ஞாயிறு, 4 செப்டம்பர், 2022

குடும்பம்

இன்று என் 

தனிமை என்னும்  

நிரமற்ற வண்ணம்

மாயவலையில் சிக்கிய 

பிடியில் மாயமாய் 

மாய்ந்தது... !!!

பலவண்ணத்தின் ஒவ்வொரு 

வண்ணமும்  மழையின் 

இசை ஒலிரும் 

தருணத்தில் 

கண்பறிக்கும் வானவிலாய் 

வானம் என்னும் 

மூன்று குடும்பத்தில்

நிரமற்ற என் வண்ணம்

பலவர்ணமாக 

ஒளித்து... !!!

மழையின் இசை 

இருதியில்  பலவர்ணமே இவளின்

நிரந்திரமற்ற  

தனிமை வண்ணமாக 

மாறிய நிலையில் -

மறு கணம் 

இவ்வழகிய மழையின் 

இசைக்கு

காத்திருக்கின்றது...!!!

சனி, 3 செப்டம்பர், 2022

அண்ணா

என்றும் நிஜத்தின் 

ஒளியில் 

உன்  பாசத்தின் 

அளவை அதிகரிக்க 

என் சிரிப்பை 

மலரச்செய்தாய்...!!!

தண்ணீரின்றி - என் 

பு(பூ)ண்ணகைச் செடியை

வளரும் நிலையில்..!!!

காலத்தின் கட்டாயம் 

இன்று - ஏனோ

ஒளி இருளாய் 

மாறிய நொடில் 

உன்  ஒளியின்றி 

சிதறினேன்...!!! 

இருப்பினும்-  உன் ஒளி 

இருளில் ஒளிக்கும் 

நிலவின் வடிவில் 

என் - அழகிய கனவில் 

இந்நொடியும்

செடியின் 

பு(பூ)ண்ணகையில் 

ஆழகாய் மலர்கிறது என்  சிரிப்பு...!!!

என்றென்றும் ஒளியின் 

வடிவில் 

என் அண்ணன் 

ஒளிரும் தருணத்தில்...!!!

வியாழன், 1 செப்டம்பர், 2022

மூஷிக வாகனனே...



பார்வதியின் பையனுக்கு பிறந்தநாளாம் !

பச்சைமண்ணை பிடித்து வைத்து,

அருகம்புல்லை அருகில் நட்டு,

எருக்கு மாலையை தொடுத்து,

மோதகங்கள் படையல் வைத்து,

மூஷிக வாகனனை கொண்டாடுகிறோம் !

இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்..,..
அ.ஹேமா
    3 b.com ksrcasw 

அரசமரத்து அரசனே 🙏🙏🙏



அரசமரத்து அரசனே 
ஆனை முகத்தழகனே
இறையின் முதல்வனே
ஈசனின் புதல்வனே
உலகமே அம்மை அப்பனென உணர்த்தியவனே
ஊழ் வினைகள் தகர்ப்பவனே
என்றும்
நிலையாய் இருப்பவனே

ஏற்றம் என்னுள்
விதைப்பவனே
ஐந்து முகத்தோனே
ஐஸ்வர்யம் தருபவனே

ஒளியின் ஒளியே
ஓங்கார திருவே
ஔடதமானவனே
அஃதே கொள்கினறேன் 
எனையாட்கொண்டாள்வாயே....


ச.கலாதேவி
II-Bsc.CS  ksrcasw 

புதன், 31 ஆகஸ்ட், 2022

ஆனை முகனே

உன் தாயயை

காத்து - உயிர்விட்ட 

பாச மகனே

மறு வாழ்வு பெற்ற 

ஆனை முகனே

நீ - தெய்வத்தின் 

ஆசியின் வழி 

முதற்கடவுளாக

காட்சியளிக்கும்

கொழுக்கட்டை பிரியனே...!!!