செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

நிலவொளியில் உன்முகத்தைச்
செதுக்கி அதை
விண்வெளியில் பரப்பிவைத்தேன்
இருளொளியில் அது புாிந்த
புன்னகையால்
அந்தச் சூாியனும் வோ்த்ததடி!

உன்னைக் கண்டுமகிழ
எழுந்துவரும்
சூாியனைக் கண்டு
வெட்கி மறைந்தாயோ
என் வெண்ணிலவே?

நீ நட்சத்திரப் பூச்சூடும்
அந்தி மாலையில்
பகலும் மயங்கிக் கரும்
மலையிடையே வீழுமடி!

உன் கண் இமைகளும் பேசுமடி!
காதல் மொழிகளை அள்ளி வீசுமடி!

நின் செவ்விதழில்
நழுவும் தேன் துளியைத்
தென்றல் சிதறடிக்க
உயா் வண்டுகளாய்ப்
பருகினரே எம்புலவா்!
சந்தனத் தேன் அடையாய்ப்
பிறந்ததடி சங்கத் தமிழ்!

களவுக் காதலிலே
பைந்தமிழே நின்
பாா்வைக்கெனக்
காத்திருந்தோா் பலகோடி!

கடலுக்கும் என்னே காதலடி!
இருமுறையும் உனை அணைக்க
முயன்றமையில் தோல்வியம்மா!

ஆழியின்மேல் சினந்தானே வள்ளுவன்
குமாியிலே
கடலும் தாழ்ந்ததடி அவன் காலடியில்!

வாழ்விற்கு இலக்கணமாய் நின்றவளே
நீ வழக்கொழிவாய் என நினைத்தோா்
வாயடைத்துப் போயினரே!

யாா் கண் பட்டமையோ உன்மேல்?
நீ தேய்ந்து
தேகம் இழைத்ததென்ன விந்தையடி!

காதல் கொண்டோா் பிாிவு வாின்
சிறு மணித்துளியும் ஓா் யுகமாம்!
சற்றே பிாிவு வர
சங்குவளை உன் இடையின்
மோதிரமாய் ஆச்சுதோ?
என் செல்வச் சிறுமகவே!

வண்ணக் களஞ்சியமே
நீ வற்றாத ஜீவநதி!
பித்த மொழி பிதற்றும்
ஊராா் அறிவரோ நினதுயா்வை?

இருமணமும் இணைந்துவிடத்
திருமணம்தான் மீதமடி....

நம் கரணம் காணாமல்
என் கண் இமைகள் மூடிடுமோ?

நம் வாழ்வு துவங்கும் முன்
என் வாயில் அாிசி விழுந்திடுமோ?

உலகமெல்லாம் பரவிய உனக்குத்
தோழமையே இல்லையெனில்

பனங்கருக்குக் குதிரையிலே
நான் ஊா்ந்துவர, வரும் குருதி!

குருதிப் புனல் பாயக் கல்லும் கரையுமடி!
கல்லிலோ நீ பிறந்தாய்?
உன் கருவறையோ கனியமுதம்!

ஊா் அறியாத் திருமணமோ யாம் செய்வோம்?
கந்தருவம் வடபுலத்துப் பெரும் பழக்கம்

உலகோா் மலா் தூவ!
உள்ளம் இணையுமடி!
உயிாிலே நாம் கலப்போம்!

இன்பத்தை நீ அளிக்க
உறு பொருளினை யான் தேடி
அறத்திலே நாம் நின்றிடுவோம்!

- இது தமிழ்க் காதல்

திங்கள், 26 ஆகஸ்ட், 2019

தனிமரம்

நான் தனிமரம்தான்
பல கிளைகளைப் படைப்பேன்
அதில் பாசத்தைக் கொடுப்பேன்
நேசத்தைச் சோலையாக்குவேன்
நந்தவனச் சொல்லை ஏற்று நாளும் 
அதை வளர்ப்பேன்
நல்லதோர் உலகம்
அதை நாளை நான் கொடுக்க உழைப்பேன்

பவித்ரா 
மூன்றாமாண்டு கணினிப் பயன்பாட்டியல்

குறிப்பு: “தினத்தந்தி” நாளேட்டின் 22.07.2019-ஆம் தேதியிட்ட பதிப்பில்  “மாணவர் ஸ்பெஷல்” என்னும் பகுதியில் இக்கவிதை இடம்பெற்றது. 

இளங்கலை இரண்டாமாண்டு மாணவர்களின் அரிய படைப்பு


மாணவர்களும் அவர்களுக்கு ஆலோசகர்களாக விளங்கும் பேராசிரியர்களும்:

அம்மா

என்னைச் சுவாசிக்க
வைத்தவளுக்கு...
நான் வாசித்த முதல் கவிதை
அம்மா...

அதில் அவள் பெற்ற
ஆனந்தத்தை என்றும்
நான் கொடுக்க  வேண்டும்
என்று நினைக்கிறேன் 

ம.ஆர்த்தி
முதலாமாண்டு கணிதம்

குறிப்பு: “தினத்தந்தி” நாளேட்டின் 29.07.2019-ஆம் தேதியிட்ட பதிப்பில் “மாணவர் ஸ்பெஷல்” என்ற பகுதியில் இக்கவிதை இடம்பெற்றது.