வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

தாகம்

எனக்கு தாகம் தண்ணீருக்கு மட்டும் அல்ல..
தமிழுக்கும் தான்.....
தாயிடம் தாய்பால் குடித்தபோதே
தமிழ்பாலும் குடித்துவிட்டேன்.....
அவளை அம்மா என்று அழைத்தபோது....
அன்று எப்படி தண்ணீருக்கு பஞ்சம் இல்லையோ அதேப்போல்
தமிழுக்கும் பஞ்சம் இல்லை...
ஆனால் இன்றோ...
தரையில் தண்ணீரும் இல்லை
என் தமிழும் இல்லை...
இரண்டிலும் பஞ்சம் சூழ்ந்துவிட்டது...
காசு கொடுத்து தண்ணீரையும் வாங்கிவிட்டேன்....
காற்றில் என் தமிழயும் பறக்கவிட்டு‌.....
காசு கொடுத்து தமிழில்லா கல்வியையும் பயல்கிறேன்
ஆங்கிலேயர் நம் நாட்டைவிட்டு வெளியேறி பல ஆண்டுகள் ஆனாலும்
அவர்கள் மொழிக்கு அடிமைப்பட்டு....
அதுவே பெரிது என்று கருதி ....
என் தமிழை இழுந்து வருகிறேன் என்பது உறுதி.....
தாய் போன்று மொழியை போற்ற வேண்டும் என்பதற்காக தான் அதை தாய்மொழி என்கிறோம்...
ஆனால் அதை இழந்து வருகிறோம்.....
என் தமிழ் மொழி மட்டுமே அல்ல
அதுவே எங்கள் ஒலி...
அதுனால் தான் என் தாகமாக தமிழ் மாறிவிட்டது....

வியாழன், 29 ஆகஸ்ட், 2019

தனிமை தந்த பதில்

தினமும் நாள் தவறமால் என்னை மட்டும் சந்திக்க வருகிறாயே ஏன்?
தினமும் என்னிடம் மட்டும் சகித்துகொள்ளாமல் இருக்கிறாயே ஏன்?
நான் வேண்டாம் என்று எத்தனையோ
நபர்கள் சென்றுவிட்டன.....
ஆனாலும் என்னுடனே வருகிறாயே ஏன்?
நான் வேண்டியவரே வெறுத்து சென்றுவிட்டனர் நீ மட்டும் வருகிறாயே ஏன் ??
இப்படியெல்லாம் என் தனிமையிடம் கேட்டேன்!!!!
அதுவோ இப்படி பதில் அளித்துவிட்டது!!!!
உன்னிடம் உன்னை தேடி நான் வரவில்லை .....
என்னிடம் புறக்கணிக்கப்பட்டு நீ வந்துவிட்டாய்.......
உன்னை வழி அனுப்ப மனமில்லாமல்
உன் வழியே வருகிறேன் நான் இன்று......