜனவரி, 2018

உங்களை எது கவரவில்லை?

உங்களை எது கவரவில்லை?
     திரைப்பட வெளியீட்டின் போது, கட்டப்படும் பெரிய பெரிய பதாகைகளும், செய்யப்படும் அபிஷேகங்களும், பல கல்லாரி மாணவர்களின் கட்செவி(what’s up statusநிலை தகவல்களும், என்னை கவரவில்லை. புகழ்பெற்ற நடிகைகள் படங்களுக்கு தடை விழுந்தால், நாடே பொங்கி எழுகிறது. அதற்கு கூடும் கூட்டம் ஏன் ஒரு பொது சமுதாய நலன் கருதி கூடுவதில்லை. மக்களின் இந்த மடிமைத்தனமான எண்ணம் என்னை கவரவில்லை.

``உலகத்திற்க்கே சோறு போட்ட சோழர்களுக்கு வந்த சோதனை” போன்ற மீமிஸ்களை பார்தால் நமக்கு வரவேண்டியது சிரிப்பல்ல சிந்நணை.


உங்களை எது ஊக்குவிக்கும்?

                                                உங்களை எது ஊக்குவிக்கும்?


என்னதான் தன்னம்பிக்கை மேற்கோள்கள் இருந்தாலும், தன்னம்பிக்கை பேச்சாளர்கள் இருந்தாலும், நமது உற்றார் உறவினர்கள் அனைவரும் நம்மை உற்ச்சாகப்படுத்தினாலும், தனி ஒருவன் மனிதல் எது ஒரு தாக்கைத்தை ஏற்படுத்துகிறதோ, அது தான் அவனை முன்னேறச்சொல்லும். அது சில சமயம் நல்ல அனுபவமாக கிடைக்கும், சில சமயம் கசப்பான நினைவுகளாய் அமையும். நம்மை ஒரு வெறியுடன் செயல்பட்டுத்த நம்மை புகழும் மக்களுடன் இருப்பதைக் காட்டிலும் நம்மை இகழுபவைரை நினைவில் வைத்திருக்க வேண்டும். ஏனெனில், புகழ்வோரால் நமக்கு அக்கணம் மனநிறைவு ஏற்பட்டு விடும், ஆனால், இகழ்வோரால் ஒவ்வொறு கணமும் ``நான் அத்தனை இழைத்தவள் அல்ல” என்று நிரூபித்து காட்ட தூண்டும்.

இந்த குடியரசு தினத்தில் புதிய காட்ச்சி

                                                இந்த குடியரசு தினத்தில் புதிய காட்ச்சி



இந்த குடியரசு தினத்தில் 27பெண்கள் கொண்ட எல்லை பாதுகாப்பு பணியாளர்கள், இந்திய வரலாற்றில் முதல் முறையாக ``சீமா பவாணி” என்ற பெயர் கொண்டு ROYAL ENFIELD என்ற இரு சக்கர வாகனத்தில் 16 வகையான களரி விளையாட்டுகளை காட்டினார்கள். அதற்க்கு வானொலி செய்தி பரப்பும்(Broadcasting minister)அமைச்சர் ஸ்மிரிட்டி ஈரானி உள்பட பல அமைச்சர்களும் எழுந்து நின்று அவர்களுக்கு மரியாதை செய்தனர்.

ரோமனானிய வியக்கத்தக்க புகைப்படம்

                                ரோமனானிய வியக்கத்தக்க புகைப்படம்



இனையத்தில் செய்தி படிக்கும்போலும் இந்த ஓவியத்திற்க்கு பின்பு உள்ள பாசமான மகளின் கதை நெகிழ வைத்தது. அதாவது சைமன் என்ற வயதான மனிதன் ஒருமுறை சிறை அலுவலரால் உணவின்றி சாக உத்தரவிட்டிருந்தார். ஆனால், அந்த வயதான மனிதரை பார்க்க அவரது மகள் பேரூவிற்க்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. சில நாட்கள் ஆகியும் அவர் முன்பு போலவே இருப்பதை சிறை அலுவலர் கவனித்தார். பின்பு மறைமுகமாக உண்மையை அறிந்து அனைவரும் ஆச்சரியப்பட்டனர். பேரு(PERO) தனது தந்தைக்கு தாயாக மாறி ஆகாரம் அளித்து பிழைக்கவைத்த்தை அனைத்து அரசவை அதிகாரிகளும் அறிந்து சைமனை அவரது மகளின் பாசத்திற்க்காக விடுவித்தனர்.

புதன், 24 ஜனவரி, 2018

நம்பிக்கை


பசியின்பொழுது உண்டசோறு
தன்தந்தையின் உழைப்பிள்
பாசத்தில்தவித்த பொழுது
தன்தாயின் அரவணைப்பு
கஷ்டம்என்றுவரும்போது
என் நண்பனின் நம்பிக்கை.

சு.சுபத்ரா,
முதலாம் ஆண்டு கணினி அறிவியல் துறை,