செவ்வாய், 11 செப்டம்பர், 2018

எதுவும் நன்மையே

வாழ்க்கையில் தள்ளிவிட்டவர்களை என்றும் மறக்காதிர்கள்
ஏன் என்றால் வாழ்க்கை கூட ஒரு ஊஞ்சல் போல்தான்
பின் இருந்து ஒருவர் தள்ளிவிட்டால் தான்
நாம் முன் உயர்ந்து வானில் பறக்கமுடியும்

திங்கள், 10 செப்டம்பர், 2018

கிராமம் அது சொர்க்கம்



எங்களின் கிராமத்து வாழ்க்கை மிகவும் அழகானது...

சேவல் கூவும் சத்தத்தில் தான் அந்த நாளின் யுத்தம் தொடங்கும்...

எட்டாத வேப்ப மரத்தை எட்டிப் பிடித்து.. வேப்பங்குச்சி ஒடித்து பல் விலக்கும் காட்சி...


காலையிலே அப்பாவுக்காய் அம்மா ஆசையோடு போடும் நாட்டுச் சக்கரை டீ..


மாட்டுச் சாணம் அள்ளுவதில் இருக்கும் மனமகிழ்வு...

தண்ணீர் கலக்காத சத்தான பாலை மக்களுக்கு தரும் மாண்பு...

லாபமென்றாலும் செயற்கை உரமெனும் விஷத்தை தாயின் மடியிலே தெளிக்க மாட்டேன் எனும் விவசாயி.‌.

சந்தைக்கு போகும் அவசியமில்லை..
காய்கறிகளெல்லாம் எங்கள் தோட்டத்தில் விளைவதனால்...

மருத்துவர் தேவையில்லை ஏனென்றால் பாட்டிகள் எங்களுடன் இருக்கிறார்கள்...

சத்து மாத்திரைகள் தேவையில்லை.
அதைவிட சத்தான கீரைகள் எங்கள் மண்ணிலே விளைகின்றன...

ஆரோ தண்ணீரை விட ஆரோக்கியமான தண்ணி எங்கள் ஆற்றுத் தண்ணீர்...


 அனைத்து உணவும் பிறருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதால் குளிர்சாதனப் பெட்டிகளுக்கு வேலை இல்லை...

வீட்டைச் சுற்றியும் மரங்கள் இருப்பதால் நாங்கள் மறந்து கூட ஏசியை ஓசியில் தந்தாலும் வாங்குவதில்லை..‌.

 அண்டை வீட்டாரிடமும் அயல் வீட்டாரிடமும் முகம் கொடுத்து பேசுவதனால் அதிக நேரம் முகநூலில் முகம் பதித்து கிடையாது...

தெருவுக்கு நான்கைந்து பாட்டிகள் இருப்பதால் எங்கள் கிராமங்களில் சிசிடிவி க்கும் வேலையில்லாமல் போனது...

உண்மையிலே கிராமத்து வாழ்க்கை மிகவும் அழகானது..

பணம் காசு சொத்து சுகம் எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்ளலாம்..

முடிந்த வரை கிராமத்து வாழ்க்கையை வாய்ப்பிருக்கும் போதே அணுபவித்துக் கொள்ளுங்கள்.

கிராமங்கள் நாட்டின் முதுகெலும்பு...
முறித்து விடாதீர்கள்....

தீதும் நன்றும் பிறர் தர வாரா...

நாம் ஒரு செயலிலோ அல்லது போட்டியிலோ வெற்றி பெற்று விட்டோம் என்றால் அந்த வெற்றிக்கு நான் இப்படி பன்னேன் அதனால் ஜெயிச்சுட்டேன்.
நான் அப்படி பன்னேன் அதனால் ஜெயிச்சுட்டேன் என்று அந்த வெற்றிக்கு நாம் தான் காரணம் என மார்தட்டி பெருமைப் படுகிறோம்...

இதுவே தோல்வியைத் தழுவி விட்டோம் என்றால் அதனால் தான் நான் ஜெயிக்கல இதனால் தான் நான் ஜெயிக்கல அவுங்க இப்படி பன்னிட்டாங்க இவுங்க இப்படி பன்னிட்டாங்க என அந்த தோல்விக்கு காரணமாய் பிறரைக் காட்டுகிறோம்...


அது எப்படி நம் வெற்றிக்கு நாம் காரணமாய் இருக்கும் போது நம்முடைய தோல்விக்கு மட்டும் பிறர் காரணமாய் இருப்பார்கள்.....

தீதும் நன்றும் பிறர் தர வாரா...

நா காக்க



சில நேரங்களில் நாம் நம்மை அறியாமல் செய்த சின்னஞ்சிறு செயல்கள் கூட பிறரை மிகவும் காயப் படுத்தும்...

விளையாடிக் கொண்டிருந்த இரண்டு குழந்தைகளுக்கு இடையில் சண்டை வந்துவிட்டது...
அந்த சண்டையின் உச்சகட்டமாக ஒரு குழந்தை இன்னொரு குழந்தையிடம்.. நான் தான் நம்ம அம்மா அப்பா பெற்ற பிள்ளை நீ தத்துப் பிள்ளை என்கிறது...

இதைக் கேட்டுக் கொண்டிருந்த அந்த குழந்தை வேதனைப் படவும் இல்லை..
வருத்தப்படவும் இல்லை...

பெருமிதத்தோடு சொல்கிறது..

பெத்த பிள்ளைக்கும் தத்துப் பிள்ளைக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா....

பெற்ற பிள்ளை என்றால் கருப்பையில் வளர்ந்தவர்கள்..

தத்துப் பிள்ளை என்றால் இதயத்தில் வளர்ந்தவர்கள்..

என்று கூறியது...

