வியாழன், 16 ஜூன், 2022

தந்தையின் கரம்

 கை விட மாட்டான்;என்ற நம்பிக்கையோடு, 

நான் பிடித்த முதல் ஆண்மகனின் கரம்"

என் தந்தையின் கரம்"

   
                                        -    A. Sowndarya 1st B. Com.  KSRCASW

நீரும் சுகம்தான்

 நிறைவற்ற காட்டில் நிறைவூற்ற கசியும் நீரும் சுகம்தான்... !!


                                                                            Yamini. R  1st B.Sc.,CDF  KSRCASW

அப்பா

 உனது கரம்பிடித்து செல்லும் .....

ஒவ்வொரு கரடுமுரடான பாதையும்....!
என் வெற்றியின்
மிக பெரிய பாதைதான் அப்பா......!

                                                                Ramya.m 1st B.sc.,CDF    KSRCASW

கல்வியும் இன்று காசானது

 மனிதர்களைப் படிக்க வைத்த ஏடுகளை...! 

இன்று மடிக்கக் கிழிக்கிறார்கள் 

மளிகைப் பொருளுக்கு, 

"கல்வியும் இன்று காசானது"!!!                 A.Sowndarya 1st B.COM  KSRCASW

புதையல்

 *கொள்ளைபோன கொள்ளையன்!*


உன் கருங்கூந்தற்கடலில்
என் விரல் கப்பலென;

முத்துமணிகளைத் தேடி
உன் கண்மணிகளில்
உன் விழியின் வழியில்
வழிமாற;

உன் கன்னக்குழியின்
கடுஞ்சுழலில் மூழ்க;

கண்டேன்,
கல்நெஞ்சையும் கவரும்
சிவந்த செந்தேன் செவ்விதழும்
அதனுள் செறிந்த முத்துமணியையும்;

புதையலைக் கண்ட புத்துணர்வில்
புத்தழகில் புதையுற புதையுற
பிறைநுதழில் மனம் பிறழ்ந்தேன்!
அச்சிறு நுதழில் அச்சிழந்து
சில்லறையாய் சிதறினேன்!
புதையலைத் தேடிய நான்
அவளழகில் 
புதையலானேன்!

- என் ஆருயிர் நண்பனின் 
மணிச்சொற்கள்                            K.T.Mekanthini  - 2nd English KSRCASW