புதன், 25 அக்டோபர், 2017

வெற்றி கொடிக்கட்டு


vetri க்கான பட முடிவு

# வெற்றி நம்மை பிறர்க்கு அடையாளம் காட்டும் ...ஆனால் தோல்வி நம்மை நமக்கே அடையாளம் காட்டும்...
# பொதுவாக வெற்றி என்பது மற்றவர்கள் கை விட்டு விட்ட பின்பும் அயராமல் தொடர்ந்து முயற்சிப்பதாலயே  கிடைக்கக்கூடியது...
# பல தோல்விகளை சந்தித்தேன் வெற்றி பெரும்பொழுது எனக்கு கிடைத்த ஒவ்வொரு தோல்வியும் ஒவ்வொரு வெற்றி என அறிந்து கொண்டேன்.........

பாடித்ததில் பிடித்தவை

நேற்றைய இழப்புகளையும் நாளைய எதிர்பார்ப்புகளையும் மனதில் சுமந்து நம்மை அறியாமலே நாம் நமது நிகழ்கால நிம்மதியை இழந்து கொண்டு இருக்கிறோம் என்பதே
எவரும் அறிந்து கொள்ள விரும்பாத எதார்த்தமான உண்மை!!

நிரந்தரம் எதுவுமில்லை என அறிவு உணர்ந்தாலும் மனது அதனை ஏற்க மறுத்து அடங்காத ஆசைகளை அது தனக்குள்ளே சுமக்கிறது!!!
nirandharam க்கான பட முடிவு

செவ்வாய், 24 அக்டோபர், 2017

ஆறிலும் சாவு நூரிலும் சாவு





மகாபாரதத்தில் கர்னனின் தாய் குந்தி தேவி பாண்டவர்களுடன் கர்னனை சேர்ந்து கொள்ளுமாறு கேட்கிறாள் அப்போது" நான் பாண்டவர்களுடன் சேர்ந்து ஆறாவதாக வந்தாலும் எனக்கு சாவு நிச்சயம் .கெளரவர்களுடன் சேர்ந்து நூறாவதாக வந்தாலும் எனக்கு மரணம் தான் ... எனவே செய்நன்றி காரணமாக நான் கெளரவர்களுடனே இருக்கிறேன் "என்று தன் தாய்க்கு மறுமொழி கூறினான் கர்ணன் ...அதாவது ஐந்து பேருடன் ஆறாவதாக சேர்ந்தாலும் மரணம்  நிச்சயம் நூறு பேருடன் சேர்ந்தாலும் தனக்கு மரணம் நிச்சயம்  என்பது தான் இதற்கு விளக்கம்.....
mahabharatham க்கான பட முடிவு

எனது கை

நீ விழுந்த போதெல்லாம் தாங்கிப் பிடிக்கும் இந்தக் கை..

மனம் உடையும்போதெல்லாம் தட்டிக் கொடுக்கும் இந்தக் கை..

தனியே நீ அழும்போதெல்லாம் உன் கண்ணீரைத் துடைக்கும் இந்தக் கை..

அது வேறு யார் கையும் அல்ல.. உன்னுள் உள்ள உனது தன்னம்பிக்கை..

அதை மட்டும் ஒரு போதும் இழந்து விடாதே..!
thannambikkai க்கான பட முடிவு

தினம் ஓர் சிந்தனை

தைரியம் எண்ணற்ற எதிரியை கொன்று விடும்!!!!
ஏழு முறை விழுந்தாலும் எட்டாவது முறை எழு
தவறான பாதையில் வெகுதொலைவில் வந்தாலும் திரும்பிச்செல்!!!
வெற்றியை எதிர்நோக்கும் எண்ணம் இருந்தால் ஒற்றை சிறகிலும் பறக்கலாம்!!!
ஜெயிப்பது எப்படி என்று யோசிக்காதே! தோற்றது எதனால் என்று யோசித்து பார்!!! ஜெயிப்பது நீயாக மட்டுமே இருப்பாய்!!!
thairiyam க்கான பட முடிவு