ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

புதுமைப் பெண்

மலர்களில் இதழ்களைப் போல
ஒவ்வொரு பருவ நிலையிலும்
 உதிர்ந்தது என் கனவு,
சோர்வடைந்த பெண்ணாய்          திகழவில்லை
வீழ்ச்சியும் எழுச்சியும் கொண்ட
பெண்மையின் நற்குணத்தின் நறுமணத்தோடு திகழும்
பாரதியின் புதுமைப் பெண்                                    

சனி, 29 செப்டம்பர், 2018

வெள்ளி, 28 செப்டம்பர், 2018

நீ யார்

குழந்தையாக பிறந்தேன்
சிறுமியாக  வளர்ந்தேன்
மாணவியாக பயனிக்கிறேன்
ஒரு சிறந்த செய்தியாளராக
உருவெடுத்து பெண் என
பெருமிதம் கொள்ள .....
இதுவே நான் !!!

சூழ்நிலைக் கைதிகள்


சூழ்நிலையில் சுயநினைவை          இழந்த மானிடப் பிறவியே கட்டாயத்தின் அடிப்படையில்  
உன்னை தாங்கிக் கொண்டிருக்கும்
பூமித்தாய் தன் அகங்காரத்தில்
உன்னை எரிக்க முயன்றால்
மண்ணில் வந்த நீ மண்ணாகி விடுவாய்.....உன்னால் அவளை போற்ற இயலவில்லை என்றாலும் அவளை அழிக்க முயலாதே
அதன் பின்விளைவு உன் மரணம்!
                     

வன்கொடுமை

விதையாய் விதைத்து
மரமாய் வளர்ந்தது
பெண் விடுதலை அல்ல
விதைத்து மரமாய் வளர்ந்தது
பெண் வன்கொடுமை
நாகரிகத்தோடு வளர்ந்த சமூகம்
ஏன் நாகரிகம் இழந்து
பெண்ணை தீமை என்னும்
தீயால் துன்புறு செய்கிறது
கேள்விகளுக்கு விடை இன்றி
தவிக்கும் பெண்ணினம்