அந்த குழந்தை இந்த வார்த்தைகளை மனதார சொல்லியிருந்தாலும் கூட அந்த மழலையின் அடிமனதில் அது கடினத் தன்மையையும் ஏக்கத்தையும் அல்லவா ஏற்படுத்தியிருக்கும்...

பிறர் மனதை காயப்படுத்தாமல் பேசுபவர் யாரோ அவரே பிறரால் மதிக்கப் படுவார்கள்.
நேசிக்கப் படுவார்கள்...

நா காக்க...

போராடி வெற்றிநடை போடு

வாணம் தொடலாம் வா நண்பா
வின்விலி செல்லலாம் வா நண்பா
நம்மால் முடியாதது என்ன இருக்கு
என்றும் எதிலும் வெற்றி நமக்கு
உச்சம் தொடும் வரை உறுதியோடு  போராடுவோம்
வா நண்பா உடைந்தாலும் இறுதிவரை போராடுவோம்
தோல்வவியோடு கைகோற்றுகொள்வோம்
அவமானங்களோடு உரையாடிக் கொள்வோம்
அச்சத்தை அப்படியே விட்டுச் செல்வோம்
வெற்றியை நோக்கி ஓடுவோம்
தோற்றாலும் புண்ணகித்தே தோற்றுவிடுவோம்
இறுதியில் திரும்பி பார்ப்போம்
நாம் போராடி வெற்றிநடை போட்டு வந்த பாதையை


வெள்ளி, 7 செப்டம்பர், 2018

கனவு சிதறல்கள்

சிறுவயதில் இருந்தே நம்முள் பல கனவுகள் சிறகடித்து கொண்டிருகின்றன ...ஆனால் அக்கனவுகள் எதனை பேருக்கு நிஜமாகின்றன ? ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கனவுகள் ...".நான் கலெக்டர் ஆவேன்", என்று ஏழு வயதில் சொன்ன அதே குழந்தை பத்து வயதில் "நான் என்ஜினியருக்கு படிக்கபோகிறேன் "என்று கூறுகிறான் ...ஆனால் கடைசியில் அவன் படித்தது என்னவோ  ஆசிரியர் பணிக்கு தான் ...பெற்றோர்களின் வற்புறுத்தல்களும், சில குடும்ப சூழ்நிலைகளும்,இந்த சமூகத்தில் நடப்புகளுமே ஒரு மனிதனின் எதிர்காலத்தை நிர்ணகிக்கின்றன தவிர அந்த மனிதன் தன்னுடைய எதிர்கால கனவை நோக்கி சரியாக பயனிப்பதுயில்லை ...பிடித்தது கிடைக்காமல் போக படித்ததிற்கு ஏற்ற வேலை பார்த்து கொண்டிருப்பவர்களின் மனதில் கண்டிப்பாக அவர்களின் கனவு வேட்கை கனன்று கொண்டே தான் இருக்கும் ...இதனால் அவர்களின் வருங்கால சந்ததிகளிடம் தங்களுடைய ஆசைகளை துணிக்க ...அதுவே சங்கலிதொடராய்  நீண்டு பலருடைய கனவுகள் கேள்விகுறியாகுகின்றன.....இதனால் பாதிக்கபடுவது தனி மனிதன் மட்டுமல்ல  இந்த ஒட்டுமொத்த சமூகமும் தான் .

மரணத்தின் கைபிடியில்


மரணம் -அனைவருக்கும்  நிகழ்வது சாதாரணமே ....ஆனால் பல பேருக்கு பல மரணங்கள் சாதரணமாக நடைபெறுவதில்லை அதற்கு காரணம் விதியல்ல  நம்முடைய செயல் தான் என்பது பலபேருக்கு தெரியும் இருந்தும் நாம் அவற்றைப்பற்றி கவலை படவில்லை ....ஏனெனில் இன்றைய அவசர உலகில் கடிகார முள்ளின் பின்னாடியே ஓடிக் கொண்டிருக்கும் மனிதர்களாகிய நமக்கு ஒரு நிமிடம் நின்று ,நிதானமாக  சிந்திக்க கூட வாய்ப்பு இருப்பதில்லை ...காலையில் எழுந்தவுடன் அவசரமாக புறப்பட்டு வேலைக்கு சென்று இரவு வெகு நேரம் கழித்து களைத்து வீடு திரும்புகிறோம் ....மறுபடியும் அடுத்த நாளும் அதே ஓட்டம் ....மனைவி ,குழந்தைகள்,பெற்றோர்கள், நிம்மதி ,ஆரோக்கியம் என நமக்கு இன்றியமையாத எல்லாவற்றியும் இழந்து விட்டு இறுதியில் நம்முடைய வாழ்கையையும் எதோ ஒரு கட்டத்தில் தொலைய விட்டுவிடுகிறோம் ......பிறர்க்காக ஏதும் செய்யாமல் நமக்காக ,நம்முடைய சுயநலத்திற்காக போராடிகொண்டிருப்போம்...
நம்முடைய  வாழ்கையில் , நம்முடைய வருங்கால சன்னதிகளுக்காக புண்ணியத்தை சேர்க்காமல் ,நிறைய சொத்து  சேர்த்து வைத்து நம்முடைய வாழ்க்கையை தொலைத்து விடுகின்றோம் .... இறுதியில் மரணத்தின் தருவாயில் சிக்கித் தவிக்கும் பொழுது  நாம் நினைப்பது நம்முடைய வாழ்கையில் என்ன சாதித்தோம்  ! யாருக்கு என்ன செய்தோம் !!!    மரணிக்கும் தருவாயில் நல்லதை நினைக்கும் நாம் ஏன் நலமாக இருக்கும் பொழுது நினைப்பதில்லை .....