செவ்வாய், 8 நவம்பர், 2022

*உலகம் என்ற நாடகமேடை..!!*

புலர்கின்ற பொழுதெல்லாம் 
மலர்ந்தாடும் மலர்களென.. !!

மலர்ந்தாடும் மனதினிலே 
உலர்ந்தோடும் நினைவுகள்..!! 

ஒவ்வொரு நாளும் 
ஒவ்வொரு வேடம்..!! 

ஒப்பனைகளை மாற்றியே 
காலங்கள் ஓடும்..!! 

காலங்கள் கொடுக்கும் 
கதாபாத்திர மேற்றே..!!   

சிலநேரம் கோமாளியாய் 
பலநேரம்  ஏமாளியாய்..!!!  


முகமூடியுடன் சிலநேரம் 
முகமூடியற்று பலநேரம்..!!  

நடிக்கின்றோமே *உலகமென்ற* 
*நாடக மேடையில்..!!*

S.KALADEVI  II- Bsc CS   KSRCASW

வெள்ளி, 4 நவம்பர், 2022

வெள்ளி, 28 அக்டோபர், 2022

*குறும்பா*



கற்களின் பதிந்து ...
ஓலையில் வளர்ந்து...
காகிதம் கடந்து...
கணிணியிலும் செழிக்கும் எங்கள் தமிழே...

II- bsc CS  S.Kaladevi ksrcasw

வியாழன், 22 செப்டம்பர், 2022

இறைவா...🙏🙏🙏


அமைதியை தா, உலகிற்கு  அமைதியை தா!..

பரவட்டும் எட்டுத் திக்கும் அமைதியும், சமாதனமும்...

அன்பே எங்கள் தெய்வம்
அமைதியே எங்கள் ஆயுதம்...

உலகம் புனிதமாகட்டும்
அன்பு உரமாகட்டும்..

சந்தோசமும், 
சமாதானமும் பொங்கி வழியட்டும்...!!

KALADEVI.S
II-Bsc CS  Ksrcasw 

செவ்வாய், 13 செப்டம்பர், 2022

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?...


 
சிறு விதையாயினும்
விருட்சமாய் வளரும்
வித்தை தெரிந்தவள்
நான் விளக்கொடு
எரியும் வீட்டில் பூச்சி
போல வீழ்வேன் என்று
நினைத்தாயோ  சிறு
ஊற்றாயினும் நான் வெள்ளமெனப் பாயும்
வேகம் கொண்டவள் 
வடிந்து ஓடும் வாய்க்கால் போல
வீழ்வேன் என்று 
நினைத்தாயோ சிறு
பெண்ணாயினும் சிங்கமென சீறும்
சிந்தை கொண்டவள்
நான் சிறு கூட்டில்
வாழ்ந்து விட்டு
வானுலகை அடையும்
வண்ணத்துப்பூச்சி போல வீழ்வேன்
என்று நினனத்தாயோ
வாடித் துன்பமிக உழன்று பிறர் 
வாட செயல்கள் 
செய்யாமல் வீழ்ந்து
விடுவேன் என நினைத்தாயோ!....

ச.கலாதேவி
II-Bsc CS  ksrcasw