வியாழன், 30 ஜூன், 2022

இலையில் துளி

அலையின் ஒளியில் 
அழகிய கருமேகமோ
கசியும் வண்ணம்...!!! 
துளிக்கும் துளியே
இலையில் விழும் 
கணம் நேறிடுமோ...!!!
வடிவில்லா நீரே
இலையில் மாய்க்கும் 
ஓசையே என் 
செவியில் இசைத்தது... !!
வீசும் தென்றலினால் 
நிலையின்றி உன்னை
(இலை)
வருத்தி நீ (நீர்) விழுவது 
என்னவோ...!!! 
என்  கண்ணின் நீரும் 
இன்று இருளில் 
ஓசையை ரசித்து 
கசிந்தலாயிற்று....!!
Yamini. R  1st B. Sc., CDF ksrcasw

புதன், 29 ஜூன், 2022

*ஒலியின் மாயவர்ணம்..*

குழலின் ஒலிவழி 
கண்ட மாய புனையா ஓவியமே.... !!!
அசிரத்தில் கலந்த 
கணமே  வர்ண ஓவியமாய்
காட்சியளித்தது தான் ஏனோ...!!!
இக்கணமே ஒலியின்றி 
முற்றுகையிட்டே 
சிறையிலடைத்தாயோ ??
உன் வர்ண வடிவில் 
எம்மை...!!!
இவளின் குழலே 
ஒலியின்றி மாய்ந்தது 
உன் வர்ணத்தில்.. !!!
     Yamini. R  1st B.Sc.,CDF ksrcasw

ஞாயிறு, 26 ஜூன், 2022

வாழ்க்கை



அதாவது வாழ்க்கை என்பது காத்தாடி போல..
எண்ணம் என்பது காற்றை போல..
மனம் என்பது நூலை போல..
காற்று(எண்ணம்)நன்றாக வரும் போது தான்..
காத்தாடி (வாழ்க்கை)என்பது உயர தொடங்கும்.!
நூல்(மனம்)ஒரே மாதிரி இருக்க வேண்டும்..
நூல்(மனம்)பின்னால் ஆனால்|| காத்தாடியானது* எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் கூட தாழ்வு அடையும்...*

 கலாதேவி. ச
I b.sc CS  ksrcasw

ஒருவேளை அலையும் கரையும் பேசியிருந்தால்



ஒருவேளை நான் கரை என இருந்திருந்தால் ,

ஒருவேளை நீ அலையென இருந்திருந்தால் ,

ஒருவேளை கார்மேகம் என்னும் தூது புறாவை நான் அனுப்பியிருந்தால்  ,

ஒருவேளை அத்தூதோ என் அன்பெனும் மழையை உன் மீது பொழிந்திருந்தால்  , 

ஒருவேளை என் அன்பு மழையால் உன் மனதின் அலை அதிகரித்திருந்தால் ,

ஒருவேளை அந்த அவையில் ஒன்று என்னை தழுவியிருந்தால் , 

ஒருவேளை அத்தழுவலின் ஈரமோ என் வாழ்வை மாற்றியிருந்தால் , 

ஒருவேளை அலைகள் பெருகி ஓயாமல் நான் நனைந்திருந்தால் , 

ஒருவேளை நீயின்றி நான் இல்லை என்ற நிலை உருவானால் , 

ஒருவேளை அந்த அழகிய வாழ்வை என்னி நிகழ்காலத்தில் நான் வாழ்ந்திருந்தால் , 

நிலை என்னவோ!?..

ஒருவேளை நான் அலையென இருந்திருந்தால் , 

ஒருவேளை நீ கரை என இருந்திருந்தால் , 

ஒருவேளை பகலவனின் ஒளிக்கதிர்கள் உன்னை வாட்டியிருந்தால் , 

ஒருவேளை அத்துன்பத்தை  நீக்கவே என் குளிர் காதலை இரவோனிடம் நான் தூதனுப்பியிருந்தால் , 

ஒருவேளை அத்தூதோ உன்னை இன்பமுறச் செய்திருந்தால் , 

ஒருவேளை அந்த இன்பமே உன்னுள் இருந்த காதலை தூண்டியிருந்தால் , 

ஒருவேளை அக் காதலோ என் வாழ்வை மாற்றியிருந்தால் , 

ஒருவேளை அக் காதலின் தூண்டுதலில் அலையென நான் உன்னை வந்தடைந்தால் , 

ஒருவேளை நீயின்றி நான் இல்லை என்ற நிலை உருவானால் , 

ஒருவேளை அந்த அழகிய வாழ்வை என்னி நிகழ்காலத்தில் நான் வாழ்ந்திருந்தால் , 

நிலை என்னவோ!?...

ஒருவேளை அலையும் கரையும் பேசியிருந்தால் , 

ஒருவேளை அலையும் கரையும் தங்களது முடிவை மேற்கொண்டிருந்தால் , 

ஒருவேளை அம்முடிவே இன்று இப்புவிதன்னில் கடல் கரை என மாறியிருந்தால் , 

ஒருவேளை அந்த அழகிய கடற்கரையில் நின்று இன்று என் எழுதுகோல் இக் கவியை எழுதியிருந்தால் , 

இயற்கையின் மீது காதல் கொள்ள இக் காரனம் போதாதோ!?..❤️

இப்படிக்கு 
இயற்கையின் ரசிகை ரசித்தவை ❤️
கோபிகா ஸ்ரீ குணசீலன்..❣️
 II b.com FMA ksrcasw

தேனியும் மதுரமும்

சிலேடை மொழியாய் இருந்தவள் 
இன்று இரட்டைக் கிளவியாய் மாறினாள்.
கேளாய் மதுரமே!!
சிறுக சிறுக சேமித்தாளோ இனிய மதுரத்தை தன் இதயக் கூட்டில்..
கண் என்னும் கல் பட்டே கூண்டு உடைய 
மதுரம் சொட்ட சொட்ட மனம் உருகி நின்றாளே இன்று!!
சிந்தும் தேனை காத்திட தன் கண் என்னும் கூட்டை தந்தாளே!
உடைந்ததோ மனம்!?
அல்ல உரைந்ததோ!?
புரிந்ததோ இக் கவி!?
கவி மட்டுமே என்றாள் தேனியின் நிலையை
கூறாய் மதுரமே!..❤️

Gopikaa shri. G
II b.com FMA. Ksrcasw